Category: Song Lyrics

  • Aadhi thiru vaarthai ஆதி திருவார்த்தை

    ஆதி திருவார்த்தை திவ்ய
    அற்புத பாலனாக பிறந்தார்
    ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட
    ஆதிரையோரை யீடேற்றிட

    மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்து
    மரியாம் கன்னியிட முதித்து
    மகிமையை மறந்து தமை வெறுத்து
    மனு குமாரன் வேஷமாய்
    உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
    மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
    உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

    தாம் தாம் தன்னர வன்னர
    தீம் தீன் தீமையகற்றிட
    சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
    ஷமென சோபனம் பாடவே
    இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது
    இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

    ஆதாம் ஓதி ஏவினார்
    ஆபிரகாம் விசுவாசவித்து
    யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
    ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

    பூலோக பாவ விமோசனர்
    பூரணக் கிருபையின் வாசனர்
    மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
    மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்

    அல்லேலூயா சங்கீர்த்தனம்
    ஆனந்த கீதங்கள் பாடவே
    அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
    அற்பரன் மெய்பரன் தற்பரனார்.

    Aadhi thiru vaarthai Lyrics in English
    aathi thiruvaarththai thivya
    arputha paalanaaka piranthaar
    aathaam tham paavaththil saapaththai theerththida
    aathiraiyorai yeetaettida

    maasatta jothi thiruvaththuvaththor vasthu
    mariyaam kanniyida muthiththu
    makimaiyai maranthu thamai veruththu
    manu kumaaran vaeshamaay
    unna thakanjaீr mukanjaீr vaasakar
    minnunjaீr vaasakar maeniniram elum
    unnatha kaathalum porunthavae sarva
    nanmai soroopanaar ranjithanaar

    thaam thaam thannara vannara
    theem theen theemaiyakattida
    sangirtha sangirtha sangirtha santho
    shamena sopanam paadavae
    ingaீrth ingaீrth ingaீrth namathu
    iruthayaththilum engum nirainthida

    aathaam othi aevinaar
    aapirakaam visuvaasaviththu
    yoothar simmaasanath thaalukai seyvor
    eesaay vangishaththaanuthiththaar

    pooloka paava vimosanar
    pooranak kirupaiyin vaasanar
    maeloka raajaathi raajan simmaasanan
    maenmai makimai pirathaapan vanthaar

    allaelooyaa sangaீrththanam
    aanantha geethangal paadavae
    allaikal thollaikal ellaam neengida
    arparan meyparan tharparanaar.

  • Aadhavan Uthikkum Mun ஆதவன் உதிக்கும் முன்

    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
    நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
    இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

    காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
    வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
    உத்தமர் தோன்றி விட்டார்!
    நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
    ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
    ஆண்டவர் தோன்றி விட்டார்
    காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
    கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
    கர்த்தர் தோன்றி விட்டார்!!!

    Aadhavan Uthikkum Mun Lyrics in English

    aathavan uthikkum mun eluveer,
    nam aanndavar thonti vittar,
    Yesu aanndavar thonti vittar!

    kaattaாy alaiyaay kadalaay nathiyaay
    voottaாy uyiraay ulakaththin oliyaay
    uththamar thonti vittar!
    nam uththamar thonti vittar!!

    aathavan uthikkum mun eluveer – nam
    aanndavar thonti vittar – Yesu
    aanndavar thonti vittar
    kaalai jepaththinil kadavul vativinil
    karththar thonti vittar – nam
    karththar thonti vittar!!!

