Tag: உன்னைத்தான் கேட்கின்றார்

  • உன்னைத்தான் கேட்கின்றார் unnaiththan ketkinrar

    உன்னைத்தான் கேட்கின்றார் இயேசு
    உன்னைத்தான் கேட்கின்றார்
    மனம் திரும்ப மாட்டாயா நீ
    மனம் திரும்ப மாட்டாயா

    நாடும் வீடும் நிலமும் எனக்கு
    போதும் என்று சொன்னாய்
    கூடு விட்டு ஆவி போகும்
    போது என்ன செய்வாய்
    யாவும் அழிந்து போகும்
    அழியா ஒன்று உண்டு
    உன்னைக் காக்கும் நல்ல இயேசு
    கிறிஸ்துவின் நேசக்கரங்கள்

    பட்டம் பதவி தகுதி உயர்வு
    யாவும் மாறி போகும்
    உலகம் உன்னை வெறுத்து
    ஒதுக்கும் காலம் வந்து சேரும்
    அன்று உணர்ந்து கொள்வாய்
    உண்மை என்ன என்று
    மாறும் உலகில் நிலைத்த ஒருவன்
    இயேசு தேவன் என்று


    unnaiththan ketkinrar iyesu
    unnaiththan ketkinrar
    manam thirumpa mattaya ni
    manam thirumpa mattaya

    natum vitum nilamum enakku
    pothum enru sonnay
    kutu vittu aavi pokum
    pothu enna seyvay
    yavum azhinthu pokum
    azhiya onru untu
    unnaik kakkum nalla iyesu
    kiristhuvin nesakkarangkal

    pattam pathavi thakuthi uyarvu
    yavum mari pokum
    ulakam unnai veruththu
    othukkum kalam vanthu serum
    anru unarnthu kolvay
    unmai enna enru
    marum ulakil nilaiththa oruvan
    iyesu thevan enru