Tag: iyEsu nampi

  • இயேசு நம்பி iyEsu nampi

    இயேசு நம்பி தான் நான்
    வாழ்ந்திருக்கேன் அவர்
    பேச்சை நம்பித்தான் நான்
    வளர்ந்திருக்கேன் இயேசு
    வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது
    வந்து வந்து தேத்தும்மா

    தாய் என்னை மறந்தாலும் இயேசு
    நான் உன்னை மறவேன் என்றார்
    தந்தை என்னை வெறுத்தாலும்
    என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார்
    பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும்
    பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே

    உலகம் முடிவு பரியந்தம் நான்
    உன்னோடு இருப்பேன் என்றார்
    இந்த உலகம் தரக்கூடாத சமாதானம்
    உன்னிலே வைப்பேன் என்றார்
    உன் மேல் என் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்வேன் என்றார்
    உன்னை நான் ஒரு போதும்
    கைவிட மாட்டேன் என்றார்

    காலங்கள் மாறிவிடும் என் இயேசு
    கர்த்தரோ மாறமாட்டார்
    கோலங்கள் அழிந்து விடும் என் இயேசு
    கொள்கையோ நிலைத்து நிற்கும்
    வானமும் பூமியும் ஒருநாள் ஒழிந்திடும்
    தேவனின் வார்த்தையோ
    எந்நாளும் ஒழிவதில்லை


    iyesu nampi than nan
    vazhnthirukken avar
    pessai nampiththan nan
    valarnthirukken iyesu
    vakkuththaththam en nenysile athu
    vanthu vanthu theththumma

    Thay ennai maranthalum iyesu
    nan unnai maraven enrar
    thanthai ennai veruththalum
    en iyesu thangki sumappen enrar
    panthangkal sonthakal parinil maritum
    paraman iyesuvo enrenrum maritare

    ulakam mutivu pariyantham nan
    unnotu iruppen enrar
    intha ulakam tharakkutatha samathanam
    unnile vaippen enrar
    un mel en kannai vaiththu
    aalosanai solven enrar
    unnai nan oru pothum
    kaivita matten enrar

    kalangkal marivitum en iyesu
    karththaro maramattar
    kolangkal azhinthu vitum en iyesu
    kolkaiyo nilaiththu nirkum
    vanamum pumiyum orunal ozhinthitum
    thevanin varththaiyo
    ennalum ozhivathillai