Tag: Iyesu enakku seytha

  • இயேசு எனக்கு செய்த Iyesu enakku seytha

    இயேசு எனக்கு செய்த நன்மையை
    நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி
    முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் இயேசு நாதா

    அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்
    இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்
    நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத
    நன்மைகள் எனக்கு செய்தார்

    பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்
    புதுபெலம் எனக்குத் தந்தார்
    நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்
    நித்தமும் காத்துக் கொண்டார்

    ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட
    உற்சாகம் எனக்குத் தந்தார்
    தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்
    தவறாமல் பாதுகாத்தார்


    Iyesu enakku seytha nanmaiyai
    ninaiththu thuthiththu patuven solli
    mutiyatha iivai enakku thanthar solli patuven
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha
    sthoththiram iyesu natha

    arivukku ettatha arputham seythittar
    iyesuvai sthoththarippen
    ninaivukku melaka sinthikka mutiyatha
    nanmaikal enakku seythar

    pelavina neraththil sorvana velaiyil
    puthupelam enakkuth thanthar
    nirmulam aakamal en kalkal sarukkamal
    niththamum kaththuk kontar

    uuzhiyap pathaiyil ooti uzhaiththita
    ursakam enakkuth thanthar
    thevaikal santhiththar thataikalai nikkinar
    thavaramal pathukaththar