  • Aadharam Nee Than Iyya En Thuraiye ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே

    ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
    ஆதாரம் நீ தான் ஐயா

    அனுபல்லவி
    சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்

    சரணங்கள்

    1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
      மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
      மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு — ஆதாரம்
    1. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
      நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
      நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு — ஆதாரம்
    1. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
      வற்றாக் கிருபை நதியே , என்பதியே
      வற்றாக் கிருபை நதியே , என்பதியே — ஆதாரம்
    1. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
      துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
      துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு — ஆதாரம்

    Aadharam Nee Than Iyya En Thuraiye Lyrics in English
    aathaaram nee thaan aiyaa , enthuraiyae,

    aathaaram nee thaan aiyaa

    anupallavi

    soothaam ulakilnaan theethaal mayangaiyil
    saranangal

    1. maathaa pithaavenaith theethaay mathikkaiyil
      mattaோrkkup pattethaiyaa , eliyanmael,
      mattaோrkkup pattethaiyaa , eliyanukku — aathaaram
    1. naam , naam thunnaiyena nayanthurai sonnavar
      nattattil vittaraiyaa ; thaniyanai
      nattattil vittaraiyaa ; thaniyanukku — aathaaram
    1. kattaோr perumaiyae , mattaோr arumaiyae
      vattaாk kirupai nathiyae , enpathiyae
      vattaாk kirupai nathiyae , enpathiyae — aathaaram
    1. sothanai yadarnthu vaethanai thodarnthu
      thukkam mikuvaelaiyil en sukirthamae,
      thukkam mikuvaelaiyil , un thaasanukku — aathaaram
  • Aachariyame athisayame ஆச்சரியமே அதிசயமே

    ஆச்சரியமே அதிசயமே
    ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்

    செங்கடல் இரண்டாய் பிரிந்து போக
    சொந்த ஜனங்களை நடத்தினாரே
    இஸ்ரவேலின் துதிகளாலே
    ஈன எரிகோ வீழ்ந்ததுவே

    ஏழு மடங்கு எரி நெருப்பில்
    ஏழை தம் தாசருடன் நடந்தார்
    தானியேலை சிங்கக் கெபியில்
    தூதன் துணையாய் காத்தனரே

    பனிமழையை நிறுத்தினாரே
    பக்தன் எலியா தன் வாக்கினாலே
    யோசுவாவின் வார்த்தையாலே
    ஏகும் சூரியன் நின்றதுவே

    மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்
    மாபெலன் தேவனிடம் அடைந்தான்
    வீழ்த்தினானே கோலியாத்தை
    வீரன் தாவீது கல் எறிந்தே

    நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
    தம்மை நோக்கி வேண்டும் போது
    தாங்கி நம்மை ஆதரிப்பார்

    Aachariyame athisayame Lyrics in English
    aachchariyamae athisayamae
    aanndavar seyalkal aathi paktharidam

    sengadal iranndaay pirinthu poka
    sontha janangalai nadaththinaarae
    isravaelin thuthikalaalae
    eena eriko veelnthathuvae

    aelu madangu eri neruppil
    aelai tham thaasarudan nadanthaar
    thaaniyaelai singak kepiyil
    thoothan thunnaiyaay kaaththanarae

    panimalaiyai niruththinaarae
    pakthan eliyaa than vaakkinaalae
    yosuvaavin vaarththaiyaalae
    aekum sooriyan nintathuvae

    mathilaith thaannti senaikkul paayum
    maapelan thaevanidam atainthaan
    veelththinaanae koliyaaththai
    veeran thaaveethu kal erinthae

    nam murpithaakkal nampina thaevan
    naettum intum entum maaridaarae
    thammai Nnokki vaenndum pothu
    thaangi nammai aatharippaar

  • Aabirakamin thevan isakkin thevan ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

    ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவனவர் என்னை
    அழைத்தும் உன்னத வழியில்
    என்றென்றும் நடத்திடுவார்

    வனாந்திரமோ வாடாதே மனமே
    காடையை அனுப்பிடுவார்
    தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்
    அவரின் நன்மைகள் எத்தனையோ

    சோதனை வேளையோ சோராதே மனமே
    இயேசுவை சார்ந்திடுவாய்
    யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்
    என்றென்றும் ஜீவிப்பாய்

    கசந்த மாராவோ கவலை வேண்டாமே
    கர்த்தர் உன்னோடே உள்ளார்
    ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து
    வெற்றியை சேர்த்திடுவாய்

    அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து
    அனுதினம் ஜீவிப்பாயே
    அவரின் சித்தம் நித்தமும் செய்ய
    ஆவலாய் கீழ்ப்படிவாய்

