Author: admin

  • Nenjae Nenjae Iraivanai நெஞ்சே நெஞ்சே இறைவனை

    நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு

    தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு

    வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்

    எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு

    நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்

    கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்

    கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்

    கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்

    நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு

    அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே

    ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே

    வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்

    தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்

    நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு


    Nenjae Nenjae Iraivanai Lyrics in English

    nenjae nenjae iraivanaip pottip paadidu

    thanjam entum avarae entu vaalththip paadidu

    vallavaraam iraivan vaalvil nanmai pala purinthaar

    ellaiyillaatha inpap perukkil innisaip paadidu

    nilavalakum malaiyalakum iraivan peyaraip paadattum

    kadalalakum kathiralakum kadavul anpaik koorattum

    kadalaiyae piriththuk kadanthida uthavinaar

    kalakam purinthorai kalangidach seythaar

    nanti sol nenjae irai thantha nalla vaalvirku

    anpalakum arivalakum avar tharum aasiyae

    oottalakum uyiralakum iraivanin maatchiyae

    vaalvenum paathaiyil veelum vaelaiyil

    thaangidum thaayaay thanaith thanthaar

    nanti sol nenjae irai thantha nalla vaalvirku

  • Nenjae Nee நெஞ்சமே நீ

    நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய்
    தேவனை நோக்கி அமர்ந்திரு

    நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
    விரைவில் வருமே வந்திடுமே

    உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
    உன்னோடு பேசுகிறார்
    பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்
    பெயர் சொல்லி நான் அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்

    எனது பார்வையில்
    விலையேறப் பெற்றவன் நீ
    மதிப்பிற்குரியவன் நீ
    பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
    அன்பிற்கு எல்லை இல்லை
    கிருபை தொடர்கின்றது

    உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
    ஜனங்கள் தந்திடுவேன்
    கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
    திரள்கூட்டம் வந்திடுமே

    நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
    வருமே வந்திடுமே

    வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
    கட்டளையிடு மகனே (மகளே)
    தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
    ஆணையிடு மகனே (மகளே)

    என்னைக் கேளும் நாடுகளை நான்
    சொந்தமாக்கிடுவேன்
    பூவுலகம் அதன் எல்லைகள் எல்லாம்
    உனது உடைமையாகும்


    Nenjae nee Lyrics in English

    nenjamae nee aen kalangukiraay
    thaevanai Nnokki amarnthiru

    nee ethirpaarkkum nanmaikal
    viraivil varumae vanthidumae

    unakkul vaalpavar uruvaakki makilpavar
    unnodu paesukiraar
    payappadaathae unnai meettukkonntaen
    peyar solli naan alaiththaen
    enakkae nee sontham

    enathu paarvaiyil
    vilaiyaerap pettavan nee
    mathippirkuriyavan nee
    paeranpinaal iluththuk konntaen
    anpirku ellai illai
    kirupai thodarkintathu

    un jeevanukgeedaay makkalinangal
    janangal thanthiduvaen
    kilakku maerku thisaikalil irunthu
    thiralkoottam vanthidumae

    nee ethirpaarkkum elupputhal thaesaththilae
    varumae vanthidumae

    vadapuram Nnokki vittuvidu entu
    kattalaiyidu makanae (makalae)
    thenpuram Nnokki kodu kodu entu
    aannaiyidu makanae (makalae)

    ennaik kaelum naadukalai naan
    sonthamaakkiduvaen
    poovulakam athan ellaikal ellaam
    unathu utaimaiyaakum

  • Nelaiilla Ulagu Nijamilla Uravu நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்

    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
      ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
      வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
      வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
      நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
      நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா
    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
      பொழுதிங்கு போகுது கழிந்து
      உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
      ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
      நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
      நீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா

    Nelaiilla Ulagu Nijamilla Uravu Lyrics in English

    nilaiyillaa ulaku nijamillaa uravu
    nilaiyaanathontum ingillai
    naettum intum entum maaraatha theyvam
    nee mattum pothum eppothum
    nee mattum pothum nee mattum pothum
    nee mattum pothum eppothum

