Tag: aantavarin thirumakane

  • ஆண்டவரின் திருமகனே aantavarin thirumakane

    ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
    உண்மைதனை அறிவித்த அடையாளம்
    ஏராளம் அந்த அடையாளம் கண்டு
    கொண்டு அவர் வழியில் செல்வது தான்
    (இயேசு) திருசபையில் நாம்
    காணும் வாழ்வாகும்

    கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
    திரட்சை ரசம்ஆகியதே
    அற்புதத்தில் முதலாகும் அன்று
    கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
    மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
    அடையாளம் இரண்டாகும்
    முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
    முடியாத நோய் தீர்த்த
    எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
    வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
    ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா
    அருள் நிகழ்ச்சி நான்காகும்

    கடல் மீது நடந்து வந்து
    கடும் புயல் தானடக்கி
    கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
    ஒரு குருடனுக்கு பார்வை தந்து
    உலகின் ஒளி அவரே என
    வெளியான தத்துவமே ஆறாகும்
    இறந்து விட்ட லாசுருவை
    எழுப்பியவர் இறைமகனே
    என்பது தான் ஏழாகும் இன்னும்
    எண்ணில்லா அற்புதத்தை
    இவ்வுலகில் செய்து வைத்த
    இயேசுவின் மேல் அன்பு
    வைத்தால் நலமாகும்


    aantavarin thirumakane iyesu enra
    unmaithanai ariviththa ataiyalam
    eeralam antha ataiyalam kantu
    kontu avar vazhiyil selvathu than
    iyesu thirusapaiyil nam
    kanum vazhvakum

    kananur kalyanaththil thannirai
    thiratsai rasamaakiyathe
    arputhaththil muthalakum anru
    kappar nakar athikari makan uyirai
    mittuththantha karththar ennum
    ataiyalam irantakum
    muppaththettu aantukalay
    mutiyatha noy thirththa
    erusalemin arutseyale munrakum
    verum appam ainthu iinirantil
    aiyayiram pera unta kalileya
    arul nikazhssi nankakum

    katal mithu natanthu vanthu
    katum puyal thanatakki
    kanivotu kaththa seyal ainthakum
    oru kurutanukku parvai thanthu
    ulakin oli avare ena
    veliyana thaththuvame aarakum
    iranthu vitta lasuruvai
    ezhuppiyavar iraimakane
    enpathu than eezhakum innum
    ennilla arputhaththai
    ivvulakil seythu vaiththa
    iyesuvin mel anpu
    vaiththal nalamakum