Author: admin

  • Malaigal Ellam Valigalaguvar மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
    நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
    கலங்காதே திகையாதே
    நிச்சயமாகவே முடிவு உண்டு

    ஆபிரகாமின் தேவன் அவர்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் அவர்
    நம்முடைய தேவன்

    பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
    முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
    இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

    பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
    உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
    வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
    இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

    தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
    ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
    வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
    இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே


    Malaigal Ellam Valigalaguvar Lyrics in English

    malaikalellaam valikalaakkuvaar
    nam paathaiyellaam sevvaiyaakkuvaar
    kalangaathae thikaiyaathae
    nichchayamaakavae mutivu unndu

    aapirakaamin thaevan avar
    eesaakkin thaevan
    yaakkopin thaevan avar
    nammutaiya thaevan

    periya parvathamae emmaaththiram
    serupaapol munnae samamaakkuvaay
    muththirai mothiramaay therinthukonndaarae
    Yesuvin naamaththaalae jeyam peruvomae

    poomi anaiththirkkum raajaathi raajan
    unnathamaanavarai thuthiyaalae uyarththiduvom
    vennkala kathavellaam utaiththiduvaarae
    irumpu thaalppaalai muriththiduvaarae

    thataikalai utaippavar nammunnae povaar
    osannaa jeyam entu aarpparippomae
    villai utaiththiduvaar eettiyai muriththiduvaar
    iraththangalai akkiniyaal sutterippaarae

  • Malai Mael Aeri Vanthaen Thakappanae மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே

    மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்

    1. காலையும் மாலையும் மதிய வேளையும்
      கைகள் உமை நோக்கி உயரணுமே
      அழியும் உலகத்திற்காய் கதறணுமே
      அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
    2. உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
      ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
      வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
      வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
    3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
      தீர்க்கதரிசனம் சொல்லணும்
      ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்
      வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
    4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
      ஆதிசயம் காணணுமே தகப்பனே
      ஊழியம் செய்யணுமே தகப்பனே
      ஓடி ஓடி உழைக்கணுமே

    Malai Mael Aeri Vanthaen Thakappanae Lyrics in English

    malai mael aeri vanthaen thakappanae
    maruroopam aakanumae thakappanae – jepa
    ulakai marakkanumae thakappanae
    umkural kaetkanum naalmuluthum

    1. kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
      kaikal umai Nnokki uyaranumae
      aliyum ulakaththirkaay katharanumae
      aruththuk kalanjiyaththil serkkanumae
    2. umathu vaarththaikal unavaay maaranum
      ovvoru naalum thiyaanikkanum
      vaethaththin velichchaththilae nadakkanum
      vettik geethangal naan paadanum
    3. njaanaththaip pothiththu arivai unarththi
      theerkkatharisanam sollanum
      aavikal pathuththariyum varam vaenndum
      viyaathikal neekkum aattal vaenndum
    4. aaviyil nirampanum ayalmoli paesanum
      aathisayam kaananumae thakappanae
      ooliyam seyyanumae thakappanae
      oti oti ulaikkanumae
  • Malae malae மேலே மேலே

    உம்மை உயர்த்திடுவேன் (மேலே மேலே)
    எந்தன் ஆசை மேலான உந்தன் ஒருவர் மேலே

    கன்மலை மேல் நிறுத்தி
    என் அடிகள் பெலப்படுத்தி
    தேவனை துதிக்கும் புது பாடல் தந்தீர்
    அநேகர் அதை கண்டு
    பயந்து உம்மை நம்பி
    என்னோடு சேர்ந்து உம்மை பாட செய்வீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    கன்மலை மேல் என்னை நிறுத்தினதால் நன்றி சொல்வேன்

    மேலான கிருபைகள்
    மேலான தரிசனங்கள்
    மேலானதெல்லாம் எனக்காய் வைத்தீர்
    பூமியிலே கட்டவிழ்ப்பேன்
    பரலோகத்தில் எடுப்பேன்
    மேலான பொக்கிஷங்கள் திறந்து தந்தீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    மேலானதை நீர் வைத்ததாலே நன்றி சொல்வேன்

    அம்புகள் பறந்தாலும்
    கொள்ளை நோய் நடந்தாலும்
    சங்காரம் தொடர்ந்தாலும் பயமில்லையே
    உம்மிலே வாஞ்சையாய் நான்
    உம் நாமம் அறிந்ததினால்
    உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து விட்டீர்
    அதனால் (நன்றி சொல்வேன்)
    உயர்ந்த அடைக்கலத்தில் வைத்ததினால் நன்றி சொல்வேன்