    1. aasaiyilae piranthu aanavaththil thodarnthu
      aati ingu adanguthu vaalkkai
      vaalvutharum vaarththai vaalkkaithanai valarththaal
      vasantham vanthu nammil entum thangum
      nee mattum pothum en vaalvu maarum
      nee mattum pothum eppothum — nilaiyillaa
    2. poymaiyilae vilunthu poliyaaka nadanthu
      poluthingu pokuthu kalinthu
      unnmaithanai unarnthu uruthiyudan elunthaal
      oothiyangal thaevaiyillai namakku
      nee mattum pothum en vaalvu maarum
      nee mattum pothum eppothum — nilaiyillaa
  • Negnsamae Kethsaemanaekku நெஞ்சமே கெத்சேமனேக்கு வா

    நெஞ்சமே கெத்சேமனேக்கு வா

    1. நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?
      சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்
    2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சிää அங்கலாய்த்து வாடுகின்றார்
      தேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்
    3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி
      ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே
    4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
      எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே
    5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே
      குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ?
    6. வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்
      தான் சஞ்சலத்தோடு முழந்தாள் நின்று வேண்டுகிறார்.
    7. தாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ
      ஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

    Negnsamae Kethsaemanaekku Lyrics in English

    nenjamae kethsemanaekku vaa

    1. nenjamae kethsemanaekku nee nadanthu vanthidaayo?
      sanjalaththaal nenjurukith thayangukintar aanndavanaar
    2. aaththumaththil vaathai minjiää angalaayththu vaadukintar
      thaettuvaar ingaarumintith thiyangukintar aanndavanaar
    3. thaeva kopath theechchaூlaiyil sinthai nonthu venthuruki
      aavalaayth tharaiyil veelnthu aluthu jepam seykintarae
    4. appaa pithaavae ippaathram akalachcheyyum siththamaanaal
      eppatiyum nin siththampol enakkaakattum enkintarae
    5. iraththa vaervaiyaal thaekam meththa nanainthirukkuthae
      kuttam ontum seythidaatha kottavarkkiv vaathai aeno?
    6. vaanaththilirunthor thoothan vanthavaraip palappaduththath
      thaan sanjalaththodu mulanthaal nintu vaenndukiraar.
    7. thaangaொnnaa niththiraikonndu than seesharkal urangivila
      aangavar thaniththirunthu angalaayththu vaadukintar
  • Negnsam Agnsavaentaam நெஞ்சம் அஞ்சவேண்டாம்

    பூமி எங்கும் செல்லுவோம்

    நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்
    உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகிறவன்

    1. அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை
      சிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை
      உள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்
      உள்ளம் துவள வேண்டாம் அல்லேலூயா!
    2. எக்காளம் ஊதவேண்டும் ஜாமக்காரரல்லவோ
      இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோ
      விசுவாச வீரரே வீறுகொண்டு எழுவீர்
      பூமி எங்கும் செல்லுவீர் அல்லேலூயா!
    3. எருசலேம் துவங்கி பூமி இறுதிவரை செல்லுங்கள்
      குமரிக் கரை தொடங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள்
      புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
      திருச்சபையைக் கட்டுங்கள் அல்லேலூயா

    Negnsam Agnsavaentaam Lyrics in English

    poomi engum selluvom

    nenjam anjavaenndaam seythi eduththuraippeer
    ungalaith thodukiravan enthan kannkalaith thodukiravan

    1. akkini kadalil nintar oru mutiyum karukavillai
      singak kepiyil erinthaar oru sethamum kaanavillai
      ullangai naduvil ungalaik kanntaen
      ullam thuvala vaenndaam allaelooyaa!
    2. ekkaalam oothavaenndum jaamakkaararallavo
      ikkaalam maunam konndaal kuttam nammaelallavo
      visuvaasa veerarae veerukonndu eluveer
      poomi engum selluveer allaelooyaa!
    3. erusalaem thuvangi poomi iruthivarai sellungal
      kumarik karai thodangi vadathisaiyin suvar thodungal
      purappattuch sellungal seedarkalaakkungal
      thiruchchapaiyaik kattungal allaelooyaa!
  • Neeyae Nirantharam நீயே நிரந்தரம்

    நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
    ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…

    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
    மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
    இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
    நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
    நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
    நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ…ஆ… — அம்மையப்பன்

    1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
      தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
      தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
      நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் — அம்மையப்பன்
    2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
      பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
      நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
      அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
      நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் — அம்மையப்பன்

