Tag: என்னை நினைத்து

  • என்னை நினைத்து Ennai Ninaithu

    என்னை நினைத்து என்னை நினைத்து
    உம் கிருபை தாருமே – 2
    இயேசுவே இயேசுவே இயேசுவே
    உம் கிருபை போதுமே – 2

    அன்னாளின் கண்ணீரை கண்டவரே
    மறவாமல் சிறுமையை நினைத்தவரே – 2
    பதிலாக தீர்க்கனை தந்தவரே
    எந்தனின் சிறுமையை நினைத்தருளும் – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்

    மனிதனின் கேள்விகள் சூழும்போதும்
    மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும் – 2
    எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்
    எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும் – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்

    சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்
    நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும் – 2
    என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே
    உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்


    Ennai Ninaithu Ennai Ninaithu
    Um Kirubai Thaarumae – 2
    Yesuvae Yesuvae Yesuvae
    Um Kirubai Podhumae – 2

    Annaalin Kanneerai Kandavarae
    Maravaamal Siumaiyai Ninaithavarae – 2
    Pathilaaga Theerkanai Thandhavarae
    Endhanin Sirumaiyai Ninaitharulum – 2
    Maravaamal Ennai Ninaitharulum

    Manidhanin Kelvigal Soozhumpodhum
    Maaraavin Vaarthaigal Nerukkumpodum – 2
    Endhannin Vaarthaigal Pathilaagaamal
    Endhanin Vaazhkkaiyae Padhilaagattum – 2
    Maravaamal Ennai Ninaitharulum

    Sondhangal Nilaimaari Maranthittaallum
    Nanbargal Niramaari Maranthittalum – 2
    En Idhayathin Aazhangal Purinthavarae
    Ummaiyandri Vaeroruvar Enakkillaiyae – 2
    Maravaamal Ennai Ninaitharulum