    Aabirakamin thevan isakkin thevan Lyrics in English
    aapirakaam thaevan eesaakkin thaevan
    yaakkopin thaevanavar ennai
    alaiththum unnatha valiyil
    ententum nadaththiduvaar

    vanaanthiramo vaadaathae manamae
    kaataiyai anuppiduvaar
    thannnneer illaiyo ennnnippaar
    avarin nanmaikal eththanaiyo

    sothanai vaelaiyo soraathae manamae
    Yesuvai saarnthiduvaay
    yorthaanaik kadanthu Yesuvaip pattik kol
    ententum jeevippaay

    kasantha maaraavo kavalai vaenndaamae
    karththar unnotae ullaar
    jepaththilae nee vilippaay irunthu
    vettiyai serththiduvaay

    allaelooyaa paati Yesuvaith thuthiththu
    anuthinam jeevippaayae
    avarin siththam niththamum seyya
    aavalaay geelppativaay

  • Aabiragaamai Aasirvathitha ஆபிரகாமை ஆசீர்வதித்த

    Aabiragaamai Aasirvathitha
    ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

    1. செல்வி மணமகள் – XXXXXம்
      செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
      என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
      வாழவே! வாழவே!! வாழவே!!!
      என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
      இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
      இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
      இணைந்து வாழவே!
    1. கண்ணின் மணிபோல் கணவனும்
      இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
      என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
      வாழவே! வாழவே!! வாழவே!!!
      இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
      இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
      இணைந்து வாழவே (2)
    1. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
      பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
      இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
      வாழவே! வாழவே!! வாழவே!!!
      என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
      நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
      நயந்து வாழவே இணைந்து வாழவே

    Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த Lyrics in English
    Aabiragaamai Aasirvathitha
    aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae

    1. selvi manamakal – XXXXXm
      selvan manamakan – YYYYYm -aa…
      entum aasi pettu inithu vaalavae
      vaalavae! vaalavae!! vaalavae!!!
      entum aasipettu innainthu vaalavae
      illaramaam inpa nallarach solaiyil
      innisai yeluppi ingithamaay ini
      innainthu vaalavae!
    1. kannnnin mannipol kanavanum
      illaththin vilakkenak kaarikaiyum – aa…
      entum aasippettu inithu vaalavae
      vaalavae! vaalavae!! vaalavae!!!
      illaramaam inpa nallarach solaiyil
      innisai elappi ingithamaayentum
      innainthu vaalavae (2)
    1. anpum aranum angu ongumenin
      pannpum payanum unndaamae aa… aa…
      inpamaaka ennaalum angnganamentum vaalavae
      vaalavae! vaalavae!! vaalavae!!!
      entumithae inpam konntivar vaalavae
      narpukalatainthu nannparudan suttam
      nayanthu vaalavae innainthu vaalavae
  • Aabathu Naalil Karthar ஆபத்து நாளில் கர்த்தர்

    ஆபத்து நாளில் கர்த்தர்
    என் ஜெபம் கேட்கின்றீர்
    யாக்கோபின் தேவனின்
    நாமம் பாதுகாக்கின்றது

    என் துணையாளர் நீர்தானே
    சகாயர் நீர்தானே
    நீர்தானே என் துணையாளர்
    நீர்தானே என் சகாயர்

    எனது ஜெபங்களெல்லாம்
    மறவாமல் நினைக்கின்றீர்
    எனது துதிபலியை
    நுகர்ந்து மகிழ்கின்றீர்

    இதய விருப்பமெல்லாம்
    தகப்பன் தருகின்றீர் – என்
    ஏக்கம் எல்லாமே – என்
    எப்படியும் நிறைவேற்றுவீர்

    வரப்போகும் எழுப்புதல் கண்டு
    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    இரட்சகர் நாமத்திலே(இயேசு)
    கொடியேற்றிக் கொண்டாடுவோம்

    திறமையை நம்பும் மனிதர்
    தடுமாறி விழுந்தார்கள்
    தேவனை நம்பும் நாமோ
    தலை நிமிர்ந்து நிற்கின்றோம்

