Tag: உள்ளமெல்லாம் உருகுதய்யா

  • உள்ளமெல்லாம் உருகுதய்யா ullamellam urukuthayya

    உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்
    கல்வாரி காட்சி கண்டு என்
    தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்
    சிலுவையின் பாடு கண்டு உம்
    சிலுவையின் பாடு கண்டு

    மகிமை மாட்சிமை மறந்து விட்டு
    மனிதனாய் ஏன் பிறந்தீர்
    மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்
    மகிமை மறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ மனு
    உருவாய் பிறந்தீரோ

    இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண
    காயங்கள் ஏன் அடைந்தீர்
    இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே
    இரத்தத்தை வடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ தேவ
    சித்தத்தை முடித்தீரோ

    அன்பின் ரூபம் ஆனவரே உம்
    மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ
    ஆணவத்தால் நான் செய்த
    பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ
    உம் மேனியில் பாய்ந்ததுவோ


    ullamellam urukuthayya um
    kalvari katsi kantu en
    thekamellam natungkuthayya um
    siluvaiyin patu kantu um
    siluvaiyin patu kantu

    makimai matsimai maranthu vittu
    manithanay een piranthir
    mannana ennai nir nesiththathal um
    makimai maranthiro manu
    uruvay piranthiro manu
    uruvay piranthiro

    iraththamum aaray perukitave irana
    kayangkal een atainthir
    iratsippin vazhvai nan perave
    iraththaththai vatiththiro theva
    siththaththai mutiththiro theva
    siththaththai mutiththiro

    anpin rupam aanavare um
    mel aanikal paynthatheno
    aanavaththal nan seytha
    pavangkale kur aaniyay mariyatho
    um meniyil paynthathuvo
    um meniyil paynthathuvo