Tag: Jepikka jepikka

  • ஜெபிக்க ஜெபிக்க Jepikka jepikka

    ஜெபிக்க… ஜெபிக்க… மனம்
    புத்தம் புதிய இருதயமாய் மாறும்
    துதிக்க.. துதிக்க.. மனபாரம் நீங்கி
    நம் துக்கமெல்லாம் தீரும்
    கவலையெல்லாம் நீங்கும்
    கண்ணீரெல்லாம் மறையும்
    கழுகு போலப் புதுபெலன் அடைந்து
    நம்மை பெலவானாய் மாற்றும்

    இடைவிடா ஜெபத்தினால் – பெரும்
    தடைகளைத் தகர்த்திடலாம் – நாம்
    கருத்துடன் ஜெபிப்பதினால் – நம்
    கண்ணீரைத் துடைத்திடலாம்
    ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும்
    வெற்றியைத் தந்திடும்
    புது மனிதனாக்கி நல் கிருபைகளை தந்து
    மகிமையில் சேர்த்திடும்
    பெலவானாய் மாற்றிடும் சுகமதைத் தந்திடும்

    ஜெபத்தின் வல்லமையால்
    நாம் சாத்தானை வென்றிடலாம்
    துதியின் வல்லமையால்
    பெரும் சதிகளை முறித்திடலாம்
    ஜெபிக்கிற மனிதன் வெற்றியைப் பெறுவான்
    தோல்விக்கு அஞ்சிடான்
    கரடு முரடான வாழ்வைக் கூட
    இலகுவாய்க் கடந்திடுவான்
    கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான்

    வேதம் சத்தியம் நமக்கு
    விடுதலை நிச்சயம்
    ஆவியின் பாடல்கள் நம்மை
    ஆற்றித் தேற்றிடும்
    கட்டுகள் உடைக்கும் கவலைகள் தீர்க்கும்
    கண்ணீரைத் துடைத்திடும்
    நித்திய சத்திய சுத்த மகத்துவ
    வழிதனைக் காட்டிடும்
    வேதமே தீபம் ஜெபமே ஜெயம்


    Jepikka jepikka manam
    puththam puthiya iruthayamay marum
    thuthikka.. thuthikka.. manaparam ningki
    nam thukkamellam thirum
    kavalaiyellam ningkum
    kannirellam maraiyum
    kazhuku polap puthupelan atainthu
    nammai pelavanay marrum

    itaivita jepaththinal perum
    thataikalaith thakarththitalam nam
    karuththutan jepippathinal nam
    kanniraith thutaiththitalam
    uukkamana jepam eekkangkal thirkkum
    verriyaith thanthitum
    puthu manithanakki nal kirupaikalai thanthu
    makimaiyil serththitum
    pelavanay marritum sukamathaith thanthitum

    jepaththin vallamaiyal
    nam saththanai venritalam
    thuthiyin vallamaiyal
    perum sathikalai muriththitalam
    jepikkira manithan verriyaip peruvan
    tholvikku anysitan
    karatu muratana vazhvaik kuta
    ilakuvayk katanthituvan
    kalangki ninritan karththarai maranthitan

    vetham saththiyam namakku
    vituthalai nissayam
    aaviyin patalkal nammai
    aarrith therritum
    kattukal utaikkum kavalaikal thirkkum
    kanniraith thutaiththitum
    niththiya saththiya suththa makaththuva
    vazhithanaik kattitum
    vethame thipam jepame jeyam