Tag: எல்லா மகிமையும்

  • எல்லா மகிமையும் Ella makimaiyum

    எல்லா மகிமையும் கர்த்தருக்கே
    இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே
    வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில்
    வாழும் உயிர்களின் தந்தைக்கே

    வானும் ஒளியும் நிலமும் நீரும்
    காற்றும் முதலில் படைத்தாரே
    வகை வகையான பயிர்களும்
    உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே
    ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை
    அவர் தன் சாயலில் படைத்தாரே
    அது முதல் உலகில் மனுகுலம்
    பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே

    தவறுகள் பாவங்கள் வளர்த்திடும்
    சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே
    தன் வழி நடக்கும் தலைமுறை
    தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே
    அவன் வழி உலகில் மனிதரை
    எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே
    அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை
    மீண்டும் நிறைந்திட வகுத்தாரே


    ella makimaiyum karththarukke
    ingke ella menmaiyum iraivanukke
    vallan aantavar parama pitha vinnil
    vazhum uyirkalin thanthaikke

    vanum oliyum nilamum nirum
    karrum muthalil pataiththare
    vakai vakaiyana payirkalum
    uyirkalum pataiththu perukita vithiththare
    aatham manithanai eeval mangkaiyai
    avar than sayalil pataiththare
    athu muthal ulakil manukulam
    paluki arul vazhi natanthita vithiththare

    thavarukal pavangkal valarththitum
    saththan manukkalil kalanthita kantare
    than vazhi natakkum thalaimurai
    thazhaikka aapirahamai azhaiththare
    avan vazhi ulakil manitharai
    ellam aasirvathippen enrare
    athumuthal thuya sanror thalaimurai
    mintum nirainthita vakuththare