Author: admin

  • Manam makiznthu thinam மனம் மகிழ்ந்து தினம்

    மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
    ஆவியில் ஆர்ப்பரிப்போம்
    ஆத்தும நேசர் அன்பர் இயேசு
    வேகம் வருகின்றாரே

    ஆயத்தமாகிடுவோம் நாமே
    அயராது உழைத்திடுவோம்
    அல்லேலூயா அனந்தம்
    அவர் துதி பாடிடுவோம்

    விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
    உலகினை ஜெயித்திடுவோம்
    மகிமையை நோக்கி உலகினை மறந்து
    ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

    வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
    கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
    ஜீவ சுடரொளி பட்டயம்
    சாத்தானை ஜெயித்திடுவோம்

    ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
    ஜோதியாய் விளங்கிடுவோம்
    தேவ குமாரன் இராஜாதி இராஜன்
    வேகம் வருகினாரே


    Manam makiznthu thinam Lyrics in English

    manam makilnthu thinam pukalnthu
    aaviyil aarpparippom
    aaththuma naesar anpar Yesu
    vaekam varukintarae

    aayaththamaakiduvom naamae
    ayaraathu ulaiththiduvom
    allaelooyaa anantham
    avar thuthi paadiduvom

    visuvaasam anpu nampikkai konndu
    ulakinai jeyiththiduvom
    makimaiyai Nnokki ulakinai maranthu
    ottaththil jeyam peruvom

    vasanangal niraivaerum kataisik kaalam
    karuththinil kaik konndiduvom
    jeeva sudaroli pattayam
    saaththaanai jeyiththiduvom

    aaviyin varangal yaavumae pettu
    jothiyaay vilangiduvom
    thaeva kumaaran iraajaathi iraajan
    vaekam varukinaarae

  • Manam Makizha Iyaesuvae Naatu மனம் மகிழ இயேசுவே நாடு

    மனம் மகிழ இயேசுவே நாடு
    மாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே

    குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்
    குருசின் காட்சியை அண்டிடுவாய்
    தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவே
    தற்பரன் பாடுகள் ஏற்றனரே

    நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்
    வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்
    இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவே
    இயேசுவே சிலுவையில் அறையப்பட்டார்

    துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்
    ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்
    கொடுமை செய்யாதவர் கைவிடாரே
    கர்த்தரின் அன்பை ருசிப்பாயோ


    Manam Makizha Iyaesuvae Naatu Lyrics in English

    manam makila Yesuvae naadu
    maantharin thunpangal theerppavarae

    kunamaakkum thalumpukal kanndiduvaay
    kurusin kaatchiyai anndiduvaay
    thadumaarum ullangal thikalnthidavae
    tharparan paadukal aettanarae

    nerukkappattar namakkaay odukkappattar
    vaay thiravaamal antu poruththu nintar
    idukkannkalail unnaik kaaththidavae
    Yesuvae siluvaiyil araiyappattar

    thunmaarkkarodu thaalththappattar
    aisvariyamulloraay uyarththappattar
    kodumai seyyaathavar kaividaarae
    karththarin anpai rusippaayo

  • Manam Irangum Deivam Yesu மனமிரங்கும் தெய்வம் இயேசு

    மனமிரங்கும் தெய்வம் இயேசு
    சுகம் தந்து நடத்திச் செல்வார்
    யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
    சுகம் தரும் தெய்வம் இயேசு
    சுகம் இன்று தருகிறார்

    1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
      கரத்தைபிடித்துதூக்கினார்
      காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
      கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
    2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
      கரங்கள் நீட்டித் தொட்டார்
      சித்தமுண்டு சுத்தமாகு -என்று
      சொல்லி சுகத்தைத் தந்தார்
    3. நிமிர முடியாத கூனி -அன்று
      இயேசு அவளைக் கண்டார்
      கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
      நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
    4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
      இயேசுவே இரங்கும் என்றான்
      பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
      இயேசு பின்னே நடந்தான்

    Manam Irangum Deivam Yesu Lyrics in English

    manamirangum theyvam Yesu
    sukam thanthu nadaththich selvaar
    yaekovaa raqppaa..intum vaalkintar
    sukam tharum theyvam Yesu
    sukam intu tharukiraar

    1. paethuru veettukkul nulainthaar -maami
      karaththaipitiththuthookkinaar
      kaaychchal udanae antu neengittu
      karththar thonnduseythu makilnthaal
    2. kushdarokiyai kanndaar-Yesu
      karangal neettith thottar
      siththamunndu suththamaaku -entu
      solli sukaththaith thanthaar
    3. nimira mutiyaatha kooni -antu
      Yesu avalaik kanndaar
      kaikal avalmaelae vaiththaar-udan
      nimirnthu thuthikkach seythaar
    4. piravikkurudan parthimaeyu antu
      Yesuvae irangum entan
      paarvaiyatainthu makilnthaan-udan
      Yesu pinnae nadanthaan
  • Mamarai Pukazhum Mariyennum Malarae மாமறை புகழும் மரியென்னும் மலரே

    மாமறை புகழும் மரியென்னும் மலரே
    மாதரின் மா மணியே (2)

    அமலியாய் உதித்து அலகையை மிதித்து
    அவனியைக் காத்த ஆரணங்கே (2)
    உருவிலா இறைவன் கருவினில் மலர
    உறைவிடம் தந்த ஆலயமே!

    பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
    ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
    இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
    வானக வாழ்வை அளிப்பாயே!


    Mamarai Pukazhum Mariyennum Malarae Lyrics in English

    maamarai pukalum mariyennum malarae
    maatharin maa manniyae (2)

    amaliyaay uthiththu alakaiyai mithiththu
    avaniyaik kaaththa aaranangae (2)
    uruvilaa iraivan karuvinil malara
    uraividam thantha aalayamae!

    paliyinaich sumantha ulakinil piranthu
    oliyinai aettiya akal vilakkae (2)
    irulthirai akatti arul valikaatti
    vaanaka vaalvai alippaayae!

  • Malara Malara Velli Malare மலரே மலரே வெள்ளி மலரே

    மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்
    மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

    1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
      உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
      நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க
    2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
      உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
      நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

    Malara Malara Velli Malare Lyrics in English

    malarae malarae velli malarae pon manthaarappoluthu – im
    mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu

    1. vaanilae manthaappu vinn thoothar manathil sirippu
      ulakil amaithi vaalum makilchchi naalum nilavum
      neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
    2. vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae
      ulakam ummaik kaanum uvakai kollum naalum
      neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka
  • Malar Maname மலர் மணமே

    மலர் மணமே(3) வீசிடுதே
    மங்களமே(3) செழித்திடுதே

    ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமே
    ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
    ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்
    மங்களம் அன்று போல் இன்றும்
    என்றும் செழிக்குது மங்களம்

    தேவ திருச்சபையே தூய மணவாளியாய்
    தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்
    ஆவியில் ஜோடிக்கும்
    ஆதிமெய் அன்பினால்
    ஜோதி அன்பின் கயிற்றால்
    இணைத்தாசீர் தாருமே

    எபெனேசரானவரே இம்மானுவேலரே
    இறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரே
    உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
    திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட


    Malar Maname Lyrics in English

    malar manamae(3) veesiduthae
    mangalamae(3) seliththiduthae

    jeeva narumanamae(engal) thaeva thirumanamae
    aathiyil aethaenil aathaam aevaaludan
    aavi pithaa vaarththai moovar munnaal
    mangalam antu pol intum
    entum selikkuthu mangalam

    thaeva thiruchchapaiyae thooya manavaaliyaay
    thaevakumaaran (thiru)manam purivathupol
    aaviyil jotikkum
    aathimey anpinaal
    jothi anpin kayittaாl
    innaiththaaseer thaarumae

    epenaesaraanavarae immaanuvaelarae
    iruthivarailum iruppathaayuraiththeerae
    uruthi vaarththai ivar iruvaril thangida
    thirumana mangalam kirupaiyil vaalnthida

  • Malaiyana Nerathil Manam Sortha Velaiyil மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. எலியாவின் தேவனே
      அக்கினியை என்றும் தந்திடுவார் – 2
      கோலியாத்தை வென்ற தேவன்
      சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. அழைத்தவர் மாறாதவர்
      ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2
      உன்னையும் என்னையும் அவர் கைகளில்
      வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே – 2

    1. கஷ்டங்களை அறியும் தேவன்
      கண்ணீரையும் துடைத்திடுவார் – 2
      நோவாவின் பேழையில் இருந்ததுபோல்
      என்னோடும் கூட இருந்திடுவார் – 2

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
    மறவாத நேசர் தாங்குவாரே –2


    Malaiyana Nerathil Manam Sortha Velaiyil Lyrics in English

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. eliyaavin thaevanae
      akkiniyai entum thanthiduvaar – 2
      koliyaaththai venta thaevan
      saaththaanai jeyikka pelan tharuvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. alaiththavar maaraathavar
      ooliyap paathaiyil nadaththiduvaar – 2
      unnaiyum ennaiyum avar kaikalil
      varainthu ententum kaaththiduvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

    1. kashdangalai ariyum thaevan
      kannnneeraiyum thutaiththiduvaar – 2
      Nnovaavin paelaiyil irunthathupol
      ennodum kooda irunthiduvaar – 2

    malaiyaana naeraththil manam sorntha vaelaiyil
    maravaatha naesar thaanguvaarae – 2

  • Malaimel Yeri மலைமேல் ஏறி

    மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
    மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
    உலகை மறக்கணுமே தகப்பனே
    உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்

    காலையும் மாலையும் மதிய வேளையும்
    கைகள் உமை நோக்கி உயரணுமே
    அழியும் உலகத்திற்காய் கதறணுமே
    அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே

    உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
    ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
    வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
    வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்

    ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
    தீர்க்கதரிசனம் சொல்லணும்
    ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
    வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்


    Malaimel Yeri Lyrics in English

    malaimael aeri vanthaen thakappanae
    maruroopam aakanum thakappanae – jepa
    ulakai marakkanumae thakappanae
    um kural kaetkanum naalmuluthum

    kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
    kaikal umai Nnokki uyaranumae
    aliyum ulakaththirkaay katharanumae
    aruththuk kalanjiyaththil serkkanumae

    umathu vaarththaikal unavaay maaranum
    ovvoru naalum thiyaanikkanum
    vaethaththin velichchaththilae nadakkanum
    vettik geethangal naan paadanum

    njaanaththaip pothiththu arivai unarththi
    theerkkatharisanam sollanum
    aavikal pakuththariyum varam vaenndum
    viyaathikal neekkum aattal vaenndum

  • Malaimael Aeruvoem மலைமேல் ஏறுவோம்

    மலைமேல் ஏறுவோம்
    மரங்களை வெட்டுவோம்
    ஆலயம் கட்டுவோம்
    அவர் பணி செய்திடுவோம்
    நாடெங்கும் சென்றிடுவோம்
    நற்செய்தி சொல்லிடுவோம்
    சபைகளை நிரப்பிடுவோம்
    சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

    1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
      நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2
      வாழ்வது நியாயமா
      நாடெங்கும் சென்றிடுவோம்
    2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
      வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2
      வீணாய்ப் போவதேன்
      நாடெங்கும் சென்றிடுவோம்
    3. மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்
      படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
      பயமே வேண்டாம்
      நாடெங்கும் சென்றிடுவோம்
    4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
      அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
      அசட்டை பண்ணாதே
      நாடெங்கும் சென்றிடுவோம்
    5. ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
      மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
      மறுரூபமாக்கிடுவார்
      மலைமேல் ஏறுவோம்

    Malaimael Aeruvoem Lyrics in English

    malaimael aeruvom
    marangalai vettuvom
    aalayam kattuvom
    avar panni seythiduvom
    naadengum sentiduvom
    narseythi solliduvom
    sapaikalai nirappiduvom
    saatchiyaay vaalnthiduvom

    1. thaevanin veedu paalaayk kidakkuthae
      naamo namakkaay vaalvathu niyaayamaa – 2
      vaalvathu niyaayamaa
      naadengum sentiduvom
    2. thiralaay vithaiththum konjamaay aruppathaen
      varukinta panamellaam veennaayp povathaen – 2
      veennaayp povathaen
      naadengum sentiduvom
    3. manam thalaraamal panniyaith thodarungal
      pataiththavar nammodu payamae vaenndaam
      payamae vaenndaam
      naadengum sentiduvom
    4. thaevan thantha aarampa ooliyaththai
      arpamaay ennnnaathae asattaை pannnnaathae
      asattaை pannnnaathae
      naadengum sentiduvom
    5. janangal virumpukinta thalaivar vanthiduvaar
      makimaiyaal nirappiduvaar maruroopamaakkiduvaar
      maruroopamaakkiduvaar
      malaimael aeruvom
  • Malaimaa Nadhiyo Migu Aal Kadalo மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

    மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
    மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
    மீட்பர் சிலுவை சுமப்பேனே

    சரணங்கள்

    1. பள்ளம் மேடு தடை தாண்டியே
      பசாசின் கண்ணிக்கு நீங்கியே
      உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
      மெள்ள மெள்ள நடந்தே எனின்
      மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா
    2. இன்னல் துயர் பிணி வாதையில்
      ஈனரெனைத் தாக்கும் வேளையில்
      துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
      தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
      தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா
    3. பூலோக மேன்மை நாடிடேன்
      புவிமேவும் செல்வம் தேடிடேன்
      சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
      ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
      ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா

    Malaimaa Nadhiyo Migu Aal Kadalo Lyrics in English

    malaimaa nathiyo miku aal kadalo
    marul soolum kaanaka vanamo – engum
    meetpar siluvai sumappaenae

    saranangal

    1. pallam maedu thatai thaanntiyae
      pasaasin kannnnikku neengiyae
      ullaarvamudan vinn paarvaiyudan – naan
      mella mella nadanthae enin
      meetpar siluvai sumappaenae — malaimaa
    2. innal thuyar pinni vaathaiyil
      eenarenaith thaakkum vaelaiyil
      thunpam kalainthae thuyaram olinthae – naan
      thooyan paathaiyil oornthae avar
      thooyach siluvai sumappaenae — malaimaa
    3. pooloka maenmai naatitaen
      puvimaevum selvam thaetitaen
      seelan siluvai siriyaen maenmai – en
      jeevan vali marai Yesuvae – avar
      jeeva siluvai sumappaenae — malaimaa