Tag: Ethuvum Pirippathillai

  • எதுவும் பிரிப்பதில்லை Ethuvum Pirippathillai

    எதுவும் பிரிப்பதில்லை
    இயேசு உம் அன்பிலிருந்து
    என் மனம் உம்மைப் பிரிந்து
    வேறெங்கும் செல்வதில்லை

    மரணமோ நாசமோ மோசமோ
    எதையும் தாங்கிடுவேன்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன்

    உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்
    உம் ஜீவன் என்னில் பெற்றேன்
    இனி வாழ்வது நானல்ல
    என்னில் வாழ்வது நீர்தானையா

    உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை
    என் ஆசை இயேசய்யா
    உம்மை அறிந்திடும் தாகத்தினால்
    இந்த உலகமே குப்பை என்றேன்


    Ethuvum Pirippathillai
    Iyesu Um Anpilirunthu
    En Manam Ummaip Pirinthu
    Verengkum Selvathillai

    Maranamo Nasamo Mosamo
    Ethaiyum Thangkituven
    Enna Thunpangkal Vanthalum
    Innum Ummantai Nerungkituven

    Ummotu Siluvaiyil Araiyappatten
    Um Jivan Ennil Perren
    Ini Vazhvathu Nanalla
    Ennil Vazhvathu Nirthanaiya

    Ummaiyanri Veroru Viruppamillai
    En Aasai Iyesayya
    Ummai Arinthitum Thakaththinal
    Intha Ulakame Kuppai Enren