Tag: நீ தனிமையில் இல்லை

  • நீ தனிமையில் இல்லை Ni thanimaiyil illai

    நீ தனிமையில் இல்லை மகனே
    நீ தனிமையில் இல்லை மகளே
    உன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்
    உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்
    உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதே
    பலம் கொண்டு திடமாய் இரு நீ

    தடைகளை கண்டு நீயும் பயந்திடாதே
    தடைகளை உடைப்பவர் நான் அல்லவா
    சூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதே
    உன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்
    உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
    உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா

    ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோ
    அநாதை ஆனேன் என்று அழுகிறாயோ
    யார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லை
    நீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்
    உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவா
    உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா


    Ni thanimaiyil illai makane
    ni thanimaiyil illai makale
    un suzhnilaiyai arinthirukkiren
    un kanniraiyum kantirukkiren
    ullam thalarnthitathe manam sornthitathe
    palam kontu thitamay iru ni

    thataikalai kantu niyum payanthitathe
    thataikalai utaippavar nan allava
    suzhnilaiyai kantu niyum thuvantitathe
    un thukkaththai santhoshamay marrituven
    unnai uruvakkina karththar nanallava
    unnai peyar solli azhaiththavar nanallava

    aatharam illai enru thavikkirayo
    anathai aanen enru azhukirayo
    yar maranthalum unnai nan marappathillai
    ni payappatathe unakku nan thunai nirpen
    unnai uruvakkina karththar nanallava
    unnai peyar solli azhaiththavar nanallava