Tag: Gnaaniyaai Sutri Thirinthaalum

  • ஞானியாய் சுற்றித்திரிந்தாலும் Gnaaniyaai Sutri Thirinthaalum

    ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்
    பேரோடு புகழை சேர்த்தாலும்
    அரண்மனைகள் கட்டினாலும்
    மனதில் ஏக்கம் தீராதே
    சாலொமோன் ராஜா ஆனாலும்
    சகலமும் உன் வசம் என்றாலும்
    கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால்
    எதுவும் நிரந்தரம் கிடையாது

    வாழ்வு சாவு எது வந்தாலும்
    தேவனோடு மனம் கொண்டாடும்
    கொண்டு வந்ததில்லை
    கொண்டும் போவதில்லை
    சேர்த்து வைப்பதில் பயனில்லை
    ஆசை நூறு நீ கொண்டாலும்
    தேவன் நினைத்தாலே கை கூடும்
    ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ
    உனக்கு வழி இல்லை எந்நாளும்

    ஞானி இங்கு தேவன் இல்லை
    செல்வன் ஏழை வேறு இல்லை
    நாளை என்பது கையில் இல்லை
    இங்கு எல்லாமே மாயை என்றும்
    வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை
    ஓட்டம் இங்கு ஓய்வதில்லை
    வாழ்க்கை வாழும் அனைவருக்கும்
    தேவன் உறுதுணையே என்றும்

    இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
    இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
    துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
    கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம்
    இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
    இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
    துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
    இது போதும் என்றே நினைத்திடலாம் – வாழ்வு சாவு


    Gnaaniyaai Sutri Thirinthaalum
    Perodu Pugazhai Serththaalum
    Aranmanaigal Kattinaalum
    Manathil Yekkam Theeraathae
    Solomon Raaja Aanaalum
    Sagalamum Un Vasam Endraalum
    Konjam Nee Utruppaarththaal
    Ethuvum Nirantharam Kidaiyaathu

    Vaazhvu Saavu Ethu Vanthaalum
    Dhevanodu Manam Kondadum
    Kondu Vanthathillai
    Kondum Povathillai
    Serththu Vaippathil Payanillai
    Aasai Nooru Nee Kondaalum
    Devan Ninaiththaalae Kai Koodum
    Ondrum Koottavo Ondrum Kuraikkavo
    Unakku Vazhiyillai Ennalum

    Gnaani Ingu Devan Illai
    Selvan Yezhai Veru Illai
    Nalai Enbathu Kaiyil Illai
    Ingu Ellamae Maayai Endrum
    Vaazhvil Arththam Serkkum Varai
    Oottam Ingu Ooivathillai
    Vaazhkkai Vaazhum Anaivarukkum
    Devan Uruthunayae Endrum

    Irukkum Varai Inbangal Serththidalaam
    Yesuvudan Thuyarangal Pagirnthidalaam
    Thunichchaludan Thunbangal Agatridalaam
    Kadal Enum Kanneer Kadanthidalaam
    Irukkum Varai Inbangal Serththidalaam
    Yesuvudan Thuyarangal Pagirnthidalaam
    Thunichchaludan Thunbangal Agatridalaam
    Ithu Pothum Endre Ninaiththidalaam – Vaazhvu Saavu