Anbae Entennai

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன் – 2

நான் தனிமை என்றெண்ணும்போது
தாங்கி கொண்டீரே
தயவால் அணைத்துக்கொண்டீரே
நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே

  1. என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்
    அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே – 2
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே
  2. நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்
    என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே – 2
    நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2
    என்னை நான் தாழ்த்துகின்றேன் – அன்பே

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply