Tag: என்னென்று அறியார்

  • என்னென்று அறியார் En-entru ariyaar

    என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்
    மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ

    அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்
    வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ

    இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்
    புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ

    ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்
    என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ

    தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு
    தாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ

    ஏவை வினைதீர – தேவ நேய மேற
    யாவும் முடிந்தது – என்ற வாக்கைக் கேட்க – வாரீரோ

    அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்
    ஒப்புவித்தேன் என்ற – ஓசையுரை கேட்க – வாரீரோ


    En-entru ariyaar – Mannor seitha paavam
    manniyappa ventra mathiyasthanai parkka – vaareero

    Antru kallanodu – intru paratheseil
    vanthiduvai entra – vallavanai kaana – vaareero

    evanun sei entrum – avalun thaai entrum
    poovi vazh veerntra – punniyanai parkka – vaareero

    Deva kopamundu – Aegan Naa vaarandu
    Thagamaanean entru – saattrinathai ketka – vaareero

    Aaevai vinaitheera – deva neya meara
    yaavum mudinthu – entra vaakkai ketka – vaareero

    Appan vasantheerai – ippothaavi nearai
    oppuvithean entra – oosaiura ketka – vaareero