Category: Tamil Worship Songs Lyrics

  • Ennidam Ezhuntha Yesuvae Umakku என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

    என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

    அன்பு ஆராதனை நன்றியுமென்றும் – 2

    பரலோக வாசிகள் அருமையாய் உம்மை

    புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த – 2

    நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

    நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

    மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

    நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென – 2

    ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

    பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

    சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்

    சீரிய திருவுள்ளம் பிறழாது வளர – 2

    இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க

    நேசமாய் அருள வேண்டுகின்றோமே


    Ennidam Ezhuntha Yesuvae Umakku Lyrics in English

    ennidam eluntha Yesuvae umakku

    anpu aaraathanai nantiyumentum – 2

    paraloka vaasikal arumaiyaay ummai

    pukalnthu konndaatida puviyilae intha – 2

    neesanaam ennidam elunthathum aeno

    naesamun athisaya irakkamumallo

    maasillaa appak kunangalil marainthu

    naesamaay ennul elunthu vantheerena – 2

    aasaiyaay Yesuvae visuvasiththumakku

    poosithamaay nanti seluththukintenae

    sinthanai sollilum seyalilum unthan

    seeriya thiruvullam piralaathu valara – 2

    Yesuvae unthan arasengum vilanga

    naesamaay arula vaenndukintomae

  • Enni Enni Thuthi Seivaai எண்ணி எண்ணி துதி செய்வாய்

    எண்ணி எண்ணி துதி செய்வாய்
    எண்ணிலடங்காத கிருபைகட்காய்
    என்றும் தங்கும் தம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1.உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்னே பதறாதே
    கண்மணிபோல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைப்பாரே!

    2.யோர்தான் புரண்டு வரும்போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விசுவாச சோதனையில்!

    3.உனக்கெதிராகவே
    ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசருக்கு நீதியவர்!

    4.திறந்தவாசல் முன்னே
    விரம் பிரவேசிப்போம்
    ஒரு மனிதனும் பூட்டமாட்டான்
    உன் கர்த்தர் முன் செல்வார்!

    5.மனிதரை ஜனங்களை
    மன்னவர் தருவாரே
    நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

    ஜீவன் தந்தவர் கேட்கிறாரே!


    Enni Enni Thuthi Seivaai Lyrics in English

    ennnni ennnni thuthi seyvaay
    ennnniladangaatha kirupaikatkaay
    entum thangum tham puyamae
    inpa Yesuvin naamamae

    1.unnai Nnokkum ethiriyin
    kannnnin munnae patharaathae
    kannmannipol kaakkum karangalil
    unnai mooti maraippaarae!

    2.yorthaan puranndu varumpol
    ennnatta paarangalo
    eliyaavin thaevan engae
    unthan visuvaasa sothanaiyil!

    3.unakkethiraakavae
    aayutham vaaykkaathae
    unnai alaiththavar unnmai thaevan
    avar thaasarukku neethiyavar!

    4.thiranthavaasal munnae
    viram piravaesippom
    oru manithanum poottamaattan
    un karththar mun selvaar!

    5.manitharai janangalai
    mannavar tharuvaarae
    nam jeevanai eedaay koduppom

    jeevan thanthavar kaetkiraarae!

  • Enni Enni Paar எண்ணி எண்ணிப் பார்

    எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
    எபிநேசர் செய்த நன்மைகளை – 2

    நன்றி நன்றி நன்றி
    கோடி கோடி நன்றி
    பலிகள் செலுத்திடுவோம் – 2

    தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
    நீதிமான் ஆக்கினாரே – 2
    நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
    நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

    காயப்பட்டார் நாம் சுகமாக
    நோய்கள் நீங்கியதே – 2
    சுமந்து கொண்டார் நம் பாடுகள்
    சுகமானோம் தழும்புகளால் – 2

    சாபமானார் நம் சாபம் நீங்க
    மீட்டாரே சாபத்தினின்று
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
    பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

    ஏழ்மையானார் சிலுவையிலே
    செல்வந்தனாய் நாம் வாழ
    சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
    முடிவில்லா வாழ்வு தந்தார் – 2


    Enni Enni Paar Lyrics in English

    ennnni ennnnip paar ennnni paar
    epinaesar seytha nanmaikalai – 2

    nanti nanti nanti
    koti koti nanti
    palikal seluththiduvom – 2

    thanntikkappattar naam mannippataiya
    neethimaan aakkinaarae – 2
    norukkappattar naam meetpataiya
    niththiya jeevan thanthaar – 2 -nanti

    kaayappattar naam sukamaaka
    Nnoykal neengiyathae – 2
    sumanthu konndaar nam paadukal
    sukamaanom thalumpukalaal – 2

    saapamaanaar nam saapam neenga
    meettarae saapaththinintu
    aapirakaamin aaseervaathangal
    pettuk konntoom siluvaiyinaal – 2

    aelmaiyaanaar siluvaiyilae
    selvanthanaay naam vaala
    saavai aettaாr naam jeevan pera
    mutivillaa vaalvu thanthaar – 2

