Tag: kalvari malaiyile

  • கல்வாரி மலையிலே kalvari malaiyile

    கல்வாரி மலையிலே என்
    கர்த்தா உம் வேதனை
    கண்ணீர் பெருகிடுதே கல்
    நெஞ்சமும் உருகிடுதே

    முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ்
    முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ
    வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்
    வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான்
    இரக்கமில்லாதவர் தேடி வந்தார்
    இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார்

    இரத்தம் நதி போல் பாயுதய்யா
    என் இதயம் தனலாய் வேகுதய்யா
    உத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்கு
    உளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யா
    எத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதை
    நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை

    ஆணி உம் மேனியில் பாயலாமோ உம்
    அங்கமெல்லாம் காயம் ஆகலாமோ
    தாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்க
    காடியை கொடியவன் கொடுக்கலாமோ
    சிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும்
    சிந்தித்தால் என் உள்ளம் துடிக்குதய்யா


    kalvari malaiyile en
    karththa um vethanai
    kannir perukituthe kal
    nenysamum urukituthe

    muppathu velliyin mokamum yuthas
    muththaththal ummai virkalakumo
    vanysakanay nanpan marivittan
    valiyavarkke ummai kattiththanthan
    irakkamillathavar theti vanthar
    ithayam illathavar pitiththussenra

    iraththam nathi pol payuthayya
    en ithayam thanalay vekuthayya
    uththamar utalum thutikkuthayya angku
    uluththavar ullamum kalikkuthayya
    eththarkal nenysinil irakkamillai athai
    niththamum ninaikkaiyil urakkamillai

    aani um meniyil payalamo um
    angkamellam kayam aakalamo
    thakaththal nirum thavikkalamo kutikka
    katiyai kotiyavan kotukkalamo
    siluvaiyil nir patta patukalai inrum
    sinthiththal en ullam thutikkuthayya