    Aabathu Naalil Karthar Lyrics in English
    aapaththu naalil karththar
    en jepam kaetkinteer
    yaakkopin thaevanin
    naamam paathukaakkintathu

    en thunnaiyaalar neerthaanae
    sakaayar neerthaanae
    neerthaanae en thunnaiyaalar
    neerthaanae en sakaayar

    enathu jepangalellaam
    maravaamal ninaikkinteer
    enathu thuthipaliyai
    nukarnthu makilkinteer

    ithaya viruppamellaam
    thakappan tharukinteer – en
    aekkam ellaamae – en
    eppatiyum niraivaettuveer

    varappokum elupputhal kanndu
    makilchchiyil aarpparippom
    iratchakar naamaththilae(Yesu)
    kotiyaettik konndaaduvom

    thiramaiyai nampum manithar
    thadumaari vilunthaarkal
    thaevanai nampum naamo
    thalai nimirnthu nirkintom

  • Aa! Ampara Umpara Mum Pukalunthiru ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

    பல்லவி
    ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
    ஆதிபன் பிறந்தார்

    அனுபல்லவி
    ஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ!

    சரணங்கள்

    1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவ
      அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
      உச்சிதவரனே! – ஆ!
    1. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்று
      அல்லிராவினில் – தொல்லையிடையினில்
      புல்லணையிற் பிறந்தார். – ஆ!
    1. ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிக
      நன்னய, உன்னத – பன்னரும் ஏசையா
      இந்நிலம் பிறந்தார். – ஆ!
    1. கோனவர் நாட, – தானவர் கொண்டாட, – என்று
      கோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூத
      கோத்திரன் பிறந்தார். – ஆ!
    1. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,
      மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
      விந்தையாய்ப் பிறந்தார். – ஆ!

    Aa! Ampara Umpara Mum Pukalunthiru Lyrics in English
    pallavi
    aa! ampara umpara mum pukalunthiru
    aathipan piranthaar

    anupallavi
    aathipan piranthaar, – amalaathipan piranthaar. – aa!

    saranangal

    1. anpaana paranae! – arul maevung kaarananae! (2) – nava
      achchaya sachchithaa – ratchakanaakiya
      uchchithavaranae! – aa!
    1. aatham pavamara, – neetham niraivaera, (2) – antu
      alliraavinil – thollaiyitaiyinil
      pullannaiyir piranthaar. – aa!
    1. njaaniyar thaeda, – vaanavar paada, (2) – mika
      nannaya, unnatha – pannarum aesaiyaa
      innilam piranthaar. – aa!
    1. konavar naada, – thaanavar konndaada, – entu
      koththirar thoththisanj saattida vae, yootha
      koththiran piranthaar. – aa!
    1. vinnnudu thona, mannavar paena, (2) aerothu,
      mainthanin sinthaiyalunthik kalangida
      vinthaiyaayp piranthaar. – aa!
  • Aa Yesuve Neer En Baliyaneer ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்;

    1. ஆ இயேசுவே, நீர்
      என் பலியானீர்;
      பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
      மன்றாடிடுவீர்
      இப்பாவிக்காய் நீர்;
      என்னைக் கொன்றோருக்காய்
      உயிர் ஈந்தேன் என்பீர்.
    1. இறங்கிடுமேன்,
      அகற்றிடுமேன்
      உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
      சிலுவை அன்பால்
      என்னை இழுத்தால்
      ஆவேன் விடுதலை பாவியாம்
      அடிமை.
    1. கோபம் பெருமை
      போக்கும் சிலுவை;
      அகற்றுமே தூய ரத்தமும்
      தோஷத்தை;
      தீய மனத்தை
      பாவ பாரத்தை
      அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
      உம்மண்டை.
    1. தூய வெண்மையே
      இப்போ இப்போதே;
      உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
      தூயோன் ஆக்குவீர்
      முற்றும் மாற்றுவீர்;
      உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
      உண்டாக்குமே.
    1. உம் ரத்தம் என்னில்
      நிலைத்திருப்பின்,
      ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
      பிதாவின் முன்னர்
      சகாயராம் நீர்,
      சுதா, பாவியேனை உம் அன்பால்
      வாழ்விப்பீர்.

