Tag: Parvathangkal nilai

  • பர்வதங்கள் நிலை Parvathangkal nilai

    பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
    என் கிருபை உன்னை விட்டு விலகாது
    என்றுரைத்த என் இயேசுவே
    உன் சொல் ஒருநாளும் உறங்காது

    இரண்டோ மூன்றோ பேர்கள்
    உம் நாமத்தில் இருக்கும்
    இடத்தில் நீர் இருப்பீர்
    இதயமோ உம்மை நினைத்திருந்தால்
    இன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்
    இன்னல் நீங்க உம்மை அழைத்தால்
    அண்ணல் இயேசுவே நீர் வருவீர்

    ஆறுகளை நான் கடக்கின்ற போதும்
    அக்கினி என்னை சூழ்கின்ற போதும்
    அங்கும் அருகே வந்திடுவீர்
    அழிவின்றி என்னை தாங்கிடுவீர்
    ஆண்டவர் இயேசு என்று
    அழைக்கும் என் மனமே
    அரவணைக்கும் உந்தன் அன்பு கரமே


    parvathangkal nilai peyarnthalum
    en kirupai unnai vittu vilakathu
    enruraiththa en iyesuve
    un sol orunalum urangkathu

    iranto munro perkal
    um namaththil irukkum
    itaththil nir iruppir
    ithayamo ummai ninaiththirunthal
    inpamam aaviyil nirappituvir
    innal ningka ummai azhaiththal
    annal iyesuve nir varuvir

    aarukalai nan katakkinra pothum
    akkini ennai suzhkinra pothum
    angkum aruke vanthituvir
    azhivinri ennai thangkituvir
    aantavar iyesu enru
    azhaikkum en maname
    aravanaikkum unthan anpu karame