Tag: நல்லதாக முடிவதெல்லாம்

  • நல்லதாக முடிவதெல்லாம் Nallathaka mutivathellam

    நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
    இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
    அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
    அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்

    நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
    நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
    சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
    அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது

    கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
    கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
    எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
    அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே

    பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
    பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
    திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
    தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே


    Nallathaka mutivathellam katavul kattalai
    ingku natappathellam parama pitha nataththum oru nilai
    allal urra nenysangkalil amaithi pozhinthar
    angku atimaiyana makkalukku vituthalai thanthar

    nathiyarra makkalukkor natu kitaiththathu silar
    nalvazhiyai maranthathinal allal nernthathu
    salamonin thavithin aatsi amainthathu
    arul santhathiyal aantavarin pathai therinthathu

    karththaritam nampikkai than vazhvin inpame athu
    katukalavu kurainthalum thunpam thotarume
    esekkelum thaniyelum etuththus sonnare
    athai essarikkai unarntha makkal nalamatainthare

    parisuththa kutaram thevan aalayam athu
    pazhaiyathaki nilaiththu mintum puthiyathanathe
    thiruppatal sangkitham theyvappatale athai
    thinam pati thuthippathu nam vazhvin katamaiye