    Aa Yesuve Neer En Baliyaneer Lyrics in English

    1. aa Yesuvae, neer
      en paliyaaneer;
      paavi ummai akatta, kalvaari senteer;
      mantadiduveer
      ippaavikkaay neer;
      ennaik kontorukkaay
      uyir eenthaen enpeer.
    1. irangidumaen,
      akattidumaen
      unthan anpinaal enthan utkatinaththai;
      siluvai anpaal
      ennai iluththaal
      aavaen viduthalai paaviyaam
      atimai.
    1. kopam perumai
      pokkum siluvai;
      akattumae thooya raththamum
      thoshaththai;
      theeya manaththai
      paava paaraththai
      akatti, raththaththaal serththidum
      ummanntai.
    1. thooya vennmaiyae
      ippo ippothae;
      unthan raththaththaal thooymaiyaavaen paaviyae;
      thooyon aakkuveer
      muttum maattuveer;
      unthan saayal en vaalkkaiyil
      unndaakkumae.
    1. um raththam ennil
      nilaiththiruppin,
      olinthidum eppaavam palaveenamum
      pithaavin munnar
      sakaayaraam neer,
      suthaa, paaviyaenai um anpaal
      vaalvippeer.
  • Aa Yesuvae, Ummaalae ஆ இயேசுவே, உம்மாலே

    1. ஆ இயேசுவே, உம்மாலே
      நான் மீட்கப்பட்டவன்;
      உம் திவ்விய ரத்தத்தாலே
      நான் சுத்தமானவன்;
      மிகுந்த கஸ்தியாலே
      என் தோஷத்தைத் தீர்த்தீர்;
      உமது சாவினாலே
      நீர் என்னை ரட்சித்தீர்.
    1. நான் உம்மால் என்றும் வாழ,
      இப்பந்தியில் நீரே
      என் ஆவிக் கேற்றதான
      அமிர்தம் தந்தீரே;
      உம் ஆசீர்வாதம் ஈந்து,
      என் பாவம் மன்னியும்;
      அன்போடு என்னைச் சேர்த்து,
      தயாளம் காண்பியும்.
    1. நீர் இன்னும் என்னில் காணும்
      பொல்லாங்கு யாவையும்
      அகற்றிப்போட வாரும்,
      என் நெஞ்சில் தங்கிடும்;
      நான் உம்மைப் பற்றிக் கொள்ள
      கருணை புரியும்;
      மிகுந்த தாழ்மையுள்ள
      சித்தம் கடாஷியும்.
    1. நல் மீட்பரே, உம்மோடு
      நான் ஐக்கியமாகவும்,
      நாடோறும் வாஞ்சையோடு
      உம்மில் நிலைக்கவும்,
      மிகுந்த அன்பினாலே
      துணை செய்தருளும்;
      தெய்வீக அப்பத்தாலே
      நீர் என்னைப் போஷியும்.

    Aa Yesuvae, Ummaalae Lyrics in English

    1. aa Yesuvae, ummaalae
      naan meetkappattavan;
      um thivviya raththaththaalae
      naan suththamaanavan;
      mikuntha kasthiyaalae
      en thoshaththaith theerththeer;
      umathu saavinaalae
      neer ennai ratchiththeer.
    1. naan ummaal entum vaala,
      ippanthiyil neerae
      en aavik kaettathaana
      amirtham thantheerae;
      um aaseervaatham eenthu,
      en paavam manniyum;
      anpodu ennaich serththu,
      thayaalam kaannpiyum.
    1. neer innum ennil kaanum
      pollaangu yaavaiyum
      akattippoda vaarum,
      en nenjil thangidum;
      naan ummaip pattik kolla
      karunnai puriyum;
      mikuntha thaalmaiyulla
      siththam kadaashiyum.
    1. nal meetparae, ummodu
      naan aikkiyamaakavum,
      naatoorum vaanjaiyodu
      ummil nilaikkavum,
      mikuntha anpinaalae
      thunnai seytharulum;
      theyveeka appaththaalae
      neer ennaip poshiyum.