Tag: வார்த்தை இல்லை என்

  • வார்த்தை இல்லை என் Vaarththai Illai En

    வார்த்தை இல்லை என் நெஞ்சில்
    மனம் திறந்து பேச நினைத்தும்
    வரிகள் இல்லை என் கையில்
    பல மொழியில் கவிதை தெரிந்தும்
    தாயிடம் பேச துடிக்கும்
    சிறு மழலையின் தவிப்பும்
    ஓராயிரம் என்னில் இருந்தும்
    எதை முதலில் பாட முடியும் ?

    நீரின்றி வாழ நினைத்தும்
    நீங்காது நெஞ்சில் இருக்கும்
    வழிமாறி ஓட துடித்தும்
    அழகாய் மனதிலே நிலைக்கும்
    உம் மனதை மாற்ற நினைத்தும்
    எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்
    என் மனதை மாற்றி அமைத்து
    துணையானீர் நெஞ்சோடு நீர்

    இணைந்தேன் உம்மிலே
    வழிகள் தெரியாமல்
    நிறைந்தேன் உம் அன்பிலே
    நிலைகள் புரியாமல் – 2

    வாழ்க்கையில் உறவுகள்
    நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்
    அந்த எண்ணங்கள் பொய்யானதே
    வாழ்ந்திடும் நாட்களுள்
    நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை
    நான் நித்தம் புரிந்துகொண்டேன்
    நெருங்கிய ஓர் நண்பனாய்
    விலகாமல் உடன் இருந்தீர்
    களைப்பினிலும் இனிக்கும்
    நினைவாக நெருங்கி நின்றீர்
    என் வழியும் சத்யமும்
    ஜீவனாய் நிலைத்து நின்றீர்
    உம் வசனம் தீபமாய்
    என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர்

    இணைந்தேன் உம்மிலே
    வழிகள் தெரியாமல்
    நிறைந்தேன் உம் அன்பிலே
    நிலைகள் புரியாமல் – 2 – வார்த்தை


    Vaarththai Illai En Nenjil
    Manam Thiranthu Pesa Ninaiththum
    Varigal Illai En Kaiyil
    Pala Mozhiyil Kavithai Therinthum
    Thaayidam Pesa Thudikkum
    Siru Mazhalayin Thavippum
    Oraayiram Ennil Irunthum
    Ethai Muthalil Paada Mudiyum ?

    Neerindri Vaazha Ninaithum
    Neengaathu Nenjil Irukkum
    Vazhimaari Ooda Thudiththum
    Azhagaai Manathilae Nilaikkum
    Um Manathai Maatra Ninaiththum
    Enai Minji Konji Izhukkum
    En Manathai Maatri Amaiththu
    Thunayaaneer Nenjodu Neer

    Inainthaen Ummilae
    Vazhigal Theriyaamal
    Nirainthaen Um Anbilae
    Nilaigal Puriyaamal – 2

    Vaazhkkaiyil Uravugal
    Nirantharamaai Nilaikkum Endru Enninaen
    Antha Ennangal Poyyanathae
    Vaazhnthidum Naatkalul
    Nilaiththidum Or Uravu Neer Enbathai
    Naan Niththam Purinthu Kondaen
    Nerungiya Or Nanbanaai
    Vilakaamal Udan Iruntheer
    Kalaippinilum Inikkum
    Ninaivaaga Nerungi Nindreer
    En Vazhiyum Sathyamum
    Jeevanaai Nilaiththu Nindreer
    Um Vasanam Deepamaai
    En Paathaikku Velicham Neer

    Inainthaen Ummilae
    Vazhigal Theriyaamal
    Nirainthaen Um Anbilae
    Nilaigal Puriyaamal – 2 – Vaarththai