Category: Tamil Worship Songs Lyrics

  • Senaigalin Devan Nammodu சேனைகளின் தேவன் நம்மோடு

    சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
    நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

    எரிகோ போன்ற சோதனைகள்
    எதிரிட்டு வந்தாலும்
    தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
    ஜெயத்தைத் தந்திடுவார்

    சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
    பாக்கியம் அடைந்திடுவாய்
    உயர்த்திடுவார் தாங்கிடுவார்
    நன்மையால் நிரப்பிடுவார்

    ஆவியின் வரத்தை தந்திடுவார்
    ஆவியை பொழிந்திடுவார்
    விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
    சீயோனில் சேர்ந்திடுவாய்

    சபையோரே நாம் எழும்பிடுவோம்
    வசனத்தைப் பிடித்திடுவோம்
    வென்றிடுவோம் சென்றிடுவோம்
    ஊழியம் செய்திடுவோம்


    Senaigalin Devan Nammodu Lyrics in English

    senaikalin thaevan nammodu irukkintar
    nallavar avar vallavar ataikkalamaanavar

    eriko ponta sothanaikal
    ethirittu vanthaalum
    thakarththiduvaar norukkiduvaar
    jeyaththaith thanthiduvaar

    senaiyin karththarai nampiduvaay
    paakkiyam atainthiduvaay
    uyarththiduvaar thaangiduvaar
    nanmaiyaal nirappiduvaar

    aaviyin varaththai thanthiduvaar
    aaviyai polinthiduvaar
    virainthiduvaay elumpiduvaay
    seeyonil sernthiduvaay

    sapaiyorae naam elumpiduvom
    vasanaththaip pitiththiduvom
    ventiduvom sentiduvom
    ooliyam seythiduvom

  • Senaigalai Elumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்

    சேனைகளாய் எழும்பிடுவோம்
    தேசத்தை கலக்கிவோம் – புறப்படு
    இந்தியாவின் எல்லையெங்கும்
    இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
    புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

    1.பாதாளம் சென்றிடும்
    பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
    பட்டணங்கள், கிராமங்களில்
    கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா

    1. உலக இன்பம் போதுமென்று
      பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
      பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
      வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
    2. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
      அறியாயோ மகனே..
      பயிர்கள் முற்றி அறுவடைக்கு
      தயாராக உள்ளது தெரியாதா மகளே..
    3. இயேசு நாமம் தெரியாத எத்தனையோ
      கோடிகள் இந்தியாவிலே
      இன்னும் சும்மா இருப்பது நியாயம்
      இல்லையே தம்பி இன்றே புறப்படு
    4. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
      இதயங்கள் லட்சங்கள் உண்டு
      உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
      வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

    புறப்பட்டோம் புறப்பட்டோம்
    தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
    சேனைகளாய் எழும்பிடுவோம்
    தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் (2)
    இந்தியாவின் எல்லையெங்கும்
    இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் (2)


    Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம் Lyrics in English
    Senaigalai Elumbiduvom
    senaikalaay elumpiduvom
    thaesaththai kalakkivom – purappadu
    inthiyaavin ellaiyengum
    iyaesa naamam solliduvom – purappadu
    purappadu purappadu thaesaththai kalakkiduvom purappadu

    1.paathaalam sentidum
    parithaapa manitharkalai thadukka vaenndaamaa
    pattanangal, kiraamangalil
    kattappatta manitharkalai avilkka vaenndaamaa

    1. ulaka inpam pothumentu
      paralokam maranthavarkal paarvaiyataiyanum
      paavasettilae moolki panaththirkaaka
      vaalpavarkal mananthirumpanum
    2. aruvataiyo mikuthi aatkalo kuraivu
      ariyaayo makanae..
      payirkal mutti aruvataikku
      thayaaraaka ullathu theriyaathaa makalae..
    3. Yesu naamam theriyaatha eththanaiyo
      kotikal inthiyaavilae
      innum summaa iruppathu niyaayam
      illaiyae thampi inte purappadu
    4. valitheriyaa aadukal thoynthu pona
      ithayangal latchangal unndu
      unnmai theyvam ariyaathu kurudarkalaay
      vaalpavarkal kotikal unndu

    purappattaோm purappattaோm
    thaesaththai kalakkidavae purappattaோm
    senaikalaay elumpiduvom
    thaesaththai kalakkidavae purappattaோm (2)
    inthiyaavin ellaiyengum
    Yesu naamam sollidavae purappattaோm (2)

  • Semmariyin Virunthukku Alaikkapetror செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர்

    செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்

    அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க – 2

    இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன

    உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன – 2

    உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் – 2

    உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

    வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே

    வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே – 2

    எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே – 2

    உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

    உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே

    இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே – 2

    மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே – 2

    மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே


    Semmariyin Virunthukku Alaikkapetror Lyrics in English
    semmariyin virunthukku alaikkappettaோr paerupettaோr

    avvirunthai unntida sentiduvom inpam ponga – 2

    iraivan tharum virunthithu athai unnnath thataiyenna

    uraiya varum iraivanai naam aerkath thataiyenna – 2

    ullak kathavu thiranthathu athan ullae vaaluvaay – 2

    uvakai ennum oli konarnthu emmai aaluvaay

    vaanam poliya poomi vilaiya valamum pongumae

    valamae varum oliyaal solai malarum engumae – 2

    enthan unavaay nee vanthaalae inpam thangumae – 2

    unthan arulai vithaiththaal intha ulakam uyyumae

    ulakam ellaam innaivathu un ullam ontilae

    iyarkai niraivu kolvathu un seyalin pannpilae – 2

    manitha ullam makilvathu un punitha uravilae – 2

    maraiyum vaalvu malarvathu un makilvin pangilae

  • Selvoem Vaareer Iyaesu Paeril செல்வோம் வாரீர் இயேசு பேரில்

    செல்வோம் வாரீர் இயேசு பேரில்
    பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
    அணி அணியாய்க் கூடிவந்து
    துதி செலுத்திச் செல்வோமே செல்வோமே!

    1. ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
      கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2
      கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2
      நடுவானில் பகல் முழுதும் நின்றதே
      செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
    2. சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
      இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2
      இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2
      வல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே
      செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
    3. முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
      அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே – 2
      நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே – 2
      வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
      செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!

    Selvoem Vaareer Iyaesu Paeril Lyrics in English

    selvom vaareer Yesu paeril
    paaril ullor aasai kolla
    anni anniyaayk kootivanthu
    thuthi seluththich selvomae selvomae!

    1. aelae naalil eriko kottaை kutai sarinthu veelnthathae
      kol atiyil sengadalum iranndu pirivaay nintathae – 2
      kipiyon maelae sooriyanum aayalonil ampuliyum – 2
      naduvaanil pakal muluthum nintathae
      selvomae! selvomae! selvomae!
    2. samuththiram puranndu vanthaal Yesu kathavataiththuth thaaliduvaar
      itikkum minnal olikkum avarae valivakuththuth thanthiduvaar – 2

    iraasikalai athinathin kaalaththilae varappannnuvaar – 2
    vallavar nam naduvil vanthaar – selvomae
    selvomae! selvomae! selvomae!

    1. mukil ulaavum imayam thottu alai iraiyum kumari varai
      anni anniyaay Yesuvin geel ooliyaraaych selvomae – 2
      neelavaanil kaattinootae siluvaikkotiyai aettiyae – 2
      vaalka Yesu naamam vaalka enpomae!
      selvomae! selvomae! selvomae! -selvomae!
  • Selvam Gnanam Ithu செல்வம் ஞானம் இது

    செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
    ஐஸ்வரியம் சௌந்தர்யம்
    இது எல்லாமே நீர் தந்தது
    தந்தவரே திருப்பி தருகிறோம்
    உம்மையே உயர்த்துகிறோம்

    1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
      அதை நான் அறிவேன் ஐயா
      உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
      அதை நான் அறிவேன் ஐயா
      பரலோகம் நிரம்பனும்
      பாவி மனம் திரும்பனும்
      அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
    2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
      அதை நான் அறிவேன் ஐயா
      நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
      அதை நான் மறவேன் ஐயா
      பரிசுத்தமாய் வாழனும்
      உங்க முகம் பாக்கணும்
      பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

    Selvam Gnanam Ithu Lyrics in English
    selvam njaanam ithu ellaamae neer thanthathu
    aisvariyam sauntharyam
    ithu ellaamae neer thanthathu
    thanthavarae thiruppi tharukirom
    ummaiyae uyarththukirom

    1. um raatchiyam kattavae selvam thantheerae
      athai naan arivaen aiyaa
      um vaarththai sollavae njaanam thantheerae
      athai naan arivaen aiyaa
      paralokam nirampanum
      paavi manam thirumpanum
      atharkaay ennaiyae thanthaen aiyaa
    2. enakkullae naanalla neer thaanae vaalkirireer
      athai naan arivaen aiyaa
      naan vaalum sareeramae neer vaalum aalayam
      athai naan maravaen aiyaa
      parisuththamaay vaalanum
      unga mukam paakkanum
      parisuththamae enthan vaanjai aiyaa
  • Selluvoem Naam Onraaka செல்லுவோம் நாம் ஒன்றாக

    செல்லுவோம் நாம் ஒன்றாக

    1. செல்லுவோம் நாம் ஒன்றாக தேசமெங்கிலும்
      இரட்சிப்பின் செய்தியை சுமந்து செல்லுவோம்
      மீட்பின் செய்தி அறிந்திடா மக்கள் மத்தியில்
      இயேசு நாமம் அறிவிக்க செல்வோம்.