  • Ennavale Jeevan Viduththiro Swamy என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ

    என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
    இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

    பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
    பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
    பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
    மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

    கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
    காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
    வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
    விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
    எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
    எனால் உமக்கென்ன லாபம் யேசு
    மனா பரப்ரம திருவுளமோ இது

    சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
    திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
    வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
    வரவழைக்கிறீர் தயை பாராட்டி
    விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
    மீண்டவாறிது மிக்க விசாலமே
    ஆண்டவா அது பக்கிஷ நேசமே


    Ennavale Jeevan Viduththiro Swamy Lyrics in English

    ennaalae jeevan viduththeero svaamee
    iththanai paattukkingae aduththeero

    ponnaattathipathi paraman aattukkuttiyae
    porumaik kalavilaatha kirupaith thirukkumaaraa
    poonndu por kurusinil araiyunndenai
    meenndanukrakamida neri konndatho

    kallanaippol kattunnda parithaapam meyppoong
    kaavil aaththumaththutta manasthaapam vaerththu
    vellamaay raththam purannda sopam yaaraal
    vipariththu mutiyum un pirasthaapam
    ellaththanai anpilaa ullath thuroki naanae
    enaal umakkenna laapam yaesu
    manaa paraprama thiruvulamo ithu

    siluvai maraththil kaikaal neetti thaevareer
    thiruvilaavaith thulaikka eetti kaayam
    valiya anpin kataikkann kaatti innam
    varavalaikkireer thayai paaraatti
    vilaikoduththenaik kootti mikka salaakyam sootti
    meenndavaarithu mikka visaalamae
    aanndavaa athu pakkisha naesamae

  • Ennathan aanal ena என்னதான் ஆனாலென்ன

    என்னதான் ஆனாலென்ன
    என் மீட்பர் உயிரோடுண்டு
    தொடர்ந்து பயணம் செய்வேன்
    என் துணையாளர் முன்செல்கிறார்

    காடு மேடு கடந்து சென்றாலும்
    கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே
    ஆறுகளை நான் கடக்கும்போதும்
    மூழ்கி நானும் போவதில்லை
    அக்கினியில் நடக்கும் போதும்
    எரிந்து நானும் போவதில்லை

    மரணமே ஆனாலும் என்ன
    ஜீவனே ஆனாலும் என்ன
    பரிசுத்தரின் பின்னே செல்லுவேன்
    திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
    எனது ஜீவன் உமது கரத்தில்
    ஒருவரும் பறிப்பதில்லை

    கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
    சாவு எனக்கு ஆதாயமே
    தேவனின் அன்பிலிருந்து
    பிரிப்பவர்கள் யாருமில்லை
    உனது பாதம் எனது தஞ்சம்
    எனது கோட்டை நீர்தானே


    Ennathan aanal ena Lyrics in English

    ennathaan aanaalenna
    en meetpar uyirodunndu
    thodarnthu payanam seyvaen
    en thunnaiyaalar munselkiraar

    kaadu maedu kadanthu sentalum
    karam pitiththennai nadaththukintarae
    aarukalai naan kadakkumpothum
    moolki naanum povathillai
    akkiniyil nadakkum pothum
    erinthu naanum povathillai

    maranamae aanaalum enna
    jeevanae aanaalum enna
    parisuththarin pinnae selluvaen
    thirumpi naanum paarkkamaattaen
    enathu jeevan umathu karaththil
    oruvarum parippathillai

    kiristhu enakku jeevan thaanae
    saavu enakku aathaayamae
    thaevanin anpilirunthu
    pirippavarkal yaarumillai
    unathu paatham enathu thanjam
    enathu kottaை neerthaanae

  • Ennappa Seiyanum என்னப்பா செய்யணும்

    என்னப்பா செய்யணும் நான்
    சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

    இயேசப்பா இயேசப்பா என்னப்பா

    உங்க ஆசை தான் எனது ஆசை
    உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

    உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
    உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

    இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
    உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

    எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது
    உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்


    Ennappa Seiyanum Lyrics in English

    ennappaa seyyanum naan
    sollungappaa senjudaraen

    iyaesappaa iyaesappaa ennappaa

    unga aasai thaan enathu aasai
    unga viruppam thaan enathu viruppamae

    unga aekkanthaan enathu aekkam
    unga ennnanthaan enathu ennnamaiyaa

    ini oru vaalvu illai neenga illaama
    unga paatham thaan enathu thanjamaiyaa

    eththanai idar varattum athu ennaip pirikkaathu
    umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen

  • Ennankalellam Ederum எண்ணங்களெல்லாம் ஈடேறும்

    எண்ணங்களெல்லாம் ஈடேறும்
    இயேசு உனக்குள் இருப்பதால்
    சொல்வது எல்லாம் நடந்துவிடும் -நீ
    ஏசுகூட நடப்பதால்

    1. மலையைப் பார்த்து பேசிடுவோம்
      அதுவும் பெயர்ந்து கடலில் விழும்
      புயலைப் பார்த்து அதட்டிடுவோம்
      அதுவும் அடங்கி போய்விடும்
      சாத்தான் கூட்டத்தை விரட்டிடுவோம்
      சத்திய வேதத்தை உயர்த்துவோம்
      சாவு பயங்கள் நீக்குவோம்
      சதா இயேசுவை உயர்த்துவோம்
    2. இயேசு நாமத்தில் ஜெபிக்கும்போது
      ஜெபத்தை தேவன் கேட்டிடுவார்
      வேண்டுவதுக்கும் நினைப்பதுக்கும்
      மிகவும் அதிகமாய் செய்திடுவார்
      சோர்வு இல்லாமல் ஜெபிப்போம்
      வாக்குத்தத்தம் சுதந்தரிபோம்
      தடைகள் யாவும் முறிப்போம்
      சதா இயேசுவை துதிப்போம்
    3. தேவனைப் பார்த்து துதித்திடுவோம்
      துதிகள் மத்தியில் வந்திடுவார்
      துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
      சதாகாலமும் ஆண்டிடுவார்
      துதிக்கும் கத்தரின் பாட்டு
      துதிக்கும் கர்த்தரின் பாட்டு
      எதிரி சேனைக்கு வேட்டு
      சர்வ ஆயுதத்தை மாட்டு
      சாத்தானை ஊரை விட்டு ஓட்டு

    Ennankalellam Ederum Lyrics in English

    ennnangalellaam eetaerum
    Yesu unakkul iruppathaal
    solvathu ellaam nadanthuvidum -nee
    aesukooda nadappathaal

    1. malaiyaip paarththu paesiduvom
      athuvum peyarnthu kadalil vilum
      puyalaip paarththu athatdiduvom
      athuvum adangi poyvidum
      saaththaan koottaththai viratdiduvom
      saththiya vaethaththai uyarththuvom
      saavu payangal neekkuvom
      sathaa Yesuvai uyarththuvom
    2. Yesu naamaththil jepikkumpothu
      jepaththai thaevan kaetdiduvaar
      vaennduvathukkum ninaippathukkum
      mikavum athikamaay seythiduvaar
      sorvu illaamal jepippom
      vaakkuththaththam suthantharipom
      thataikal yaavum murippom
      sathaa Yesuvai thuthippom
    3. thaevanaip paarththu thuthiththiduvom
      thuthikal maththiyil vanthiduvaar
      thuthikkum makimaikkum paaththirarae
      sathaakaalamum aanndiduvaar
      thuthikkum kaththarin paattu
      thuthikkum karththarin paattu
      ethiri senaikku vaettu
      sarva aayuthaththai maattu
      saaththaanai oorai vittu ottu
  • Ennamellam Ekkamellam எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

    எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
    சிந்தனையெல்லாம் நீரே

    என் வாஞ்சை என் தாகம்
    என் நோக்கம் நீரே

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

    மனிதர்கள் என்னை தள்ளினாலும்
    சூழ்நிலையால் கலங்கினாலும்

    போராட்டங்கள் எனை சூழ்ந்தாலும்
    வேதனையால் வாடினாலும்

    நம்பினோர் என்னை கைவிட்டாலும்
    ஏமாற்றத்தால் நான் சோர்ந்திட்டாலும்


    Ennamellam Ekkamellam Lyrics in English

    ennnamellaam aekkamellaam
    sinthanaiyellaam neerae

    en vaanjai en thaakam
    en Nnokkam neerae

    parisuththar parisuththar parisuththarae

    manitharkal ennai thallinaalum
    soolnilaiyaal kalanginaalum

    poraattangal enai soolnthaalum
    vaethanaiyaal vaatinaalum

    nampinor ennai kaivittalum
    aemaattaththaal naan sornthittalum

  • Ennaluraikka Mudiyade என்னாலுரைக்க முடியாதே

    என்னாலுரைக்க முடியாதே – என்றன்
    இருதய மகிழ்ச்சி இப்போதே

    முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
    மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
    தேற்றினார் அகத்தினை

    காட்டினில் அலைந்த ஆடுநானே – எனைக்
    கண்டு பிடித்தவர் யேசு கோனே
    வீட்டினுள் மகிமையைக் கண்டேனே – இனி
    வியந்து விரைந்து பாடுவேனே
    நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
    ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்

    பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே – பாவப்
    பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
    ஆவல் ஆசையும் அகற்றினாரே – தேவ
    அன்பினை அகத்துள் ஊற்றினாரே
    தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
    ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்

    சத்துருவினால் விளைந்த கோட்டை – எல்லாம்
    தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
    பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் – பெறப்
    பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
    இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
    தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
    அஞ்சிடேனே இனி

    ஆசை மிகும் யேசு பெருமானே – பதி
    னாயிரம் பேரில் சிறந்த கோனே
    வாச லீலிப்பீவே சீவதேனே – வான
    மன்னாவே இலங்கு கதிரோனே
    மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
    நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
    சூடுவாய் தோத்திரம்


    Ennaluraikka Mudiyade Lyrics in English

    ennaaluraikka mutiyaathae – entan
    iruthaya makilchchi ippothae

    munnaalae paavaththuyaril moolkina paethaiyai yaesu
    mannavanaar thaetikkanndu maattaைnaar pavaththinai
    thaettinaar akaththinai

    kaattinil alaintha aadunaanae – enaik
    kanndu pitiththavar yaesu konae
    veettinul makimaiyaik kanntaenae – ini
    viyanthu virainthu paaduvaenae
    naattinil enaiththodar onaay puli yaavum verunndu
    ottampitith thappaalae nintuttitho paarththena vetti atainthaen

    paavangal anaiththum manniththaarae – paavap
    payangal santhaekan tholaiththaarae
    aaval aasaiyum akattinaarae – thaeva
    anpinai akaththul oottinaarae
    thaeva vasananjaெlikkach sepaththiyaanangal sirakka
    aavi ullilaekalikka aaduthae kaalkalum paaduthae naavathum

    saththuruvinaal vilaintha kottaை – ellaam
    thaanntivanthaen yaesu perungaோttaை
    paktharuk kaayaththam seytha veettaைp – perap
    paarththirukkinten parama naattaை
    iththarai vasikkung kaalam aththanaiyum yaesukkenaith
    thaththam seythuvittaen avar thanjamae kaavil thaan
    anjitaenae ini

    aasai mikum yaesu perumaanae – pathi
    naayiram paeril sirantha konae
    vaasa leelippeevae seevathaenae – vaana
    mannaavae ilangu kathironae
    maasarakkaluvi enthan manathul vasiththeluppum
    naesaththaal makilnraெn thentum needuvaay kirupaikal
    sooduvaay thoththiram

  • Ennalun Thuthithiduveer எந்நாளுந் துதித்திடுவீர்

    எந்நாளுந் துதித்திடுவீர் – அந்த
    இசர வேலின் ஏகோவா வைநீர்

    இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
    விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை

    கர்த்தாவின் வழிசெய்யவும் – தீமை
    கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
    கெம்பீர மாகச் சொல்லவும்
    சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
    கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா

    தன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்
    தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
    தாசன்தா வீது வம்சத்து
    இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
    இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று

    அந்தகாரத்திலிருப்போர் – சாவின்
    ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
    அங்குபிர காசமடைந்து
    அந்தச மாதாந உந்தரங் கண்டிட
    ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்

    விந்தைப்பி தாவவர்க்கும் – ஏக
    வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
    வீவிலா ஆவியவர்க்கும்
    சந்ததம் மகிமை சந்தத மென்று
    சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி


    Ennalun Thuthithiduveer Lyrics in English

    ennaalun thuthiththiduveer – antha
    isara vaelin aekovaa vaineer

    inthanar saathiyir sinthaiyaaych saalavae
    vinthaipu rinthidu menthaipa rantanai

    karththaavin valiseyyavum – theemai
    kattaோtae neekkum ratchippai yaarkkum
    kempeera maakach sollavum
    suththanae yaanaay karththarmun povaay
    kanndukol paalaa intha sol maalaa

    thannaadu thanaich santhiththu – meettuth
    thaattikap pakaivarai ottida ulakinil
    thaasanthaa veethu vamsaththu
    inpara kshannyak kompaith thanthaan
    itho neer kanndu sinthaiyaay nintu

    anthakaaraththiliruppor – saavin
    aalavi rulthanir kaalangal pokkuvor
    angupira kaasamatainthu
    anthasa maathaana untharang kanntida
    aathiththan thontinaar jaathika laeneer

    vinthaippi thaavavarkkum – aeka
    viththaana yaesu rakshaka naarkkum
    veevilaa aaviyavarkkum
    santhatham makimai santhatha mentu
    sattuneer sollip pattudan alli