Category: Tamil Worship Songs Lyrics

  • Mayaiyana Intha Ulaginile மாயையான இந்த உலகினிலே

    மாயையான இந்த உலகினிலே
    பாவியான என்னைத் தேடி வந்தீரே
    நீர் இல்லா வாழ்க்கை
    இனி வாழ்க்கை இல்லை
    நிலையில்லாத இந்த உலகினிலே
    கால்களை உறுதியாக்கினீரே
    உம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்
    எங்கே செல்வேன்

    தேனிலும் இனிமையானவரே
    பாடலில் ராகமுமானவரே
    உம் நாமம் உயர வேண்டும்
    பூவிலே நாங்கள் பாடவே

    எளிமையான எந்தன் வாழ்வினிலே
    மகிமையைத் தந்த மகத்துவரே
    நீர் இல்லா வாழ்க்கை
    இனி வாழ்க்கை இல்லை
    தூய்மையாய் என்னை மாற்றுகிறீர்
    செம்மையான வழியில் நடத்துகிறீர்
    உம்மைவிட்டு நானும் எங்கே
    செல்வேன் செல்வேன்
    நீர் இல்லா வாழ்க்கை
    வாழ்க்கையே இல்லை
    அங்கும் இங்கும் அலைந்தபோதும்
    நிம்மதி இல்ல
    உம்மையே நானும் பற்றிடுவேனே
    இன்பத்திலும் துன்பத்திலும்
    நம்பிடுவேனே


    Mayaiyana intha ulaginile Lyrics in English

    maayaiyaana intha ulakinilae
    paaviyaana ennaith thaeti vantheerae
    neer illaa vaalkkai
    ini vaalkkai illai
    nilaiyillaatha intha ulakinilae
    kaalkalai uruthiyaakkineerae
    ummai vittu naanum engae selvaen
    engae selvaen

    thaenilum inimaiyaanavarae
    paadalil raakamumaanavarae
    um naamam uyara vaenndum
    poovilae naangal paadavae

    elimaiyaana enthan vaalvinilae
    makimaiyaith thantha makaththuvarae
    neer illaa vaalkkai
    ini vaalkkai illai
    thooymaiyaay ennai maattukireer
    semmaiyaana valiyil nadaththukireer
    ummaivittu naanum engae
    selvaen selvaen
    neer illaa vaalkkai
    vaalkkaiyae illai
    angum ingum alainthapothum
    nimmathi illa
    ummaiyae naanum pattiduvaenae
    inpaththilum thunpaththilum
    nampiduvaenae

  • Mattridum Um Sayalay மாற்றிடும் உம் சாயலாய்

    மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
    மாற்றிடும் உம் சாயலாய்
    உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
    உம் சாயலாக உருமாற்றிடும்

    அசுத்தமான உலகில் உம் சாயலாக
    பரிசுத்தமாக உருமாற்றிடும்
    கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
    உம் சாயலாக உருமாற்றிடும்

    எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
    உம் சாயலாக உருமாற்றிடும்
    இயேசுவைப் போல இயேசுவைப் போல
    என் சாயல் மாற உருமாற்றிடும்


    Mattridum Um Sayalay Lyrics in English

    maattidum um saayalaay – ennai
    maattidum um saayalaay
    urumaattidum ennai urumaattidum
    um saayalaaka urumaattidum

    asuththamaana ulakil um saayalaaka
    parisuththamaaka urumaattidum
    konalum maarupaadumaana ulakaththil
    um saayalaaka urumaattidum

    enathu supaavangal enathu ninaivukal
    um saayalaaka urumaattidum
    Yesuvaip pola Yesuvaip pola
    en saayal maara urumaattidum

  • Matrum Ennai Unthan மாற்றும் என்னை உந்தன்

    மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
    ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
    சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
    நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே

    யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
    சவுலைப் பவுலாய் மாற்றினீரே
    எந்தன் பாவச் செயல் நினையாமல்
    என்னை நேசித்த உந்தன் அன்பு

    சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
    நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
    இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
    உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்

    தண்ணீரை ரசமாக மாற்றினீரே
    தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
    தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
    தாழ்ந்து பணிந்து வருகின்றேன்

    கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
    கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
    தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
    தூக்கி அணைத்த தேவ அன்பு


    Matrum ennai unthan Lyrics in English

    maattum ennai unthan saayalaay
    oottum unthan aaviyai ennil
    saattuvaen unthan naamaththai entum
    naettum intum maaraa Yesuvaiyae

    yaakkopai isravaelaay maattinavar
    savulaip pavulaay maattineerae
    enthan paavach seyal ninaiyaamal
    ennai naesiththa unthan anpu

    suththa ithayaththai ennil sirushtiyum
    nilaivara aaviyae ennil thanthidum
    iratchannya santhoshaththai thirumpa thaarum
    ursaaka aavi ennai thaanga seythidum

    thannnneerai rasamaaka maattineerae
    thaalnthavanai neer uyarththineerae
    tharparaa unthan porpaathaththai naan
    thaalnthu panninthu varukinten

    kalvaari siluvaiyin thaeva anpu
    kallaana ennullaththai maattinathae
    thooramaay irunthu ennaith tham karaththaal
    thookki annaiththa thaeva anpu

  • Mathumalar Niraikodi Kaiyilanthum மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்

    மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்

    மாட்சிமை நிறைசூசை மாமுனியே

    துதிவளர் உமது நற்பதம் வந்தோம்

    துணை செய்து எமையாளும் தாதையரே

    வானுலகிழந்ததால் கர்வமுற்ற

    வன்மனக் கூளியின் வலையறுக்க

    தான் மனுவாய் உதித்த கடவுள்

    தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம்

    ஒளிநிறை கதிரோனை ஆடை எனும்

    உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த

    துளிநிகர் அருள்பொழி மாமரியாள்

    துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய்

    தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து

    துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து

    ஆதிரையோரைக் கண் பார்த்துனது

    ஆசியை அளித்தருள் மாதவனே


    Mathumalar Niraikodi Kaiyilanthum Lyrics in English

    mathumalar niraikoti kaiyilaenthum

    maatchimai niraisoosai maamuniyae

    thuthivalar umathu narpatham vanthom

    thunnai seythu emaiyaalum thaathaiyarae

    vaanulakilanthathaal karvamutta

    vanmanak kooliyin valaiyarukka

    thaan manuvaay uthiththa kadavul

    thaathaiyaam soosai un thanjam vanthom

    olinirai kathironai aatai enum

    uduvathaith thalaiyilum mutipunaintha

    thulinikar arulpoli maamariyaal

    thunnaivanaam soosai un thunnaipurivaay

    thoothar vaanorkku maelaay uyarnthu

    thulangum simmaasanan thanilirunthu

    aathiraiyoraik kann paarththunathu

    aasiyai aliththarul maathavanae

  • Matchimai Ullavarae Ella மாட்சிமை உள்ளவரே எல்லா

    மாட்சிமை உள்ளவரே எல்லா
    மகிமைக்கும் பாத்திரரே
    மாறிடாத என் நேசரே
    துதிக்கு பாத்திரரே

    ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
    இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

    என் பெலவீன நேரங்களில்
    உந்தன் பெலன் என்னை தாங்கிடுதே
    ஆத்துமாவை தேற்றினீரே
    கிருபை கூர்ந்தவரே

    ஊழிய பாதையிலே எனக்கு
    உதவின மா தயவே
    கெஞ்சுகிறேன் கிருபையினை
    உமக்காய் வாழ்ந்திடவே


    Matchimai ullavarae ella Lyrics in English

    maatchimai ullavarae ellaa
    makimaikkum paaththirarae
    maaridaatha en naesarae
    thuthikku paaththirarae

    aaraathikkintom ummai aaraathikkintom
    iratchakaa thaevaa ummai aaraathikkintom

    en pelaveena naerangalil
    unthan pelan ennai thaangiduthae
    aaththumaavai thaettineerae
    kirupai koornthavarae

    ooliya paathaiyilae enakku
    uthavina maa thayavae
    kenjukiraen kirupaiyinai
    umakkaay vaalnthidavae

  • Masatra Devaattukutti Manuvel மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல்

    மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே
    வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே

    தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன்
    தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்

    திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே
    தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே

    சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலே
    சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே

    சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்
    சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும்

    நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே
    குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே

    உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து
    உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து

    அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம்
    அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்

    ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும்
    ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்

    அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக்களை யாற்றி
    அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி

    மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு
    மனுவேல் யேசு நாமம் உன்னில் மகிமைப்பட வேண்டும்


    Masatra Devaattukutti Manuvel Lyrics in English

    maasatta thaevaattukkutti manuvael maesiyaavae
    vaarum enaip paarum pavantheeru maesaiyaavae

    theerum vakai kaannaathintha jeka meethalain thayarnthaen
    thaevaa vinaitheer vaa ventun thiruppaathaththaith thuyarnthaen

    thiruppaatha men kathiyae pavath thiralo perumalaiyae
    theeyaenudal sirasum athaich sumakkap pelanilaiyae

    sumanthon ingae vaa vaa vaiunsumaiyai enthol maelae
    suka aaruthal tharuvaenentu sonneer manuvaelae

    sonneer aiyaa raththaamparach sivappaam pavak karaiyum
    senneer padap paranthoti enthaekam vennmai niraiyum

    niraivaa karakkadalae marai nirai yaakamaththidalae
    kuraiyaa varamthayai pooranam kutikonndathun nudalae

    udalae thiruvirunthu suvaami uthiram thirumarunthu
    ulakaasaiyaith thuranthu enathulamae athai arunthu

    arunthap pavachchumai Nnovidar aaraaththuyar saapam
    akalum avar pathach sevaiyaal aarun thaeva kopam

    aarum mananthaerum avararutkann enmael saarum
    aathmaa karaiyaera avar anpai rusi paarum

    anpaal enaiththaluvi entan aathmakkalai yaatti
    avar maarpinil annaiththaar aelaiyatiyaen mananthaetti

    manamo yaesu saantham anpu manaththaalmaiyaip poonndu
    manuvael yaesu naamam unnil makimaippada vaenndum

  • Marum Iv Ulaginilae மாறும் இவ் உலகினிலே

    மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
    மாறிடும் மனிதன் மாறிடுவான்
    மாறாத தேவன் இயேசுவன்றோ

    1. பட்டது போதும் சுட்டதும் போதும்
      கண்ணீரும் போதும் கவலையும் போதும்
      உம் கிருபை எனக்கு போதும் போதும்
      மன்னவா எனக்கு நீர் தான் வேணும்
    2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
      ஒரு நாள் கை விட்டு ஓடும்
      ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
      ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்

    Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai

    Maaridum Manidhan Maariduvaan
    Maaradha Devan Yesuvandro

    1. Pattadhu Podhum Suttadhum Podum
      Kanneerum Podum Kavalayum Podhum
      Um Kirubai Eakku Podhum Podhum
      Mannava Enakku Neerthan Venum
    2. Kaalangal Maarum Kolangal Maarum
      Gnalam Orunal Kaivittu Odum
      Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
      Aandavarin Paadham Adhuvae Enakku Podhum -2
  • Marithor Evarum Uyirtheluvar மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

    மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

    பல்லவி
    மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
    வானெக்காளத் தொனி முழங்க.

    அனுபல்லவி
    எரி புகை மேக ரத மேறி
    ஏசு மகா ராஜன் வருங்கால்.

    சரணங்கள்

    1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
      ஜோதி வான் பறை இடி முழங்க,
      பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
      பரிசுத் தோர் திரள் மனதிலங்க.
    2. வானம் புவியும் வையகமும்
      மட மட வென்று நிலை பெயர,
      ஆன பொருளெல்லாம் அகன் றோட,
      அவரவர் தம் தம் வரிசையிலே.
    3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
      அழியா மேனியை அணிந்திடுவார்;
      எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
      என்றும் வாழும் ஜோதிகளாய்.

    Marithor Evarum Uyirtheluvar Lyrics in English

    mariththor evarum uyirththeluvaar

    pallavi
    mariththor evarum uyirththeluvaar,
    vaanekkaalath thoni mulanga.

    anupallavi
    eri pukai maeka ratha maeri
    aesu makaa raajan varungaal.

    saranangal

    1. thoothar min naattisai thulanga,
      jothi vaan parai iti mulanga,
      paathakar nenjam nadunadunga,
      parisuth thor thiral manathilanga.
    2. vaanam puviyum vaiyakamum
      mada mada ventu nilai peyara,
      aana porulellaam akan roda,
      avaravar tham tham varisaiyilae.
    3. alivul loraay vithaikkappattaோr
      aliyaa maeniyai anninthiduvaar;
      eliya roopamaay vithaikkappattaோr
      entum vaalum jothikalaay.
  • Maritha Yaesu Uyirthuvittar மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

    மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
    மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
    அல்லேலூயா ஜீவிக்கிறார்
    அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

    மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
    கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
    யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
    சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு

    அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
    இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
    நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
    நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம்

    கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
    கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
    கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
    கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

    எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
    இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
    அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
    அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்


    Maritha yaesu uyirthuvittar Lyrics in English

    mariththa Yesu uyirththu vittar allaelooyaa
    mannan Yesu jeevikkiraar allaelooyaa
    allaelooyaa jeevikkiraar
    allaelooyaa allaelooyaa jeevikkiraar

    maranam avaraith thaduththu niruththa mutiyavillaiyae
    kallaraiyo kattikkaakka mutiyavillaiyae
    yootha singam kiristhu raajaa vetti pettaாrae
    sornthu pona makanae nee thulli paadidu

    anjaathae muthalum mutivum Yesuthaanae
    iranthaalum ennaalum vaalkintavar
    naavinaalae arikkai seythu meetpataivom
    naalthorum puthu pelanaal nirampiduvom

    kannnneerodu mariyaal pola avaraith thaeduvom
    karththar Yesu namakkum intu kaatchi tharuvaar
    kanivodu peyar solli alaiththiduvaar
    kalakkaminti kaalamellaam saatchi pakarvom

    emmaavoor seedarodu nadanthu sentar
    iraivaarththai pothiththu aaruthal thanthaar
    appam pittu kannkalaiyae thiranthu vaiththaar
    antha Yesu nammodu nadakkintar

  • Maridum Ellam Maridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்
    என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

    அவர் ஆடையைத் தொட்டமாத்திரத்தில்
    பெரும்பாடு நீங்கிற்றே ஆதியும்
    அந்தமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
    கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

    இரையாதே என்று சொன்னீரே
    திரைகடல் அடங்கிற்றே – அமைதலாயிரு
    என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
    பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

    லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
    மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
    அழுகுரல் நின்றதே ஆனந்தம் வந்ததே

    மாறுதே எல்லாம் மாறுதே என்
    இயேசுவாலே எல்லாம் மாறுதே

    மாறுதே துக்கம் மாறுதே
    மாறுதே கஷ்டம் மாறுதே
    மாறுதே கடன் மாறுதே
    மாறுதே வறுமை மாறுதே
    மாறுதே வியாதி மாறுதே
    மாறிற்றே எல்லாம் மாறிற்றே- என்
    இயேசுவாலே எல்லாம் மாறிற்றே


    Maridum ellam maridum Lyrics in English

    maaridum ellaam maaridum
    en Yesuvaalae ellaam maaridum

    avar aataiyaith thottamaaththiraththil
    perumpaadu neengitte aathiyum
    anthamumaanavaraalae anthakaaram neengitte
    kattukal utainthathae kavalaikal neengitte

    iraiyaathae entu sonneerae
    thiraikadal adangitte – amaithalaayiru
    entarae alaikalum oynthathae
    payangal paranthathae nampikkai piranthathae

    laasaruvae nee elunthu vaa entu sonnaarae
    mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae
    alukural nintathae aanantham vanthathae

    maaruthae ellaam maaruthae en
    Yesuvaalae ellaam maaruthae

    maaruthae thukkam maaruthae
    maaruthae kashdam maaruthae
    maaruthae kadan maaruthae
    maaruthae varumai maaruthae
    maaruthae viyaathi maaruthae
    maaritte ellaam maaritte- en
    Yesuvaalae ellaam maaritte