Tag: இந்த நாள் வரை

  • இந்த நாள் வரை Intha nal varai

    இந்த நாள் வரை என்னைக்
    காத்திட்ட எந்தன் கன்மலை நீரே
    இப்போதும் எப்போதும் என்னை
    சுமக்கும் தகப்பன் நீரே

    உம்மைத் துதிக்கிறேன் அல்லேலூயா
    உம்மை உயர்த்துகிறேன் அல்லேலூயா
    நீர் நல்லவர் அல்லேலூயா நீர்
    மிகவும் நல்லவர்

    உண்மையில்லா திருந்தேன்
    என்னைத் தூக்கி சுமந்தீரே
    பாவங்களை மன்னித்து
    மகிழ்ச்சியாய் மறந்தீரே

    ஒன்றுமில்லா திருந்தேன்
    நிறைத்தீர் உம் ஐஸ்வர்யத்தால்
    தேவைகளை சந்தித்து
    மீதம் எடுக்க வைத்தீர்

    வியாதியாய் இருந்தேன்
    குணமானேன் தழும்புகளால்
    வார்த்தையை அனுப்பி என்னை
    வாழவைத்தீரே


    Intha nal varai ennaik
    kaththitta enthan kanmalai nire
    ippothum eppothum ennai
    sumakkum thakappan nire

    ummaith thuthikkiren alleluya
    ummai uyarththukiren alleluya
    nir nallavar alleluya nir
    mikavum nallavar

    unmaiyilla thirunthen
    ennaith thukki sumanthire
    pavangkalai manniththu
    makizhssiyay maranthire

    onrumilla thirunthen
    niraiththir um aisvaryaththal
    thevaikalai santhiththu
    mitham etukka vaiththir

    viyathiyay irunthen
    kunamanen thazhumpukalal
    varththaiyai anuppi ennai
    vazhavaiththire