Tag: பாரீர் கெத்சமனே

  • பாரீர் கெத்சமனே Paareer gethsamanae

    பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
    பாவியெனக்காய் வேண்டுதல்
    செய்திடும் சத்தம் தொனித்திடுதே

    தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
    தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே

    அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே

    இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
    இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே

     மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
    முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே

    அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
    துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்

    என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
    எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்


    Paareer gethsamanae poongaavilen naesaraiyae
    Paaviyenakkaai vaendudhal
    Seidhidum saththam dhoniththidudhae

    Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
    Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae 

    Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
    Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae 

    Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
    Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae

    Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
    Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae

     Anbin arul mozhiyaal aarudhal alippavar
    Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar

    Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
    Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen