Blog

  • Enrum Aanantham என்றும் ஆனந்தம்

    என்றும் ஆனந்தம்
    என் இயேசு தருகிறார்
    துதிப்பேன் துதிப்பேன்
    துதித்துக் கொண்டேயிருப்பேன்
    அல்லேலூயா ஆனந்தமே (2)

    1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
      என்றும் தங்குவேன்
      தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
      என்றே சொல்லுவேன்
    2. தமது சிறகால் என்னை மூடி
      காத்து நடத்துவார்
      அவரது வசனம் ஆவியின் பட்டயம்
      எனது கேடகம்
    3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
      தூதர்கள் எனக்குண்டு
      பாதம் கல்லில் மோதாமல் காத்து
      கரங்களில் ஏந்துவார்
    4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
      நடந்தே செல்லுவேன்
      சாத்தானின் சகல் வலிமையை வெல்ல
      அதிகாரம் எனக்குண்டு
    5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
      எதற்கும் பயமில்லை
      உன்னத தேவன் எனது அடைக்கலம்
      தங்கும் உறைவிடம்
    6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
      என்றும் விடுதலை
      அவரது நாமம் அறிந்த எனக்கு
      அவரே அடைக்கலம்
    7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
      என்றும் பதிலுண்டு
      என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
      என்னை உயர்த்துவார்

    Enrum Aanantham Lyrics in English

    entum aanantham
    en Yesu tharukiraar
    thuthippaen thuthippaen
    thuthiththuk konntaeyiruppaen
    allaelooyaa aananthamae (2)

    1. unnathar maraivil vallavar nilalil
      entum thanguvaen
      thaevanai Nnokki ataikkalap paarai
      ente solluvaen
    2. thamathu sirakaal ennai mooti
      kaaththu nadaththuvaar
      avarathu vasanam aaviyin pattayam
      enathu kaedakam
    3. valikalilellaam ennaik kaakka
      thootharkal enakkunndu
      paatham kallil mothaamal kaaththu
      karangalil aenthuvaar
    4. singaththin maelum paampin maelum
      nadanthae selluvaen
      saaththaanin sakal valimaiyai vella
      athikaaram enakkunndu
    5. iravin payangaram pakalin ampu
      etharkum payamillai
      unnatha thaevan enathu ataikkalam
      thangum uraividam
    6. thaevanaich saarnthu vaalkinta enakku
      entum viduthalai
      avarathu naamam arintha enakku
      avarae ataikkalam
    7. aapaththu naeram kooppidum enakku
      entum pathilunndu
      ennodu irunthu viduthalai koduththu
      ennai uyarththuvaar
  • Enrenrum Jeevippoer என்றென்றும் ஜீவிப்போர்

    1. என்றென்றும் ஜீவிப்போர்
      அதரிசனர்
      எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
      மா மேன்மை மகத்துவர்
      அநாதியோராம்
      சர்வவல்லோர் வென்றோர்
      நாமம் போற்றுவோம்.
    2. ஓய்வோ துரிதமோ இன்றி
      ஒளிபோல்
      ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
      வான் எட்டும் மலைபோல் உம்
      நீதி நிற்கும்
      அன்பு நன்மை பெய்யும்
      உந்தன் மேகமும்.
    3. பேருயிர் சிற்றுயிர்
      ஜீவன் தேவரீர்
      யாவர்க்குள்ளும் உய்வீர்
      மெய்யாம் ஜீவன் நீர்
      மலர் இலைபோல்
      மலர்வோம் செழிப்போம்
      உதிர்வோம் சாவோம்
      நீரோ மாறாதோராம்.
    4. மா மாட்சி பிதா தூய
      ஜோதி தந்தாய்
      தாழுவர் உம் தூதர்
      மா வணக்கமாய்
      துதிப்போம் மகத்தாய்க்
      காணத் தோற்றுவீர்
      கண் கூசும் ஜோதியாம்
      ஜோதி தேவரீர்.

    Enrenrum Jeevippoer Lyrics in English

    1. ententum jeevippor
      atharisanar
      etta oliyilullor sarvanjaanar
      maa maenmai makaththuvar
      anaathiyoraam
      sarvavallor ventor
      naamam pottuvom.
    2. oyvo thurithamo inti
      olipol
      odungaa ponta sakthiyodaalvathaal
      vaan ettum malaipol um
      neethi nirkum
      anpu nanmai peyyum
      unthan maekamum.
    3. paeruyir sittuyir
      jeevan thaevareer
      yaavarkkullum uyveer
      meyyaam jeevan neer
      malar ilaipol
      malarvom selippom
      uthirvom saavom
      neero maaraathoraam.
    4. maa maatchi pithaa thooya
      jothi thanthaay
      thaaluvar um thoothar
      maa vanakkamaay
      thuthippom makaththaayk
      kaanath thottuveer
      kann koosum jothiyaam
      jothi thaevareer.
  • Ennuyire ennuyire en என்னுயிரே என்னுயிரே என்

    என்னுயிரே என்னுயிரே
    என் இதயத்தில் வாழ்பவரே
    பேச்சினிலும் என் மூச்சினிலும்
    நினைவிலும் கலந்தவரே

    நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
    இயேசு இயேசுசென்று சொல்லிடுதே
    ராவிலும் பகலிலும் இருதயமும்
    என் இயேசுவுக்காக துடிக்கிறதே
    உள்ளமெல்லாம் உடலெல்லாம்
    உம் நினைவாய் இருகின்றதே

    எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
    எனக்காகவே மரித்துயிர்த்தீரே
    இந்த செயலாலே என் இருதயத்தை
    உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
    உம் அன்பாலே நான் மயங்கி
    உம்மை நேசிக்க துணிந்தேனே

    இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே – இனி
    நானும் எனக்கு சொந்தமல்ல
    எனதெல்லாமே இனி உம் சொந்தமே
    இதயத்திலேயும் உம்மை தவிர
    வேறு எவருக்கும் இடமில்லையே


    Ennuyire ennuyire en Lyrics in English

    ennuyirae ennuyirae
    en ithayaththil vaalpavarae
    paechchinilum en moochchinilum
    ninaivilum kalanthavarae

    naan vidum moochchum poluthellaam
    Yesu Yesusentu solliduthae
    raavilum pakalilum iruthayamum
    en Yesuvukkaaka thutikkirathae
    ullamellaam udalellaam
    um ninaivaay irukintathae

    enakkaakavae iraththam sinthineerae
    enakkaakavae mariththuyirththeerae
    intha seyalaalae en iruthayaththai
    ummilae parikoduththida seytheerae
    um anpaalae naan mayangi
    ummai naesikka thunninthaenae

    irulaay kidantha thaekamellaam
    thaeva aalayam aakinathae – ini
    naanum enakku sonthamalla
    enathellaamae ini um sonthamae
    ithayaththilaeyum ummai thavira
    vaetru evarukkum idamillaiyae

  • Ennuyirae Kalakkam Kollathae என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2

    கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

    கரையாத அவரன்பு குறையாது – 2

    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2

    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

    துணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2

    தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2

    உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

    உலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2

    என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2


    Ennuyirae Kalakkam Kollathae Lyrics in English

    ennuyirae ennuyirae kalakkam kollaathae

    kaalamellaam kaakkum thaevan unnoduthaan – 2

    kann kaanum selvangal karainthotip ponaalum

    karaiyaatha avaranpu kuraiyaathu – 2

    kannnnaaka ennaalum kaaththiduvaar – 2

    thunpangal vanthaalum thuyarangal soolnthaalum

    thunnaiyaalan irukkintar thikaiyaathae – 2

    thol meethu unaith thaangi nadaththiduvaar – 2

    ulakellaam veruththaalum uravellaam maranthaalum

    ulakaalum mannavan unakkunndu – 2

    ententum than anpil thaettiduvaar – 2

  • Ennoetirum Maa Naesa Karththarae என்னோடிரும் மா நேச கர்த்தரே

    1. என்னோடிரும் மா நேச கர்த்தரே
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
      மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
      நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்
    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்
      இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
      கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
      மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்
    3. நீர் கூடநின்று அருள் புரியும்
      பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
      என் துணை நீர் என் தஞ்சமாயிரும்
      இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்
    4. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்
      நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்
      சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
      நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்
    5. நான் சாகும் அந்தகார நேரத்தில்
      உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
      விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
      வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

    Ennoetirum Maa Naesa Karththarae Lyrics in English
    Yesuvae engal thunnai

    1. ennotirum maa naesa karththarae
      velichcham mangi iruttayitte
      mattaோr sakaayam atta pothilum
      neengaa oththaasai neer ennotirum
    2. neermael kumilipol en aayusum
      immaiyin inpa vaalvum neengidum
      kann kannda yaavum maari vaadidum
      maaraatha karththar neer ennotirum
    3. neer koodanintu arul puriyum
      pisaasin kannnnikku naan thappavum
      en thunnai neer en thanjamaayirum
      ikkattil ellaam neer ennotirum
    4. neer aaseervathiththaal kannnneer vitaen
      neerae ennotirunthaal anjitaen
      saavae engae un koorum jeyamum?
      naan ummaal vella neer ennotirum
    5. naan saakum anthakaara naeraththil
      um siluvaiyaik kaattum saakaiyil
      vinn jothi veesi irul neekkidum
      vaalnaal saangaalilum ennotirum
  • Ennodu Pesum Yesuve என்னோடு பேசும் இயேசுவே

    என்னோடு பேசும் இயேசுவே
    நீர் வந்து பேசாதிருந்தால்
    என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
    என் வாழ்க்கை சிதைந்து போகுமே

    தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
    தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
    நான் உந்தன் குழந்தை அல்லவோ
    என்னோடு பேசமாட்டீரோ ?

    உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
    உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
    அவைகளோடு பேசினீரே
    என்னோடு பேசமாட்டீரோ ?


    Ennodu Pesum Yesuve Lyrics in English

    ennodu paesum Yesuvae
    neer vanthu paesaathirunthaal
    en vaalkkai tholainthupokumae
    en vaalkkai sithainthu pokumae

    thanthai than kulanthai kooda paesaathiruppaaro
    thaayum kulanthai kaetka konjaathiruppaalo
    naan unthan kulanthai allavo
    ennodu paesamaattiro ?

    um vaarththaiyaalae kadal thalaikuninthathu
    um vaarththaiyaalae kaattu thirumpip ponathu
    avaikalodu paesineerae
    ennodu paesamaattiro ?

  • Ennodu Nee Paesa Vanthai என்னோடு நீ பேச வந்தாய்

    என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்

    என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையே

    உன் நினைவின்றி வாழ்வில்லையே

    இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ

    உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ

    தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்

    தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

    உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ

    மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ

    என் பாதையில் முன் போக வா

    கண் போலவே எனைக் காக்க வா

    ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே


    Ennodu Nee Paesa Vanthai Lyrics in English

    ennodu nee paesa vanthaay en vaalvai nee maatti nintay

    en theyvamae – 2 neeyinti naanillaiyae

    un ninaivinti vaalvillaiyae

    ithayath thaakam nee irulil theepam nee

    uthayak kaalam nee uravin paalam nee

    thallaati naan thadumaarinaen kannmooti naan valimaarinaen

    theeyaakum thunpangalil nee thaayaakith thaalaattinaay

    uyirin geetham nee ulakin vaetham nee

    malaiyin maekam nee malarin manamum nee

    en paathaiyil mun poka vaa

    kann polavae enaik kaakka vaa

    aatharam neeyaakavae un anponte enathaakavae

  • Ennodu kooda sernthu என்னோடு கூட சேர்ந்து

    என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
    ஆமென் ஆல்லேலூயா
    என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
    ஆமென் அல்லேலூயா

    நீரே சர்வ வல்ல தேவனே
    நீரே நாங்கள் நம்பும் தேவனே
    நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
    ஆமென் அல்லேலூயா

    பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
    நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
    இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
    இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

    யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
    யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
    சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
    சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே


    Ennodu kooda sernthu Lyrics in English

    ennodu kooda sernthu avarai paaduveerkalaa
    aamen aallaelooyaa
    ennodu kooda sernthu avarai thuthippeerkalaa
    aamen allaelooyaa

    neerae sarva valla thaevanae
    neerae naangal nampum thaevanae
    neerae engal thuthikku paaththirar
    aamen allaelooyaa

    peyar solli alaiththavar avarae avarae
    nam thaalvil ninaiththavar avarae avarae
    immattum nadaththinavar avarae avarae
    inimaelum nadaththupavar avarae avarae

    yuththaththil vallavar avarae avarae
    yoothaavin raajasingam avarae avarae
    senaikalin karththarum avarae avarae
    sarvaththai aalpavar avarae avarae

  • Ennodu eruppavare என்னோடு இருப்பவரே

    என்னோடு இருப்பவரே இயேசுவே
    எனக்காக வாழ்பவரே
    கோடான கோடி உள்ளங்கள் தேடி
    பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே

    என்னில் வாழ்வது நானுமல்ல
    இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
    கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்
    கன்மலையுமானீர் – கர்த்தாவே என்
    நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்
    அல்லேலூயா அல்லேலூயா
    உம்மில் என்னை மறந்தேனய்யா

    காற்றும் கடலும் கல்மழையும்
    கானம் பாடிபோற்றுமே
    துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
    தூயவர் புகழ் பாடுமே
    சிறகுகள் அடித்திடும் பறவையுமே
    சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
    அல்லேலூயா அல்லேலூயா
    நானும் சேர்ந்து துதித்திடுவேன்

    சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்
    சூழ்ந்து உம்மை போற்றுமே
    வானிலும் பூவிலும் உள்ளவை யாவும்
    வாழ்த்தி வலம் வருமே
    வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ
    வானவரே உம் மகிமையல்லோ
    அல்லேலூயா அல்லேலூயா
    துதி கனம் மகிமை உமக்கே


    Ennodu eruppavare Lyrics in English

    ennodu iruppavarae Yesuvae
    enakkaaka vaalpavarae
    kodaana koti ullangal thaeti
    paati makilnthidumae um paatham panninthidumae

    ennil vaalvathu naanumalla
    Yesuvae ennil vaalkinteer
    karththar enpelanum geethamumaaneer
    kanmalaiyumaaneer – karththaavae en
    nilalaaneer en maraividamaay neeraaneer
    allaelooyaa allaelooyaa
    ummil ennai maranthaenayyaa

    kaattum kadalum kalmalaiyum
    kaanam paatipottumae
    thullidum aarum pongidum oottum
    thooyavar pukal paadumae
    sirakukal atiththidum paravaiyumae
    sinthai kulirnthida thuthiththidumae
    allaelooyaa allaelooyaa
    naanum sernthu thuthiththiduvaen

    sooriya santhiran natchaththirangal
    soolnthu ummai pottumae
    vaanilum poovilum ullavai yaavum
    vaalththi valam varumae
    vaanukkum poomikkum uyarnthathallo
    vaanavarae um makimaiyallo
    allaelooyaa allaelooyaa
    thuthi kanam makimai umakkae

  • Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும், மா நேச கர்த்தரே

    1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
      மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
      நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
      இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
      கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
      மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
    3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
      வராமல், சாந்தம் தயை கிருபை
      நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
      நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
    4. நீர் கூடநின்று அருள் புரியும்;
      பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
      என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
      இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
    5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
      நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
      சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
      நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
    6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
      உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
      விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
      வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

    Ennodirum Maa Nesa Karthare Lyrics in English

    1. ennotirum, maa naesa karththarae,
      velichcham mangi iruttayitte;
      mattaோr sakaayam attapothilum,
      neengaa oththaasai neer, ennotirum.
    2. neermael kumilipol en aayusum,
      immaiyin inpa vaalvum neengidum;
      kann kannda yaavum maari vaadidum;
      maaraatha karththar neer, ennotirum.
    3. niyaayam theerpporaaka ennanntai
      varaamal, saantham thayai kirupai
      niraintha meetparaaka sernthidum;
      neer paavi naesarae, ennotirum.
    4. neer koodanintu arul puriyum;
      pisaasin kannnnikku naan thappavum
      en thunnai neer, en thanjamaayirum;
      ikkattil ellaam neer ennotirum.
    5. neer aaseervathiththaal kannnneer vitaen;
      neerae ennotirunthaal anjitaen;
      saavae, engae un koorum jeyamum?
      naan ummaal vella neer ennotirum.
    6. naan saakum anthakaara naeraththil
      um siluvaiyaik kaattum; saakaiyil
      vinn jothi veesi irul neekkidum;
      vaalnaal saangaalilum ennotirum.