Tag: Paara kurusil paraloaga

  • பாரக்குருசில்‌ பரலோக Paara kurusil

    பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌
    பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரே
    பார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌
    பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே

    வந்திடுவாய்‌ இயேசுவண்டை
    வருந்தியே அழைக்கிறாரே
    வாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌
    வாதைகள்‌ நீக்குவாரே

    இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யான
    இளைப்பாறுதலை அளித்திடுவாரே
    இன்னுமென்ன தாமதமோ
    இன்றே இரட்சிப்படைய வருவாய்

    சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌
    சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌
    சர்வ வல்ல வாக்கை நம்பி
    சார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌

    நித்திய வாழ்வு பெற்றிட நீயும்‌
    நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்‌
    நீசனென்று தள்ளாதுன்னை
    நீதியின்‌ பாதையில்‌ சேர்த்திடுவார்‌

    இயேசுவின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌
    இன்பம்‌ அவரின்‌ அதரத்தின்‌ மொழிகள்‌
    இல்லையே இந்‌ நேசரைப்‌ போல்‌
    இகமதில்‌ வேறோர்‌ அன்பருனக்கே


    Paara kurusil paraloaga raajan
    Paadhaganai poala thongugiraaray
    Paar! Avarin thiru ratham un
    Paavangal poakida paaindhidudhay

    Vandhiduvaai Yeisuvandai
    Varundhiyay alaikiraaray
    Vaanjaigal theerpavaray – un
    Vaadhaigal neekuvaaray

    Irudhayathin paaram arindhu meiyaana
    Ilaipaarudhalai alithiduvaaray
    Innamumein thaamadhamo
    Indray retchipadaiya varuvaai

    Siluvaiyin meedhil sumandhaaray un
    Saaba roagangal tham sareerathil
    Sarva valla vaakai nambi
    Saarndhu sugam peravay varuvaai

    Nithiya vaalvu petrida neeyum
    Nithiya jeeva ootrandai vaaraai
    Neesanendru thallaadhunnai
    Needhiyin paadhaiyil seirthiduvaar

    Yeisuvin naamam ootrunda thailam
    Inbam avarin adharathin moligal
    Illaiyay in neisarai poal
    Igamadhil veiroar anbarunakkay