    Malae malae Lyrics in English

    ummai uyarththiduvaen (maelae maelae)
    enthan aasai maelaana unthan oruvar maelae

    kanmalai mael niruththi
    en atikal pelappaduththi
    thaevanai thuthikkum puthu paadal thantheer
    anaekar athai kanndu
    payanthu ummai nampi
    ennodu sernthu ummai paada seyveer
    athanaal (nanti solvaen)
    kanmalai mael ennai niruththinathaal nanti solvaen

    maelaana kirupaikal
    maelaana tharisanangal
    maelaanathellaam enakkaay vaiththeer
    poomiyilae kattavilppaen
    paralokaththil eduppaen
    maelaana pokkishangal thiranthu thantheer
    athanaal (nanti solvaen)
    maelaanathai neer vaiththathaalae nanti solvaen

    ampukal paranthaalum
    kollai Nnoy nadanthaalum
    sangaaram thodarnthaalum payamillaiyae
    ummilae vaanjaiyaay naan
    um naamam arinthathinaal
    uyarntha ataikkalaththil vaiththu vittir
    athanaal (nanti solvaen)
    uyarntha ataikkalaththil vaiththathinaal nanti solvaen

  • Makimaiyataiyum Iyaesu Raajanae மகிமையடையும் இயேசு ராஜனே

    மகிமையடையும் இயேசு ராஜனே
    மாறாத் நல்ல மேய்ப்பனே
    உந்தன் திருநாமம் வாழ்க
    உலகெங்கும் உம் அரசு வருக – வருக

    1. உலகமெல்லாம் மீட்படைய
      உம் ஜீவன் தந்தீரையா
    2. பாவமெல்லாம் கழுவிடவே
      உம் இரத்தம் சிந்தினீரே
    3. சாபமெல்லாம் போக்கிடவே
      முள்முடி தாங்கினீரே
    4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
      என் துக்கம் சுமந்தீரையா
    5. கசையடிகள் எனக்காக
      காயங்கள் எனக்காக
    6. நோய்களெல்லாம் நீக்கிடவே
      காயங்கள் பட்டீரையா

    Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English

    makimaiyataiyum Yesu raajanae
    maaraath nalla maeyppanae
    unthan thirunaamam vaalka
    ulakengum um arasu varuka – varuka

    1. ulakamellaam meetpataiya
      um jeevan thantheeraiyaa
    2. paavamellaam kaluvidavae
      um iraththam sinthineerae
    3. saapamellaam pokkidavae
      mulmuti thaangineerae
    4. en paadukal aettuk konnteer
      en thukkam sumantheeraiyaa
    5. kasaiyatikal enakkaaka
      kaayangal enakkaaka
    6. Nnoykalellaam neekkidavae
      kaayangal pattiraiyaa
  • Makimaiyaai Vetri Sirantha Karththarai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

    மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
    மகிழ்ந்து பாடிடுவேன் (2)

    1.கர்த்தர் என்பது அவர் நாமம்
    யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன்
    என் கீதமுமானவர்
    கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்

    2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
    ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
    ஆழங்களில் அமிழ்ந்து போகவே
    ஆச்சரியமே அவர் செயலே

    3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
    பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
    நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
    நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்

    4.கிருபையால் அழைத்த தேவனை
    கரம் குவித்து நான் பாடுவேன்
    துதிகளில் பயப்படத்தக்கவரை
    துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்


    Makimaiyaai Vetri Sirantha Karththarai Lyrics in English

    makimaiyaay vetti sirantha karththarai
    makilnthu paadiduvaen (2)

    1.karththar enpathu avar naamam
    yuththaththil vallavar avarae karththar en pelan
    en geethamumaanavar
    karampitiththu en iratchippumaanaar

    2.amilnthathu paarvonin senai
    aali avarkalai mootikkollavae
    aalangalil amilnthu pokavae
    aachchariyamae avar seyalae

    3.pelaththinaal siranthavar valakkaramae
    pakainjanai norukki aliththathuvae
    neettineer makaththuva valakkaraththai
    naattineer parisuththa parvathaththil

    4.kirupaiyaal alaiththa thaevanai
    karam kuviththu naan paaduvaen
    thuthikalil payappadaththakkavarai
    thuthi seluththi naan kempeerippaen

  • Makilnthirungal Makilnthirungal மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

    மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
    கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
    இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
    நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
    அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2)

    1. எல்லைகளை விரிவாக்குவார்
      தொல்லைகள் போக்கிடுவார் (2)
      எல்லாமே நமக்கு தந்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)
    2. துயரங்களை நீக்கிடுவார்
      காயங்கள் ஆற்றிடுவார் (2)
      பயங்களை போக்கி நடத்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)
    3. ஆசிகளை பொழிந்திடுவார்
      சந்தோஷம் தந்திடுவார் (2)
      கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
      இனி தோல்வியில்லை தோல்வியில்லை
      வெற்றி வெற்றியே (2)

