Tag: ஐந்து காய வேதனை அன்பர்

  • ஐந்து காய வேதனை Ainthu kaya vethanai

    ஐந்து காய வேதனை அன்பர்
    இயேசுவை வாட்டுதே
    ஆறாத சோகம் மாறாத துன்பம்
    ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

    கற்றூணில் கட்டி
    கசையடிகள் அடித்தனரே
    தலையினிலே குத்தி அவர்
    கன்னத்தில் அறைந்தனரே
    சிவப்பங்கி உடுத்தி கையில்
    கோலினைக் கொடுத்தனரே
    யூத ராஜா என்று இகழ்ந்து
    முகத்தில் காறி உமிழ்ந்தனரே

    மன்னவர் இயேசு உடல்
    பெரும் புண்ணாகி நொந்ததுவே
    மாபெரும் இரத்த வெள்ளம்
    பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
    மானிடர் பாவம் தனை மா
    தேவன் சுமந்து தீர்த்தார்
    மறாவாதே நீ நெஞ்சமே மனம்
    திரும்பிடு அவர் தஞ்சமே


    Ainthu kaya vethanai anpar
    iyesuvai vattuthe
    aaratha sokam maratha thunpam
    aantavar iyesu mel suzhnthathen

    karrunil katti
    kasaiyatikal atiththanare
    thalaiyinile kuththi avar
    kannaththil arainthanare
    sivappangki utuththi kaiyil
    kolinaik kotuththanare
    yutha raja enru ikazhnthu
    mukaththil kari umizhnthanare

    mannavar iyesu utal
    perum punnaki nonthathuve
    maperum iraththa vellam
    peruki aaraki paynthathuve
    manitar pavam thanai ma
    thevan sumanthu thirththar
    maravathe ni nenysame manam
    thirumpitu avar thanysame