Tag: Kottum Paniyil Kulir Nila

  • கொட்டும் பனியில் குளிர்நிலா Kottum Paniyil Kulir Nila

    கொட்டும் பனியில் குளிர்நிலா
    மண்ணில் வந்த பாலகனே
    உனை தொட்டு தழுவி அணைக்க
    எந்தன் உள்ளம் ஏங்கிடுதே – 2
    அன்னை மடி மீது நீயும் தவழ
    கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
    மாட்டுத் தொழுவமாய் எந்தன்
    உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார்

    எந்தன் நண்பனாய் அன்பனாய்
    நீயும் மாறிட
    எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை போற்றுவேன் – 2

    வானின் நீளம் ஓடும் நீரும்
    உம் அன்பை அறிந்ததே
    பாவியான எந்தன் உள்ளம்
    உம்மை மறந்ததே
    சாதி மதம் தேடல் இங்கே
    அன்பை அழித்ததே
    உண்மையான அன்பிற்காக
    எங்கியே நின்றதே
    ஒரு தாயை தேடும் பிள்ளை போல
    அன்பை தேடி நின்றேன்
    இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே
    உம்மை கண்டுக்கொண்டேன்
    இருள் யாவும் மறைந்திடும்
    ஒளி எங்கும் பரவிடும்
    இதை யாவரும் காணவே
    உம் வருகை உணர்த்திடும்

    என்னை வீழ்த்திட தாழ்த்திட
    யார் யார் நினைப்பினும்
    உந்தன் பார்வையில் பாதையில்
    என் தேடல் வேண்டுமே – 2


    Kottum Paniyil Kulir Nila
    Mannil Vandha Paalagane
    Unai Thottu Thazhuvi Anaikka Endhan
    Ullam Yaengidudhe
    Annai Madi Meedhu Neeyum Thavazha
    Kandu Kaana Meippargal Vandhanar
    Maatu Thozhuvamai Endhan Ullam Maarida
    Meetpar Pirandhullar

    Endhan Nanbanaai Anbanaai Neeyum Maarida
    Endhan Uyirulla Naalellam Ummai Potruvaen – 2

    Vaanin Neelam Odum Neerum
    Um Anbai Arindhadhe
    Paaviyaana Endhan Ullam Ummai Marandhadhe
    Saathi Madham Thaedal Inge Anbai Azhithadhe
    Unmaiyaana Anbirkaaga Yaengiye Nindradhe
    Oru Thaayai Thaedum Pillai Pola Anbai Thaedi Nindren
    Indha Thaedal Ellai Sellum Munbe Ummai Kandukkonden
    Irul Yaavum Maraindhidum
    Oli Engum Paravidum
    Idhai Yaavarum Kaanave
    Um Varugai Unarthidum

    Ennai Veezhthida Thaazhthida Yaar Yaar Ninaippinum
    Undhan Paarvaiyil Paadhaiyil En Thaedal Vendume – 2