    இயேசுவை நாம் வாழ்த்தி பாடுவோம்
    இயேசு நாதனை நாம் வாழ்த்தி வணங்குவோம்
    இயேசு நமது இரட்சகர் இயேசு நமது சிநேகிதர்
    இயேசுவே ஆண்டவர் என்று கூறுவோம்.

    1. கஷ்ட நஷ்டம் ஏராளம் வந்த போதிலும்
      கஷ்டம் ஏற்ற கர்த்தர் என்றும் காத்து இரட்சிப்பார்
      கர்த்தரை நோக்குவோம் அவர் பின்னே செல்வோம்
      கர்த்தரே நம் நம்பிக்கை என்றும்
    2. பாவ உலகில் வந்த நல்ல இயேசு நாதனை
      பாரில் எல்லோர் ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம் இன்றே நாம்
      பாடுகள் ஏற்றும் நாம் பாருக்குள் சென்றே
      இயேசுவுக்காய் சாட்சி பகருவோம்

    Selluvoem Naam Onraaka Lyrics in English
    selluvom naam ontaka

    1. selluvom naam ontaka thaesamengilum
      iratchippin seythiyai sumanthu selluvom
      meetpin seythi arinthidaa makkal maththiyil
      Yesu naamam arivikka selvom.

    Yesuvai naam vaalththi paaduvom
    Yesu naathanai naam vaalththi vananguvom
    Yesu namathu iratchakar Yesu namathu sinaekithar
    Yesuvae aanndavar entu kooruvom.

    1. kashda nashdam aeraalam vantha pothilum
      kashdam aetta karththar entum kaaththu iratchippaar
      karththarai Nnokkuvom avar pinnae selvom
      karththarae nam nampikkai entum
    2. paava ulakil vantha nalla Yesu naathanai
      paaril ellor aettukkolla jepippom inte naam
      paadukal aettum naam paarukkul sente
      Yesuvukkaay saatchi pakaruvom
  • Seitrilirunthu Thuki Yeduthar சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

    சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
    கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
    எந்தன் இயேசு என் ஆண்டவர்

    பாவத்திலே நான் கிடந்தேன்
    இயேசுவையோ நான் அறியேன்
    இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
    என்னை தேடி என் நேசர் வந்தார்

    என் பாவங்கள் நீங்கினதே
    ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
    நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
    ஆலேலுயா நான் சுத்தமானேன்


    Seitrilirunthu Thuki Yeduthar Lyrics in English

    settilirunthu thookki eduththaar
    kanmalaimael ennai niruththinaar
    enthan Yesu en aanndavar

    paavaththilae naan kidanthaen
    Yesuvaiyo naan ariyaen
    irulil kuliril thaniyaay alainthaen
    ennai thaeti en naesar vanthaar

    en paavangal neenginathae
    raththaththaalae meetteduththaar
    neethiyin vasthiram enakkum aliththaar
    aalaeluyaa naan suththamaanaen

  • Seermighu Vaanpuvhi Deva Sthothiram சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்

    சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,

    1.சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,
    சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,
    ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு
    இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா.

    2.நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,
    நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,
    ஆர் மணனே, தோத்ரம், உனது
    அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

    3.ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,
    தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,
    ஆவலுடன் தோத்ரம், உனது
    அன்பினுக்கே தோத்ரம், மா நேசா.

    4.ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
    அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்,
    சாற்றுகிறோம் தோத்ரம், உனது
    தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா.

    1. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,
      மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,
      தாராய் துணை, தோத்ரம், இந்தத்
      தருணமே கொடு, தோத்ரம், மா நேசா.

    Seermighu Vaanpuvhi Deva Sthothiram Lyrics in English
    View All Songs

    seermiku vaanpuvi thaevaa, thothram,

    1.seermiku vaanpuvi thaevaa, thothram,
    sirushtippu yaavaiyum pataiththaay, thothram,
    aerkunanae thothram, atiyark-ku
    irangiduvaay, thothram, maa naesaa.

