Tag: PotruvenInnum Ummai

  • இன்னும் துதிப்பேன் இன்னும் Innum Thuthippen Innum

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2

    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் – 2

    வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2

    நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2

    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர்

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்

    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்- 2


    Innum Thuthippen Innum Potruven
    Innum Ummai Aarathippen – 2

    Ekkalamum Naan Thuthippen
    Enneramum Naan Potruven – 2

    Vyathiyin Vethanai Peruginaalum
    Maranathin Bayam Ennai Soozhnthalum – 2
    Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
    Unthan Thazhumbugalal Kunamakkiduveer – 2

    Nambikkai Yavumae Izhanthalum
    Ellamae Mudinthathu Endralum – 2
    Enthan Kallaraiyin Kallai Purattiduveer
    Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer – 2

    Nallavar Vallavar Sarva Vallavar – 4

    Thanimayin ennangal soolnthaalum
    Kannerae padukayai maarinaalum – 2
    Ennai aravanaithu kattiyelupiduveer
    Naan Ilanthavarai iratippai tharuveer -2