    Makilnthirungal Makilnthirungal Lyrics in English

    makilnthirungal makilnthirungal
    karththaril makilnthirungal (2)
    ithayaththin vaennduthal niraivaettuvaar
    nam ithayaththin vaennduthal niraivaettuvaar
    allaelooyaa allaelooyaa alaelooyaa (2)

    1. ellaikalai virivaakkuvaar
      thollaikal pokkiduvaar (2)
      ellaamae namakku thanthiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
    2. thuyarangalai neekkiduvaar
      kaayangal aattiduvaar (2)
      payangalai pokki nadaththiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
    3. aasikalai polinthiduvaar
      santhosham thanthiduvaar (2)
      karangalaip pitiththu nadaththiduvaar
      ini tholviyillai tholviyillai
      vetti vettiyae (2)
  • Makanae Un Negnsenakku Thaaraayoe மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

    மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச
    வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

    1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
      அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
    2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை
      உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
    3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய
      பரகதி வாழ்வை இன்றே தேடாயோ?
    4. உலக வாழ்வினை விட்டகல்வாயே – மகா
      உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
    5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில்
      உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே

    Makanae Un Negnsenakku Thaaraayoe Lyrics in English

    makanae un nenjaெnakku thaaraayo? – motcha
    vaalvaith tharuvaen ithu paaraayo?

    1. akaththin asuththamellaam thutaippaenae – paava
      alukkai neekki arul koduppaenae
    2. un paavam muttum pari karippaenae – athai
      unnmaiyaay akatta yaan mariththaenae
    3. paavam anaiththumae vittaோdaayo? – nithya
      parakathi vaalvai inte thaedaayo?
    4. ulaka vaalvinai vittakalvaayae – makaa
      uvappaayk kathi eevaen makilvaayae
    5. untan aaththumaththai nee pataippaayae – athil
      unnathan vasikka idam koduppaayae
  • Maha menmaium மகா மேன்மையும்

    மகா மேன்மையும் அருமையுமான
    வாக்குத்தத்தங்களைக் கொடுத்து
    உந்தன் ஆசீர்வாதம்
    என் மேல் தங்கச் செய்தீரே
    உந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன்
    என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன்

    ஆராதிக்கின்றேன் என் நல்ல பிதாவே
    ஆராதிக்கின்றேன் என் மீட்பர் இயேசுவே
    ஆராதிக்கின்றேன் ஆவியானவரே

    சென்ற இடமெல்லாம் கூட வந்தவரே
    செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே
    ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே
    தேவைகளை பூரணமாய் பூர்த்தி செய்தீரே
    செம்மையான பாதையில் என்னை நடத்தி
    சேதமின்றி காத்துக்கொண்டீரே
    ஆவியோடும் உண்மையோடும் நான்
    உம்மை ஆராதிப்பேன் ஆயுள் முழுதும்

    கவலைகள் சூழ்ந்த எல்லா நேரங்களிலும்
    ஆறுதல் பெலன் தரும் வார்த்தை தந்தீரே
    வியாதியில் தெய்வீக சுகம் தந்தீரே
    விசுவாச போராட்டத்தில் ஜெயம் தந்தீரே
    நல்ல தேவன் உம்மைப்போலவே இந்த
    பாரில் வேறு யாருமில்லையே
    வல்லவரே பெரியவரே
    எந்தன் மேன்மைக்கு காரணரே

    இந்த புவி வாழ்க்கையில்
    உமக்காய் வாழ்வேன்
    உந்தன் வார்த்தை சத்தியத்தில்
    நிலைத்திருப்பேன் கனம் பண்ணுவேன்
    உந்தன் வேலை செய்வதை
    மேலாய் எண்ணுவேன்
    கனிகள் உள்ள கொடியாய்
    நான் உமக்காக படர்ந்திடுவேன்
    உந்தன் நாமம் மகிமைப்பட நான்
    எல்லா நாளும் உயர்ந்திருப்பேன்