    2.naer miku arul thiru anpaa, thothram,
    niththamu mumak katiyaarkalin thothram,
    aar mananae, thothram, unathu
    anpinukkae thothram, maa naesaa.

    3.jeevan, sukam, pelan, yaavukkum thothram,
    thinam thinam arul nanmaikkaakavum thothram,
    aavaludan thothram, unathu
    anpinukkae thothram, maa naesaa.

    4.aaththuma nanmaikatkaakavum thothram,
    athisaya nadaththutharkaakavum thothram,
    saattukirom thothram, unathu
    thakumanpukkae thothram, maa naesaa.

    1. maaraap poorana naesaa, thothram,
      makilodu jepamoli maalaiyin thothram,
      thaaraay thunnai, thothram, inthath
      tharunamae kodu, thothram, maa naesaa.
  • Seeraesu Paalan Jeyamanu Vaelan சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

    சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
    சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

    பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
    தாராள மாகத் தாமே மனுவான — சீரேசு

    1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
      மண்ணி லேகின மாட்சிமை யாலே,
      விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
      வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரேசு
    2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
      இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
      மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
      தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரேசு
    3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
      சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
      கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
      தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரேசு
    4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
      சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
      அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
      பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரேசு

    Seeraesu Paalan Jeyamanu Vaelan Lyrics in English
    seeraesu paalan jeyamanu vaelan
    seer naamaththaith thinamae pottuvomae

    paaraalum vaenthan pakaronnnnaa mainthan,
    thaaraala maakath thaamae manuvaana — seeraesu

    1. ennnarum perumaan aelaich saayalaaka
      mannnni laekina maatchimai yaalae,
      vinnnavarkal potta, vettikkavi saatta
      vannnam paati naam makilnthida vaenndaamo? — seeraesu
    2. unnatha paranuk koppillaa makimai
      innilaththinil elilsamaa thaanam,
      mannuyirkal meethu maapiriyam onga
      thannuyir thantha thayavai enna solvom? — seeraesu
    3. paavap pinniyaalae paathakaraip polae
      saapaththai nammael naam thaetinomae,
      kopaththai oliththae kuvalayaththai meetka
      theepamaay vantha thaevamainthanaana — seeraesu
    4. niththanae, en paavam eththanaiyaanaalum
      siththam urukich seerkoora vaenum,
      aththanae, un paatham anntinaen ippothum;
      paththiyaay unnaip pakaruvaen eppothum — seeraesu
  • Seer Yesu Naamam சீர் இயேசு நாமம்

    சீர் இயேசு நாமம் அதிசய நாமம்
    ஏழையெனக்கின்ப நாமம்

    எல்லா நாமத்திலும் மேலான நாமம்
    பக்தர் நிதம் வாழ்த்தும் நாமம்-எல்லா
    முழங்காலும் முடங்கிடச் செய்யும்
    வல்லவராம் இயேசு நாமம்

    பாவ பரிகாரம் பாதகர்க்கு நல்க
    பாரிடத்தில் வந்த நாமம் பாவமற்ற
    ஜீவியத்தை மாதிரியாய் காட்டித்தந்த
    பாவம் தீர்க்கும் புண்ணிய நாமம்

    நேற்றும் இன்றும் என்றும் மாறாத நாமம்
    சாற்றும் துதி ஏற்கும் நாமம்
    போற்றும் பக்தர் சபையில் அபிஷேகம்
    ஊற்றி பரிசுத்தமாக்கும் நாமம்

    வியாதி துன்பம் நீங்க சாத்தான்
    நிதம் தோற்க இரத்தம் சிந்தி நின்ற நாமம்
    ஜீவ வார்த்தை தந்து ஜீவித்திட கிருபை
    அளித்திட்ட அன்பர் நாமம்


    Seer yesu naamam Lyrics in English
    seer Yesu naamam athisaya naamam
    aelaiyenakkinpa naamam

    ellaa naamaththilum maelaana naamam
    pakthar nitham vaalththum naamam-ellaa
    mulangaalum mudangidach seyyum
    vallavaraam Yesu naamam

    paava parikaaram paathakarkku nalka
    paaridaththil vantha naamam paavamatta
    jeeviyaththai maathiriyaay kaattiththantha
    paavam theerkkum punnnniya naamam

    naettum intum entum maaraatha naamam
    saattum thuthi aerkum naamam
    pottum pakthar sapaiyil apishaekam
    ootti parisuththamaakkum naamam

    viyaathi thunpam neenga saaththaan
    nitham thorka iraththam sinthi ninta naamam
    jeeva vaarththai thanthu jeeviththida kirupai
    aliththitta anpar naamam