Tag: Dhaaveedhin Vamsathil

  • தாவீதின் வம்சத்தில் Dhaaveedhin Vamsathil

    தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்
    மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக
    தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக
    இவ்வுலகில் பிறந்து விட்டாரே – 2

    போற்றி போற்றி புகழ்வோம்
    பாடி பாடி துதிப்போம் – 2

    சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே
    முன்னணையில் குழந்தையை வைத்தார்களே
    மனித குமாரன் மெய்யான தேவன்
    ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே – 2

    அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரே
    சந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரே
    தூதர்கள் தோன்றி துதிகளை பாடி
    உன்னதத்தில் மகிமை என சொன்னார்களே – 2


    Dhaaveedhin Vamsathil Bethlehem Oorinil
    Mariyaalin Maindhanaaha Yoeseppin Maganaaha
    Dhevakumaran Yesu Kristhu Kulandhaiyaaga
    Iuuulagil Pirandhu Vittaarae – 2

    Potri Potri Pugalvom
    Paadi Paadi Thudhipom – 2

    Sathirathil Avargaluku Idam Illayae
    Munnanayil Kulandhayai Vaithaargalae
    Manidha Kumaaran Meeiyaana Dhevan
    Aelayin Thotrathil Avadharithaarae – 2

    Avar Pirappai Thoodhan Arivithaarae
    Sandhoshathin Seidhiyai Therivithaarae
    Thoodhargal Thonri Thudhigalai Paadi
    Unnadhathil Magimai Ena Sonnaargalae – 2