Tag: வேர்வை இரத்தாமாய் மாறிடவே

  • வேர்வை இரத்தாமாய் மாறிடவே vervai iraththamay maritave

    வேர்வை இரத்தாமாய் மாறிடவே
    வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
    தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
    தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
    என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
    உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா

    பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
    பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
    முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
    முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன-நினைத்தீரோ

    உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
    உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்
    உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று
    உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே – என்ன
    -நினைத்தீரோ

    பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
    பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
    வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
    யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே– என்ன நினைத்தீரோ


    vervai iraththamay maritave
    viyakulaththal vethanaiyil poritave
    thangka thuyar thanil nir thanimaiyile
    thavikkinra pothu sitarkal urangkaiyile
    enna ninaiththiro en iyesu natha
    ummai nan ninaikkaiyil urukukinrenayya

    parpala athisayangkalai parththarinthavanum
    panappaiyai than tholil sumanthe thirinthavanum
    muppathu vellikkaka mokam kontu mosam seyya
    muththamittu ummai kattik kotuththa velaiyile -enna
    -ninaiththiro

    umakkaka jivanaith tharuven enravanum
    un nimiththan ethu varinum itaral ataiyen enravanum
    uyirukkay payam nirainthu ummaiyariyen enru
    umakku ethire saththiyam seythitum velaiyile – enna
    -ninaiththiro

    para siluvai athu tholil amizhnthitave
    patham itariye nir parithaviththu senritave
    varinal atikkum pothu valiyinal thutiththitave
    yaritamum sollamal nir eengki thaviththitum velaiyile
    enna ninaiththiro