Tag: aayiram irunthu

  • ஆயிரம் இருந்து Aayiram irunthu

    ஆயிரம் இருந்து என்ன நமக்கு தேவ
    ஆலயம் ஒன்றே போதும்
    நாளெல்லாம் வாழ்ந்தென்ன நமக்கு
    நம் நாயகன் அன்பொன்றே போதும்
    இயேசு நாயகன் அன்பொன்றே போதும்

    காலமென்னும் ஊஞ்சலிலே
    கனிவுடனே நம்மை ஆட வைத்தார்
    அன்பினிலே நம்மை வார்த்தெடுத்தார்
    நல்ல பண்பினிலே நம்மை தோய்த்தெடுத்தார்
    வேதனை தீயால் புடமிட்டார்
    தேவா ……. தேவா …… தேவா ….
    கடும் சோதனையால் நல் மெருகிட்டார்

    ஆஸ்தியை மலைப்போல் குவித்தாலும்
    இந்த அகிலம் முழுவதையும் சேர்த்தாலும்
    ஆத்தும மீட்பு இல்லையென்றால்
    அவைகளினால் ஒரு நன்மையில்லை
    ஆண்டவர் பாத்திரத்தில் பங்குமில்லை
    மனமே மனமே மனமே அந்த
    அருள் நாதர் மாளிகையில் இடமுமில்லை


    aayiram irunthu enna namakku thEva
    aalayam onRE pOthum
    naLellam vazhnthenna namakku
    nam nayakan anponRE pOthum
    iyEsu nayakan anponRE pOthum

    kalamennum uunysalilE
    kanivutanE nammai aata vaiththar
    anpinilE nammai varththetuththar
    nalla paNpinilE nammai thOyththetuththar
    vEthanai thIyal putamittar
    thEva thEva thEva
    katum sOthanaiyal nal merukittar

    aasthiyai malaippOl kuviththalum
    intha akilam muzhuvathaiyum sErththalum
    aaththuma mItpu illaiyenRal
    avaikaLinal oru nanmaiyillai
    aaNtavar paththiraththil pangkumillai
    manamE manamE manamE antha
    aruL nathar maLikaiyil itamumillai