    Neeyae Nirantharam Lyrics in English

    neeyae nirantharam, Yesuvae en vaalvil neeyae nirantharam
    aa…aa…aa…aa…aa…aa…

    ammaiyappan unthan anpae nirantharam
    maarum ulakil maaraa un uravae nirantharam
    immai vaalvil marumai iruppathu nirantharam – (2)
    naan maannda pinpum unnil uyirppathu nirantharam
    nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
    nirantharam, nirantharam, neeyae nirantharam aa…aa… — ammaiyappan

    1. thaayin anpu seykku ingae nirantharam
      thaayum thanthaiyum emakku neeyae nirantharam
      thaeyum vaalvil nampikkai neeyae nirantharam
      naan saayum pothu kaappathu neeyae nirantharam – (2)
      nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
      nirantharam, nirantharam, neeyae nirantharam — ammaiyappan
    2. selvangal konarum inpaththil illai nirantharam
      pathaviyum pukalum tharuvathu illai nirantharam
      nilai vaalvu ennum nijamaana neeyae nirantharam
      athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam – (2)
      nirantharam, nirantharam, neeyae nirantharam, neeyae nirantharam
      nirantharam, nirantharam, neeyae nirantharam — ammaiyappan
  • Neeyae Enathu Oli நீயே எனது ஒளி

    நீயே எனது ஒளி நீயே எனது வழி

    நீயே எனது வாழ்வு இயேசையா – 2

    நான்கு திசையும் பாதைகள்
    சந்திக்கின்ற வேளைகள்
    நன்மை என்ன தீமை என்ன
    அறியாத கோலங்கள் – 2
    நீயே எங்கள் வழியாவாய்
    நீதியின் பாதையின் பொருளாவாய் – 2
    உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
    அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே

    துன்ப துயர நிகழ்வுகள்
    இருளின் ஆட்சிக் காலங்கள்
    தட்டுத் தடுமாறி விழத்
    தகுமான சூழல்கள் – 2
    நீயே எங்கள் ஒளியாவாய்
    நீதியின் பாதையின் சுடராவாய் – 2
    உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
    உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே


    Neeyae Enathu Oli Lyrics in English

    neeyae enathu oli neeyae enathu vali

    neeyae enathu vaalvu iyaesaiyaa – 2

    naanku thisaiyum paathaikal
    santhikkinta vaelaikal
    nanmai enna theemai enna
    ariyaatha kolangal – 2
    neeyae engal valiyaavaay
    neethiyin paathaiyin porulaavaay – 2
    umathu paathappathivukal emathu vaalvin thelivukal
    avattil naan nadanthaal vettiyin kanikal – neeyae

    thunpa thuyara nikalvukal
    irulin aatchik kaalangal
    thattuth thadumaari vilath
    thakumaana soolalkal – 2
    neeyae engal oliyaavaay
    neethiyin paathaiyin sudaraavaay – 2
    ummai naangal pottida poymai engum pokkida
    unnmaiyin iraivaa unatharul thaarum – neeyae

  • Neethiyil Nilaaithirunthu Um நீதியில் நிலைத்திருந்து உம்

    நீதியில் நிலைத்திருந்து – உம்
    திருமுகம் நான் காண்பேன்
    உயிர்தெழும் போது -உம்
    சாயலால் திருப்தியாவேன் -நீதியில்

    1. தேவனே, நீர் என் தேவன்
      அதிகாலமே தேடி வந்தேன்
      நீரின்றி வறண்ட நிலம்போல்
      ஏங்குகிறேன் தினம் உமக்காய்
      அல்லேலூயா ஓசான்னா
    2. ஜீவனை விட உம் அன்பு
      அது எத்தனை நல்லது
      புகழ்ந்திடுமே, என் உதடு
      மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
    3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
      உம் நாமம் சொல்லி துதிப்பேன்
      அறுசுவை உண்பது போல
      திருப்தியாகும் என் ஆன்மா
    4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
      இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
      துணையாளரே, உம் நிழலை
      தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

    Neethiyil Nilaaithirunthu Um Lyrics in English

    neethiyil nilaiththirunthu – um
    thirumukam naan kaannpaen
    uyirthelum pothu -um
    saayalaal thirupthiyaavaen -neethiyil

    1. thaevanae, neer en thaevan
      athikaalamae thaeti vanthaen
      neerinti varannda nilampol
      aengukiraen thinam umakkaay
      allaelooyaa osaannaa
    2. jeevanai vida um anpu
      athu eththanai nallathu
      pukalnthidumae, en uthadu
      makilnthidumae, en ullam
    3. uyir vaalum naatkalellaam
      um naamam solli thuthippaen
      arusuvai unnpathu pola
      thirupthiyaakum en aanmaa
    4. padukkaiyilae ummai ninaippaen
      iraachchaாmaththil thiyaanam seyvaen
      thunnaiyaalarae, um nilalai
      thodarnthu, nadanthu valarvaen.
  • Neethiyamo Neer Sollum நீதியாமோ நீர் சொல்லும் ஓய்

    நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
    நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்

    ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
    ஆதரித்திடுவதே யோக்கியம் ஓ கோ
    பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
    பாதை நடக்கில் சிலாக்யம்

    தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான்
    தற்பரனுக் கவன் கடனே என்று
    கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
    கடுநெஞ் சகல் மானிடனே

    அம்புடன் விதவையும் போட்ட காசை
    அதி வியப்பாய் காட்டப் புகழ்
    இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
    எவர்களும் அகத்தினில் நாட்ட

    பிறர் புகழும்படி இன்றே செய்தால்
    பிரயோசனமிலை என்றே பரன்
    மறையதில் விளம்பினார் நன்றே-அம்
    மாதிரி விலகாது நின்றே

    பிரிதானம் வாங்குதல் தீது அதைப்
    பறித்தறம் செய்தல் தகாது உமக்
    குரியதில் ஈவது போதம் இதில்
    ஓன்றி இருப்பதே நீதம்

    ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
    ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ
    வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
    வாழலாம் அதுவே மா பூர்த்தி


    Neethiyamo Neer Sollum Lyrics in English

    neethiyaamo neer sollum oy
    neriyulorae aram seyyaathirunthitil

    aathulark geevathae paakkiyam pirarai
    aathariththiduvathae yokkiyam o ko
    paathakam seyyil nirppaakkiyam motcha
    paathai nadakkil silaakyam

    thariththirark kiranguvon udanae iduvaan
    tharparanuk kavan kadanae entu
    karuththudan karuthiyil thidanae uraiththaar
    kadunenj sakal maanidanae

    ampudan vithavaiyum potta kaasai
    athi viyappaay kaattap pukal
    inpudan aval misai sootta athai
    evarkalum akaththinil naatta

    pirar pukalumpati inte seythaal
    pirayosanamilai ente paran
    maraiyathil vilampinaar nante-am
    maathiri vilakaathu ninte

    pirithaanam vaanguthal theethu athaip
    pariththaram seythal thakaathu umak
    kuriyathil eevathu potham ithil
    onti iruppathae neetham

    aelaikat geeyaathu aasthi aiyae
    eenndu serththitil enna geerththi itho
    vaalula katainthitil naerththi entum
    vaalalaam athuvae maa poorththi

  • Neethiman Selithu Vaalvan நீதிமான் செழித்து வாழ்வான்

    நீதிமான் செழித்து வாழ்வான்
    நீதிமான் பனையைப் போல
    செழித்து வாழ்வான்
    லீபனோனின் கேதுருவாய்
    வளருவான் (2)

    1. தீமையை வெறுத்திடுங்கள்
      நன்மையே செய்திடுங்கள்
      கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
      செழிப்படைய செய்வார் – நீதி
    2. கலங்கிடாதிருங்கள்
      கண்ணீர் விடாதிருங்கள்
      கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
      செழிப்படைய செய்வார் – நீதி
    3. சிறுமைப்பட்ட நாட்கள்
      துன்பத்தின் வருடங்கள்
      சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
      செழிப்படையச் செய்வார் – நீதி
    4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
      அநேக நாள் பிறகு அதின் பலனை
      களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
      செழிப்படையச் செய்வார் – நீதி

    Neethiman Selithu Vaalvan Lyrics in English

    neethimaan seliththu vaalvaan
    neethimaan panaiyaip pola
    seliththu vaalvaan
    leepanonin kaethuruvaay
    valaruvaan (2)

    1. theemaiyai veruththidungal
      nanmaiyae seythidungal
      karththar nammotiruppaar – nammai
      selippataiya seyvaar – neethi
    2. kalangidaathirungal
      kannnneer vidaathirungal
      karththarin saatchikalaay – nammai
      selippataiya seyvaar – neethi
    3. sirumaippatta naatkal
      thunpaththin varudangal
      sariyaay makilchchiyaakkuvaar – nammai
      selippataiyach seyvaar – neethi
    4. aakaaraththai thannnneeril podu
      anaeka naal piraku athin palanai
      kalikoornthu kaanach seyvaar – nammai
      selippataiyach seyvaar – neethi