Tag: சிலுவையின் நிழலில்

  • சிலுவையின் நிழலில் Siluvaiyin nilalil

    சிலுவையின் நிழலில் தங்கி நான்
    என்றும் இளைப்பாறுவேன்
    தங்கிடுவேன் தாபரிப்பேன்
    கல்வாரி நேசரின் பாதத்திலே

    சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்
    சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்
    அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவே
    தூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின்

    அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்
    என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே
    எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலே
    ஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின்

    கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதை
    தியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்
    மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலே
    முள்முடி சூடினார் எனக்காகவே – சிலுவையின்

    தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்
    தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .
    சிலுவை மரணமோ கொடியதோர் வேதனை
    எப்படிப் போற்றுவேன் என் இயேசுவை – சிலுவையின்

    கல்வாரி அன்பினால் கழுவி எந்தனை நீர்
    கறைதிரை அற்றோனாய் மாற்றினீரே
    எக்காளச் சத்தத்தைக் கேட்டிடும் நாளிலே
    கர்த்தராம் இயேசுவை சந்திப்போமே – சிலுவையின்


    Siluvaiyin nilalil thangi naan
    Endrum ilaipaaruvein
    Thangiduvein thaabaripein
    Kalvari neisarin paadhathilay

    Siluvaiyil Yesuvai naan kaanum neramellaam
    Sindhithen jeeviyathai seer seiguvein
    Angamellaam adipattu thongugiraar Yeisuvay
    Thooyanaai ennaiyum maatridavay

    Agoara paadugalaal andha keidadaindhavaraal
    En paavam pokka jeevan eendhavaray
    Ennilla anbinaiyay ennullam ninaikaiyilay
    Oppuvithein ennai suthanaakum

    Golgotha naayagarin kodoora maranamadhai
    Dhyaanithen ottamathai oadiduvein
    Moondraanni meedhinil kalvarin mathiyilay
    Mulmudi soodinaar enakaagavay

    Thaangonna veidhanai sutri vadhaitha neram
    Dhaasanaam endhanukkaai eitravaray
    Siluvai maranamo kodiyadhoar veidhanai
    Eppadi poatruvein en Yeisuvai

    Kalvari anbinaal kaluvi endhanai neer
    Karai thirai atroanaai maatrineeray
    Ekkaala sathathai keitidum naalilay
    Kartharaam Yesuvai sandhippoamay