அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே அப்பா
பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா ஐயா
கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே அப்பா
அனுதின உணவு நீர்தானையா என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா எனக்கு
ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையா ஐயா
ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
v
Leave a Reply
You must be logged in to post a comment.