Tag: Sirar vivakam

  • சீரார் விவாகம் Sirar vivakam

    சீரார் விவாகம் ஏதேன் காவிலே
    நேராய் அமைத்த தேவ தேவனே
    தாராய் மன்றலாசியே
    வாராய் சுபம் சேரவே
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
    நேயனே மகா தூய தேவ தேவனே
    சீர்மேவுமே ஆசிதா
    …நேயனே

    மங்கள மணமகன் அவர்களுக்கும்
    மங்கள மணமகள் அவர்களுக்கும்
    இயேசு தேவ தயவாய்
    பாசத் துணை சேர்த்துவை

    நாடோறும் செல்பாதை தீபமாய்
    நாடு உயர்ந்த வேத நூலதை
    தேடித் துணைகொண்டன்பாய்
    நீடித்தும்மைத் தேடிட நீடித்தவர் வாழ்ந்திட

    ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
    வானோர் சிறந்த கல்வி செல்வமும்
    சான்றோர் போற்றும் நேசரும்
    தோன்றித் திகழ சீரருள்

    வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
    வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
    வாழ்க சுற்றத்தார் அன்பர்
    வாழ்க சுப மன்றலும்


    Sirar vivakam eethen kavile
    neray amaiththa theva thevane
    tharay manralasiye
    varay supam serave
    neyane maka thuya theva thevane
    sirmevum meymanasi ni tharava
    neyane maka thuya theva thevane
    sirmevume aasitha
    …neyane

    mangkala manamakan avarkalukkum
    mangkala manamakal avarkalukkum
    iyesu theva thayavay
    pasath thunai serththuvai

    natorum selpathai thipamay
    natu uyarntha vetha nulathai
    thetith thunaikontanpay
    nitiththummaith thetita nitiththavar vazhnthita

    aanror ennalum porrum seyarum
    vanor sirantha kalvi selvamum
    sanror porrum nesarum
    thonrith thikazha sirarul

    vazhka vazhka enrum immanar
    vazhka ilangkum thanthai thayarum
    vazhka surraththar anpar
    vazhka supa manralum