    Maha menmaium Lyrics in English

    makaa maenmaiyum arumaiyumaana
    vaakkuththaththangalaik koduththu
    unthan aaseervaatham
    en mael thangach seytheerae
    unthan anpai paati pukalnthiduvaen
    en jeevan neerae ummaith thuthippaen

    aaraathikkinten en nalla pithaavae
    aaraathikkinten en meetpar Yesuvae
    aaraathikkinten aaviyaanavarae

    senta idamellaam kooda vanthavarae
    seytha ellaavattilum palan thantheerae
    jepangalukkellaam pathil thantheerae
    thaevaikalai pooranamaay poorththi seytheerae
    semmaiyaana paathaiyil ennai nadaththi
    sethaminti kaaththukkonnteerae
    aaviyodum unnmaiyodum naan
    ummai aaraathippaen aayul muluthum

    kavalaikal soolntha ellaa naerangalilum
    aaruthal pelan tharum vaarththai thantheerae
    viyaathiyil theyveeka sukam thantheerae
    visuvaasa poraattaththil jeyam thantheerae
    nalla thaevan ummaippolavae intha
    paaril vaetru yaarumillaiyae
    vallavarae periyavarae
    enthan maenmaikku kaaranarae

    intha puvi vaalkkaiyil
    umakkaay vaalvaen
    unthan vaarththai saththiyaththil
    nilaiththiruppaen kanam pannnuvaen
    unthan vaelai seyvathai
    maelaay ennnuvaen
    kanikal ulla kotiyaay
    naan umakkaaka padarnthiduvaen
    unthan naamam makimaippada naan
    ellaa naalum uyarnthiruppaen

  • Magizhvom magizhvom மகிழ்வோம் மகிழ்வோம்

    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
    இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

    ஆ… ஆனந்தமே பரமானந்தமே
    இது மாபெரும் பாக்கியமே…

    சின்னஞ்சிறு வயதில்
    என்னைக் குறித்துவிட்டார்
    தூரம் போயினும் கண்டு கொண்டார்
    தமது ஜீவனை எனக்கும் அளித்து
    ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

    எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
    என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
    என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
    அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

    அவர் வரும் நாளிலே
    என்னை கரம் அசைத்து
    அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
    அவர் சமுகமதில் அங்கே அவருடனே
    ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்


    Magizhvom magizhvom Lyrics in English

    makilvom makilvom thinam akamakilvom
    Yesu raajan nam sonthamaayinaar
    intha paarthalaththin sonthakkaarar avar
    enthan ullaththin sonthamaanaar

    aa… aananthamae paramaananthamae
    ithu maaperum paakkiyamae…

    sinnanjitru vayathil
    ennaik kuriththuvittar
    thooram poyinum kanndu konndaar
    thamathu jeevanai enakkum aliththu
    jeevan pettukkol enturaiththaar

    entha soolnilaiyum avar anpinintu
    ennaip pirikkaathu kaaththuk kolvaar
    ennai nampi avar thantha poruppathanai
    avar varum varai kaaththuk kolvaen

    avar varum naalilae
    ennai karam asaiththu
    anpaay kooppittu serththuk kolvaar
    avar samukamathil angae avarudanae
    aatippaatiyae makilnthiduvaen

  • Magizhnthu Kalikooru மகிழ்ந்து களிகூரு

    மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
    பயம் வேண்டாம்
    மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
    பெரியகாரியம் செய்திடுவார்

    1. தேவையை நினைத்து கலங்காதே
      தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
      கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
      கொடுப்பவர் உண்டு கொண்டாடு
    2. அப்பாவின் புகழை நீ பாடு
      அதுவே உனக்கு ளுயகநபரயசன
      தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
      எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
    3. மீனின் வயிற்றில் யோனா போல்
      கூனி குறுகி போனாயோ
      பலியிடு துதியை சப்தத்தோடு
      விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
    4. நிலையான நகரம் நமக்கில்லை
      வரப்போகும் நகரையே நாடுகிறோம்
      இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
      இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
    5. துதிக்கும் போது நம் நடுவில்
      உட்கார நாற்காலி போடுகிறோம்
      துதிகளை அரியணைக்கிடுவார்
      வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

    Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு Lyrics in English

    Magizhnthu Kalikooru
    makilnthu kalikooru makanae (lae)
    payam vaenndaam
    mannavan Yesu un (nam) naduvil
    periyakaariyam seythiduvaar

    1. thaevaiyai ninaiththu kalangaathae
      theyvaththaip paarththu nantisollu
      konjaththaik kanndu pulampaathae
      koduppavar unndu konndaadu
    2. appaavin pukalai nee paadu
      athuvae unakku luyakanaparayasana
      thappaamal makilnthu uravaadu
      eppothum vaalvaay sukaththodu
    3. meenin vayittil yonaa pol
      kooni kuruki ponaayo
      paliyidu thuthiyai sapthaththodu
      vilakidum ellaam vetkaththodu
    4. nilaiyaana nakaram namakkillai
      varappokum nakaraiyae naadukirom
      Yesuvai uyarththum sthoththirapali
      ippothum eppothum seluththiduvom
    5. thuthikkum pothu nam naduvil
      utkaara naarkaali podukirom
      thuthikalai ariyannaikkiduvaar
      vanthu amarnthu makilnthiduvaar