Tag: சபையின் அஸ்திபாரம் நல்

  • சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே Sabaiyin aashthibaram Nam meetpar kirishthuve

    சபையின் அஸ்திபாரம்
    நல் மீட்பர் கிறிஸ்துவே
    சபையின் ஜன்மாதாரம்
    அவரின் வார்த்தையே
    தம் மணவாட்டியாக
    வந்ததைத் தேடினார்
    தமக்குச் சொந்தமாக
    மரித்ததைக் கொண்டார்

    எத்தேசத்தார் சேர்ந்தாலும்
    சபை ஒன்றே ஒன்றாம்
    ஒரே விசுவாசத்தாலும்
    ஒரே ரட்சிப்புண்டாம்
    ஒரே தெய்வீக நாமம்
    சபையை இணைக்கும்
    ஓர் திவ்விய ஞானாகாரம்
    பக்தரைப் போஷிக்கும்

    புறத்தியார் விரோதம்
    பயத்தை உறுத்தும்
    உள்ளானவரின் துரோகம்
    கிலேசப்படுத்தும்
    பக்தர் ஓயாத சத்தம்
    எம்மட்டும் என்பதாம்
    ராவில் நிலைத்த துக்கம்
    காலையில் களிப்பாம்

    மேலான வான காட்சி
    கண்டாசீர் வாதத்தை
    பெற்று போர் ஓய்ந்து வெற்றி
    சிறந்து மாட்சிமை
    அடையும் பரியந்தம்
    இன்னா உழைப்பிலும்
    நீங்காத சமாதானம்
    மெய்ச் சபை வாஞ்சிக்கும்

    என்றாலும் கர்த்தாவோடு
    சபைக்கு ஐக்கியமும்
    இளைப்பாறுவோரோடு
    இன்ப இணக்கமும்
    இப்பாக்கிய தூயோரோடு
    கர்த்தாவே, நாங்களும்
    விண் லோகத்தில் உம்மோடு
    தங்கக் கடாட்சியும்

    Sabaiyin aashthibaram
    Nam meetpar kirishthuve- sabaiyin
    Jenmaathaaram avarin vaarththaiye
    Tham manavaaitiyaaga vandhathai thedinaar
    Thamakku sondhamaaga mariththadai kondar

    Eththesaththar serndhalum sabai ondre ondram
    Ore vishvasaththaalum ore
    Iratchippundam – ore theyivega
    Naamam sabaiyai inaikkum
    Or thivya gnaaggaram baktharai poshikkum

    Puraththiyaar virotham bayanthai oruththum
    Ullanavarin thurogam kilesapaduththum
    Bakthar ooyatha saththam emmaitum enbatham
    Iraavil nilaithtga thukkam kaalaiyil kalippaam

    Melaana vaana kaaitchi kandaasirvaaththai
    Peitru poor oindhu verri sirandhu maaichimai
    Adaiyum pariyandham innaa uzhappilum
    Ninghaatha samaathaanam mei sabai vaanjikkum

    Endraalum karththaavodu sabaikku
    Aikkiyamum – ilaippaaruvooroodu
    Inba inakkamum – ippaakya
    Thuyorodu karththaave naangalum – vin
    Loogaththil ummoodu thanga kadaaitchiyum