Tag: anru sonna iyesu

  • அன்று சொன்ன Anru sonna iyesu

    அன்று சொன்ன இயேசு வார்த்தை
    இன்று கூட உண்மையே அதை
    அவர் பிறந்த நல்ல நாளில்
    எண்ண எண்ண நன்மையே

    துயரமுற்றோர் பேறு பெற்றோர்
    ஆறுதலைக் காணலாம்
    தூய உள்ளம் கொண்ட மக்கள்
    தேவனையேக் பார்க்கலாம்
    நண்பரோடு நட்பு வைக்க
    தீயவர்க்கும் தோன்றுமே ஒரு
    பகைவன் மீது பாசம் நட்பு
    நல்லவர்க்கும் வேண்டுமே என்று

    குற்றவாளி கொள்ளையர்கள்
    வாழ்வைக்கூட காணுங்கள் தம்
    பெற்ற பிள்ளை யாவருக்கும்
    நன்மை செய்வார் பாருங்கள்
    அனைவருக்கும் தந்தை அந்த
    ஆண்டவர் தான் தெரியுமா இங்கு
    அவர் கொடுக்கும் நன்மையெல்லாம்
    அளந்து காட்ட முடியுமா என்று

    ஊசி காதில் ஒட்டகங்கள்
    நுழைவதெல்லாம் சுலபமே
    பணம் காசால் ஒருவன் கடவுள்
    அரசில் நுழைவதென்றால் கடினமே
    மரத்தின் தன்மை கனியில் உண்டு
    மனிதரெல்லாம் காணுங்கள் உங்கள்
    மனத்தின் தன்மை சொல்லில் உண்டு
    நல்ல வார்த்தை பேசுங்கள் என்று


    anru sonna iyesu varththai
    inru kuta unmaiye athai
    avar pirantha nalla nalil
    enna enna nanmaiye

    thuyaramurror peru perror
    aaruthalaik kanalam
    thuya ullam konta makkal
    thevanaiyek parkkalam
    nanparotu natpu vaikka
    thiyavarkkum thonrume oru
    pakaivan mithu pasam natpu
    nallavarkkum ventume enru

    kurravali kollaiyarkal
    vazhvaikkuta kanungkal tham
    perra pillai yavarukkum
    nanmai seyvar parungkal
    anaivarukkum thanthai antha
    aantavar than theriyuma ingku
    avar kotukkum nanmaiyellam
    alanthu katta mutiyuma enru

    uusi kathil ottakangkal
    nuzhaivathellam sulapame
    panam kasal oruvan katavul
    arasil nuzhaivathenral katiname
    maraththin thanmai kaniyil untu
    manitharellam kanungkal ungkal
    manaththin thanmai sollil untu
    nalla varththai pesungkal enru