Category: Tamil Worship Songs Lyrics

  • Ootu Nee ஓடு நீ

    முடிவு பரியந்தம் ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
    உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு

    1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
      எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
      நின்றான் உலகை வென்றானே – 2
    2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
      துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
      முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2
    3. ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது
      எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
      அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2
    4. சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது
      வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
      துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு – 2

    Ootu Nee Lyrics in English

    mutivu pariyantham odu

    odu nee odu nee odu unnathar panniyithu odu
    unnmaiyaay seythida odu mutivupariyantham odu

    1. mannarin panniyithu odu munnoti moseyaip paarththu
      ekipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku ulaiththu
      nintan ulakai ventanae – 2
    2. anparin panniyithu odu athil asathithaan koodaathu
      thunpangal varumpothu thunninthu munaivathae alaku
      muyantathai mutiththuvidu munainthu munnaetru – 2
    3. aapaththu varum vaelai nee anjavae koodaathu
      ethiri thottavanthaan ethirththidu thinam avanai
      alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2
    4. sothanai varumpothu nee sornthidalaakaathu
      vaethanai varumpothu viyarththu nirpathu thavaru
      thunninthu poraadu jeeva kireedamunndu – 2
  • Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

    ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
    நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

    1.உம்மைப்போல் மழை உண்டாக்க
    தேவர்கள் உண்டோ
    வானமும் தானாகவே
    மழையைப் பொழியுமோ

    நீரல்லவோ நீரல்லவோ –2

    2.வயல்களும் ஆறுகளும்
    வற்றிப் போயிருக்கும்
    ஆவி ஊற்றப்பட்டால்
    வனாந்திரம் செழிக்கும்

    நீரல்லவோ நீரல்லவோ –2

    3.இராஜாவின் முகக்களையில்
    ஜீவன் இருக்கும்
    உங்க தயவுக்குள்ளே
    பின்மாரி இருக்கும்

    நீரல்லவோ நீரல்லவோ –2


    Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga Lyrics in English

    oottungaiyaa oottungaiyaa perumalaiyaaka
    nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyai

    1.ummaippol malai unndaakka
    thaevarkal unntoo
    vaanamum thaanaakavae
    malaiyaip poliyumo

    neerallavo neerallavo -2

    2.vayalkalum aarukalum
    vattip poyirukkum
    aavi oottappattal
    vanaanthiram selikkum

    neerallavo neerallavo -2

    3.iraajaavin mukakkalaiyil
    jeevan irukkum
    unga thayavukkullae
    pinmaari irukkum

    neerallavo neerallavo -2

  • Ootru Thanneere ஊற்றுத் தண்ணீரே

    ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா
    ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
    ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

    கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
    கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
    பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
    தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

    இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
    எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
    ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
    ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே


    Ootru thanneere Lyrics in English

    oottuth thannnneerae enthan thaeva aaviyae
    jeeva nathiyae ennil pongi pongivaa
    aaseervathiyum en naesa karththarae
    aaviyin varangalinaal ennai nirappum

    kanmalaiyaip pilanthu vanaantharaththilae
    karththaavae um janangalin thaakam theerththeerae
    pallaththaakkilum malaikalilum
    thannnneer paayum thaesaththai neer vaakkaliththeerae

    iratchippin oottukkal enthan sapaithanilae
    elumpida intha vaelai irangidumae
    aathma paaramum parisuththamum
    aavaludan pettidavae varam thaarumae

  • Ootridumae Um Vallamaiyai ஊற்றிடுமே உம் வல்லமையை

    ஊற்றிடுமே உம் வல்லமையை
    இந்த நாளில் எங்கள் மேலே
    ஊற்றிடுமே உம் அக்கினியை
    இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே

    வல்லமை வல்லமை தாருமே
    தேசத்தை உமக்காக கலக்கிட
    அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
    அனல் கொண்டு உமக்காக எழும்பிட

    பெந்தெகோஸ்தே நாளில் செய்தது போல
    அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே

    அப்போஸ்தலர் நாட்களில் செய்தது போல
    இன்றும் செய்ய வேண்டுமே

    மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
    வாக்குத் தந்த ஆவியை ஊற்றவேண்டுமே

    நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
    நதியாய் பாய்ந்திடுமே

    அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
    அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
    அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
    அக்கினியை ஊற்றிடுமே


    Ootridumae Um Vallamaiyai Lyrics in English

    oottidumae um vallamaiyai
    intha naalil engal maelae
    oottidumae um akkiniyai
    intha naalil engal meethu vallamaiyotae

    vallamai vallamai thaarumae
    thaesaththai umakkaaka kalakkida
    apishaekam apishaekam oottumae
    anal konndu umakkaaka elumpida

    penthekosthae naalil seythathu pola
    akkiniyin naavukal polinthidumae

    apposthalar naatkalil seythathu pola
    intum seyya vaenndumae

    maamsamaana yaavar maelum oottuvaen entu
    vaakkuth thantha aaviyai oottavaenndumae

    neechchal aalam konndu sentu neenthach seyyumae
    nathiyaay paaynthidumae

    arputhangal thiralaay nadanthidavae
    arputhaththin aaviyae vanthidumae
    anthakaara sangilikal arunthidavae
    akkiniyai oottidumae

  • Ootra Pada Vendume ஊற்றப்பட வேண்டுமே

    ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
    உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
    முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
    பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – (2)

    எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
    ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
    நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
    அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் – ஊற்றப்பட

    1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
      போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – எண்ணெய்
    2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
      ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – எண்ணெய்
    3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
      தேவ புத்திரர் என முத்திரை போடும் – எண்ணெய்
    4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
      சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – எண்ணெய்
    5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
      ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – எண்ணெய்

    Ootra Pada Vendume Lyrics in English

    oottappada vaenndumae unnathaththin aavi
    uyirppikka vaenndum emmai thaevaa
    munmaariyaaka antu polinthitta aaviyai
    pinmaariyaaka intu polinthidumae – (2)

    ennnney apishaekamae enthalaiyai nanaikka
    aaviyaal nirappumae paaththiram valinthodum
    neechchal aalam moolkiyae naesar anpil makila
    akkini apishaekam enthan aaval theerththidum – oottappada

    1. thaeva mainthan Yesuvai visuvaasiththom
      pothikkum aaviyaalae niraiththidumae – ennnney
    2. jepa vaennduthalilae thariththiruppom
      jekaththilae saatchiyaaka emmai niruththum – ennnney
    3. orumanathodu kooti vanthullom
      thaeva puththirar ena muththirai podum – ennnney
    4. jeeva paliyaaka emmai oppuvikkirom
      sakala saththiyaththilum emmai nadaththum – ennnney
    5. aaviyin varangalai arul seyyum thaevaa
      aaviyin kanikal entum eenthidavae – ennnney
  • Oosanna Patuvoem ஓசன்னா பாடுவோம்

    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
    உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

    1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
      அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்
    2. சின்ன மறி மீதில்ஏறி, அன்பர் பவனி போனார்
      இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.
    3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
      பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.
    4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
      ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம்.
    5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
      கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

    Oosanna Patuvoem, Aesuvin Thasarae, Lyrics in English

    osannaa paaduvom, aesuvin thaasarae,
    unnathaththilae thaaveethu mainthanukku osannaa!

    1. munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar,
      antupola intum naamum anpaayththuthi paaduvom
    2. sinna mari meethilaeri, anpar pavani ponaar
      innum en akaththil avar entum arasaaluvaar.
    3. paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum,
      paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar.
    4. paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar
      jaalar veennaiyodupaatith thaalaimuththi seykuvom.
    5. kuruththolai njaayittil nam kurupaatham pannivom,
      kooti arul pettunaamum thriyaekaraip pottuvom.
  • Oosanna Palar Patum Rajavam Meetparkkae ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே

    ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
    மகிமை, புகழ், கீர்த்தி எல்லாம் உண்டாகவே

    1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே, நீர்
      தாவீதின் ராஜா மைந்தன், துதிக்கப்படுவீர்
    2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்,
      மாந்தர், படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.
    3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
      மன்றாட்டு, கீதம், ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்
    4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் ய+தரும்,
      உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.
    5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே,
      நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே

    Oosanna Palar Patum Rajavam Meetparkkae Lyrics in English

    osannaa paalar paadum raajaavaam meetparkkae
    makimai, pukal, geerththi ellaam unndaakavae

    1. karththaavin naamaththaalae varung komaanae, neer
      thaaveethin raajaa mainthan, thuthikkappaduveer
    2. unnatha thoothar senai vinnnnil pukaluvaar,
      maanthar, pataippu yaavum isainthu pottuvaar.
    3. ummunnae kuruththolai konntaekinaarpolum,
      mantattu, geetham, sthoththiram konndummaich sevippom
    4. neer paadupadumunnae paatinaar ya+tharum,
      uyarththappatta ummai thuthippom naangalum.
    5. appaattaைk kaettavannnam em vaenndal kaelumae,
      neer nanmaiyaal niraintha kaarunniya vaentharae
  • Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது

    ஊர்வலம் போகுது – 3 இறுதி ஊர்வலம் போகுது

    அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2

    அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும்

    சுமையில்லாமல் பயணமில்லை

    சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2)

    சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில்

    சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் – 2

    வேதனையில்லாமல் பயணமில்லை

    வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2)

    துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம்

    வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் – 2


    Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu Lyrics in English

    oorvalam pokuthu – 3 iruthi oorvalam pokuthu

    antu iraivanin oorvalam intu manithanin oorvalam -2

    athil maannpukal malarnthidum puthu vaalvukal piranthidum

    sumaiyillaamal payanamillai

    suvaiyillaamal vaalvumillai (2)

    sumaikalai virumpi aettidum tholkalil

    sumaiyum suvaiyaakum iraivanin valiyaakum – 2

    vaethanaiyillaamal payanamillai

    vettiyillaamal vaalvumillai (2)

    thunpamaam siluvai vettiyin sinnam

    vaethanai uramaakum thaevanin valiyaakum – 2

  • Ooppuk Kotuththeer Aiyaa ஓப்புக் கொடுத்தீர் ஐயா

    ஓப்புக் கொடுத்தீர் ஐயா
    உம்மையே எனக்காக
    உலகின் இரட்சகரே
    உன்னத பலியாக

    1. எங்களை வாழவைக்க
      சிலுவையில் தொங்கினீர்
      நோக்கிப் பார்த்ததினால்
      பிழைத்துக் கொண்டோம் ஐயா
    2. நித்திய ஜீவன் பெற
      நீதிமானாய் மாற
      ஜீவன் தரும் கனியாய்
      சிலுவையில் தொங்கினீர்
    3. சுத்திகரித்தீரே
      சொந்த ஜனமாக
      உள்ளத்தில் வந்தீர் ஐயா
      உமக்காய் வாழ்ந்திட
    4. பாவத்திற்கு மரித்து
      நீதிக்கும் பிழைத்திட
      உம் திரு உடலிலே
      என் பாவம் சுமந்தீர் ஐயா
    5. மீட்கும் பொருளாக
      உம் இரத்தம் தந்தீர் ஐயா
      சாத்தானை தோற்கடித்து
      சாவையும் வென்றீர் ஐயா
    6. என்னையே தருகிறேன்
      ஜீவபலியாக
      உகந்த காணிக்கையாய்
      உடலைத் தருகிறேன்

    Ooppuk Kotuththeer Aiyaa Lyrics in English

    oppuk koduththeer aiyaa
    ummaiyae enakkaaka
    ulakin iratchakarae
    unnatha paliyaaka

    1. engalai vaalavaikka
      siluvaiyil thongineer
      Nnokkip paarththathinaal
      pilaiththuk konntoom aiyaa
    2. niththiya jeevan pera
      neethimaanaay maara
      jeevan tharum kaniyaay
      siluvaiyil thongineer
    3. suththikariththeerae
      sontha janamaaka
      ullaththil vantheer aiyaa
      umakkaay vaalnthida
    4. paavaththirku mariththu
      neethikkum pilaiththida
      um thiru udalilae
      en paavam sumantheer aiyaa
    5. meetkum porulaaka
      um iraththam thantheer aiyaa
      saaththaanai thorkatiththu
      saavaiyum venteer aiyaa
    6. ennaiyae tharukiraen
      jeevapaliyaaka
      ukantha kaannikkaiyaay
      udalaith tharukiraen
  • Ooppillatha Thivviya Anpae ஓப்பில்லாத திவ்விய அன்பே

    1. ஓப்பில்லாத திவ்விய அன்பே
      மோட்சானந்தா தேவரீர்
      எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
      அருள் பூர்த்தியாக்குவீர்
      மா தயாள இயேசு நாதா
      அன்பு மயமான நீர்
      நைந்த உள்ளத்தில் இறங்கி
      உம் ரட்சிப்பால் சந்திப்பீர்
    2. உமது நல் ஆவி தாரும்
      எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
      உம்மில் சார நீரே வாரும்
      சுத்த அன்பின் வடிவாய்
      புhவ ஆசை எல்லாம் நீக்கி
      ஆடியாரை ரட்சியும்
      விசுவாசத்தைத் துவக்கி
      முடிப்பவராய் இரும்
    3. வல்ல நாதா எங்கள்பேரில்
      மீட்பின் அன்பை ஊற்றுமே
      விரைவாய் உம் ஆலயத்தில்
      வந்து என்றும் தங்குமே
      வானோர் போல நாங்கள் உம்மை
      நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்
      ஓய்வில்லாமல் உமதன்பை
      பூரிப்பாய்க்கொண்டாடுவோம்
    4. உந்தன் புது சிஷ்டிப்பையும்
      சுத்த தூய்மையாக்குமேன்
      உந்தன் திவ்ய ரட்சிப்பையும்
      பூரணப்படுத்துமேன்
      எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
      அன்பில் மூழ்கிப் போற்றியும்
      மேன்மைமேலே மேன்மை பெற்று
      விண்ணில் வாழச்செய்திடும்

    Ooppillatha Thivviya Anpae Lyrics in English

    1. oppillaatha thivviya anpae
      motchaாnanthaa thaevareer
      engal nenjil vaasamseythae
      arul poorththiyaakkuveer
      maa thayaala Yesu naathaa
      anpu mayamaana neer
      naintha ullaththil irangi
      um ratchippaal santhippeer
    2. umathu nal aavi thaarum
      engal nenju poorippaay
      ummil saara neerae vaarum
      suththa anpin vativaay
      puhva aasai ellaam neekki
      aatiyaarai ratchiyum
      visuvaasaththaith thuvakki
      mutippavaraay irum
    3. valla naathaa engalpaeril
      meetpin anpai oottumae
      viraivaay um aalayaththil
      vanthu entum thangumae
      vaanor pola naangal ummai
      niththam vaalththich sevippom
      oyvillaamal umathanpai
      poorippaaykkonndaaduvom
    4. unthan puthu sishtippaiyum
      suththa thooymaiyaakkumaen
      unthan thivya ratchippaiyum
      pooranappaduththumaen
      engal kireedam ummun vaiththu
      anpil moolkip pottiyum
      maenmaimaelae maenmai pettu
      vinnnnil vaalachcheythidum