Tag: anathi anpal

  • அனாதி அன்பால் Anathi anpal

    அனாதி அன்பால் அழைத்த தேவா
    காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே
    ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே
    ஆ அல்லேலூயா அல்லேலூயா
    ஆ அல்லேலூயா அல்லேலூயா

    என் மேல் நீர் வைத்த அன்பு
    முந்தி வந்ததல்லவோ
    நேசம் மரணத்திலும்
    வலியதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பு என்னை வென்றதே

    வேறெந்த அன்பின் இன்பம்
    நிலையற்றதல்லவோ
    மேகம் போல் மாறிப்போகும்
    தன்மையுள்ளதல்லவோ
    ஆகையினாலே உந்தன்
    அன்பை நான் நம்புவேன்

    அன்பாகவேயிருக்கும்
    அன்பின் தேவனல்லவோ
    உந்தனின் வார்த்தைகளை
    யாரும் மீறலாகுமோ
    ஆகையினாலே நானும்
    என்றும் கீழ்படிவேன்


    anathi anpal azhaiththa theva
    karunyaththale ennai mittir anpe
    aananthaththote nanum vanthen anpe
    aa alleluya alleluya
    aa alleluya alleluya

    en mel nir vaiththa anpu
    munthi vanthathallavo
    nesam maranaththilum
    valiyathallavo
    aakaiyinale unthan
    anpu ennai venrathe

    verentha anpin inpam
    nilaiyarrathallavo
    mekam pol marippokum
    thanmaiyullathallavo
    aakaiyinale unthan
    anpai nan nampuven

    anpakaveyirukkum
    anpin thevanallavo
    unthanin varththaikalai
    yarum miralakumo
    aakaiyinale nanum
    enrum kizhpativen