Category: Tamil Worship Songs Lyrics

  • Manitha anbu mari pogum மனித அன்பு மாறிப்போகும்

    மனித அன்பு மாறிப்போகும்
    மாறாத அன்பு இயேசுவின் அன்பு
    நிலையில்லா இந்த உலகிலே
    நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு

    கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
    கடந்து போனால் காணாமல் மறையும்
    பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
    பரமன் இயேசுவின் அன்பை பார்

    பாசம் காட்டி வேஷம் போடும்
    மனிதன் அன்பும் மாயை தானே
    ஆணிகள் ஏற்று அழகை இழந்து
    அன்பர் இயேசுவின் அன்பை பார்

    வாழத்துடிக்கும் மானிடனே
    சாகத் துடித்த இயேசுவைப் பார்
    உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
    உன்னதர் இயேசுவின் அன்பை பார்


    Manitha anbu mari pogum Lyrics in English

    manitha anpu maarippokum
    maaraatha anpu Yesuvin anpu
    nilaiyillaa intha ulakilae
    nilaiththirukkum Yesuvin anpu

    kaanal neeraay kannnukku theriyum
    kadanthu ponaal kaannaamal maraiyum
    pirinthu pokaamal parinthu paesum
    paraman Yesuvin anpai paar

    paasam kaatti vaesham podum
    manithan anpum maayai thaanae
    aannikal aettu alakai ilanthu
    anpar Yesuvin anpai paar

    vaalaththutikkum maanidanae
    saakath thutiththa Yesuvaip paar
    uthiram sinthi uyirai koduththa
    unnathar Yesuvin anpai paar

  • Manidhanin Aalosanai Veenanadhu மனிதனின் ஆலோசனை வீணானது

    மனிதனின் ஆலோசனை வீணானது
    தேவனின் ஆலோசனை மேலானது

    1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
      தேவன் நிறுத்தி வைப்பார்
      நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
      தேவன் நடத்தி வைப்பார்
    2. அறிவினால் உன் பெலத்தினால்
      நடத்திட முடியாது
      ஜெபத்தினால் அவர் கிருபையால்
      நடக்கும் தவறாது
    3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
      மனதிலே எண்ணம் உனக்கு
      நடந்ததும் இனி நடப்பதும்
      இறைவன் மனக்கணக்கு

    Manidhanin Aalosanai Veenanadhu Lyrics in English

    manithanin aalosanai veennaanathu
    thaevanin aalosanai maelaanathu

    1. nadanthidum entu manithan kooruvaan
      thaevan niruththi vaippaar
      niruththuvom entu manithan koorinaal
      thaevan nadaththi vaippaar
    2. arivinaal un pelaththinaal
      nadaththida mutiyaathu
      jepaththinaal avar kirupaiyaal
      nadakkum thavaraathu
    3. ithaich seyvaen naan athaich seyvaen
      manathilae ennnam unakku
      nadanthathum ini nadappathum
      iraivan manakkanakku
  • Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

    சரணங்கள்

    1. மங்கள நித்திய மங்கள நீ
      மங்கள முத்தியும் நாதனும் நீ
      எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
      உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
      அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம்
    2. மணமகன் …………………………
      மணமகள் ……………………………..
      மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
      பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
      துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம்
    3. சங்கை நித்திய நாதனும் நீ
      பங்கமில் சத்திய போதனும் நீ
      மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
      இத்தரை இத் திருமணத்தின் இருவர்
      ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம்

    Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane Lyrics in English

    mangalam selikka kirupai arulum mangala naathanae

    saranangal

    1. mangala niththiya mangala nee
      mangala muththiyum naathanum nee
      engal pungava nee engal thungava nee
      uththama saththiya niththiya thaththuva meththa makaththuva
      aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam
    2. manamakan …………………………
      manamakal ……………………………..
      maanuvaelarkkum makaanupavarkkum
      pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith
      thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam
    3. sangai niththiya naathanum nee
      pangamil saththiya pothanum nee
      mangaa maatchimai nee thangak kaasiyum nee
      iththarai ith thirumanaththin iruvar
      oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam
  • Mangalam Satha Jeya மங்களம் சதா ஜெய

    மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
    எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

    அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
    இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

    யேசுநாயாகா – எம் – நேசநாயகா
    மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

    ஞானவாரியே – திரு – வானமாரியே
    ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா


    Mangalam Satha Jeya Lyrics in English

    mangalam sathaa jeya – mangalam vaethaa
    engal thungamangalarkku – mangalam sathaa

    annaiththukkaaththavaa – ula – kanaiththum pataiththavaa
    innaiyillaa pithaavumakku mangalam sathaa

    yaesunaayaakaa – em – naesanaayakaa
    maasillaatha suthanumakku mangalam sathaa

    njaanavaariyae – thiru – vaanamaariyae
    aananthasuththaaviyumakku mangalam sathaa

  • Mangala Geethangal Paadiduvom மங்கள கீதங்கள் பாடிடுவோம்

    மங்கள கீதங்கள் பாடிடுவோம்
    மணவாளன் இயேசு மனமகிழ
    கறை திரை நீக்கி திருச்சபையாக்கி
    காத்தனர் கற்புள்ள கன்னிகையாய்

    கோத்திரமே யூதா கூட்டமே
    தோத்திரமே துதி சாற்றிடுவோம்
    புழுதியினின்றெம்மை உயர்த்தினாரே
    புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்

    ராஜ குமாரத்தி ஸ்தானத்திலே
    ராஜாதி ராஜன் இயேசுவோடே
    இன ஜன நாடு தகப்பனின் வீடு
    இன்பம் மறந்து சென்றிடுவோம்

    சித்திர தையலுடை அணிந்தே
    சிறந்த உள்ளான மகிமையிலே
    பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
    பாவைகளாக புறப்படுவோம்

    ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
    அவர் மணவாட்டி ஆக்கினாரே
    விருந்தறை நேச கொடி ஒளி வீசு
    வீற்றிருப்போம் சிங்காசனத்தில்

    தந்தத்தினால் செய்த மாளிகையில்
    தயாபரன் இயேசு புறப்பாடுவார்
    மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
    மன்னன் மணாளன் வந்திடுவர்


    Mangala Geethangal Paadiduvom Lyrics in English

    mangala geethangal paadiduvom
    manavaalan Yesu manamakila
    karai thirai neekki thiruchchapaiyaakki
    kaaththanar karpulla kannikaiyaay

    koththiramae yoothaa koottamae
    thoththiramae thuthi saattiduvom
    puluthiyinintemmai uyarththinaarae
    pukalnthavar naamaththaip pottiduvom

    raaja kumaaraththi sthaanaththilae
    raajaathi raajan Yesuvotae
    ina jana naadu thakappanin veedu
    inpam maranthu sentiduvom

    siththira thaiyalutai anninthae
    sirantha ullaana makimaiyilae
    paluthontumillaa parisuththamaana
    paavaikalaaka purappaduvom

    aarangal pootti alangariththae
    avar manavaatti aakkinaarae
    viruntharai naesa koti oli veesu
    veettiruppom singaasanaththil

    thanthaththinaal seytha maalikaiyil
    thayaaparan Yesu purappaaduvaar
    makil kamal veesa makaththuva naesar
    mannan mannaalan vanthiduvar

  • Manavalan Yesu Varapogirar மணவாளன் இயேசு வரப்போகிறார்

    மணவாளன் இயேசு வரப்போகிறார்
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
    ஆயத்தப்படு , ஆயத்தப்படு
    மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

    1. இனி காலம் செல்லாது
      இனியும் தாமதம் ஏன்
      மெய்யாக இயேசு வரப்போகிறார்
      மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2
    2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
      அவரோடு சென்றிடலாம்
      ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
      மறுரூபமாகிடுவோம் – 2
    3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
      சபையிலே தான் தொடங்கும்
      பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
      பரலோகம் சென்றிடலாம் – 2

    Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார் Lyrics in English

    Manavalan Yesu Varapogirar
    manavaalan Yesu varappokiraar
    manavaatti sapaiyae nee aayaththappadu
    aayaththappadu , aayaththappadu
    manavaatti sapaiyae nee aayaththappadu – 2

    1. ini kaalam sellaathu
      iniyum thaamatham aen
      meyyaaka Yesu varappokiraar
      meyvaalvu unakkavar tharukiraar – 2
    2. nee aayaththamaayirunthaal – naam
      avarodu sentidalaam
      oru notip poluthinilae – naam
      maruroopamaakiduvom – 2
    3. thaeva niyaayaththeerppu muthalil
      sapaiyilae thaan thodangum
      parisuththa vaalvu thinam vaalnthaal
      paralokam sentidalaam – 2
  • Manavalan Karthar Yesu மணவாளன் கர்த்தர் இயேசு

    மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
    மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

    பிரியமே நீ ரூபவதி
    எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

    1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
      காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
      அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
      திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே
    2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
      பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
      கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
      கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே
    3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
      பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
      தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
      பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

    Manavalan Karthar Yesu Lyrics in English

    manavaalan karththar Yesu varukintarae
    manavaatti santhikka aayaththamthaanaa?

    piriyamae nee roopavathi
    elunthu vaa un naesaraich santhikkavae – manavaalan

    1. kuruvikal paadum saththam engum kaetkuthae
      kaattuppuraa saptham nam thaesam niraiyuthae
      aththimaram kaaykaaykka kaalam vanthathathae
      thiraatchaைk koti poo pooththu vaasam perukuthae – en piriyamae
    2. maarikkaalam sentathu malaiyum vanthathu
      poomiyilae pushpangal pooththuk kulunguthae
      kanmalaiyin sikarangalil thangum puraavae
      karththar Yesu varum naalai sollip paadidu – en piriyamae
    3. saaronin rojaavaam karththar Yesu
      pallaththaakkin leeliyaam paraman Yesu
      thaakam theerkkum jeeva nathi karththar Yesu
      paavam pokkum parikaari paraman Yesu – en piriyamae
  • Manavaalvu Puvi Vaalvinil Vaalvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

    மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
    மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
    மருவிய சோபன சுப வாழ்வு

    1. துணை பிரியாது, தோகையிம்மாது
      சுப மண மகளிவர் இதுபோது
      மனமுறை யோது வசனம் விடாது
      வந்தனர் உமதருள் பெறவேது – நல்ல
    2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
      தெய்வீக மாமண அலங்காரா
      தேவ குமாரா திருவெல்லைய்யூரா
      சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல
    3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
      கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
      அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
      அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல
    4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
      மந்திரம் அவர் குறையுமே தாவி
      மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
      அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல

    Manavaalvu Puvi Vaalvinil Vaalvu Lyrics in English

    manavaalvu puvi vaalvinil vaalvu
    mangala vaalvu vaalvinil vaalvu
    maruviya sopana supa vaalvu

    1. thunnai piriyaathu, thokaiyimmaathu
      supa mana makalivar ithupothu
      manamurai yothu vasanam vidaathu
      vanthanar umatharul peravaethu – nalla
    2. jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
      theyveeka maamana alangaaraa
      thaeva kumaaraa thiruvellaiyyooraa
      sonthavarkkarul tharaa thiruppeeraa? – nalla
    3. kutiththana veeram, kunamulla thaaram
      koduththuk konndaalathu samusaaram
      adakkamaasaaram, anpu, uthaaram
      ampuvi thanil manaikkalangaaram – nalla
    4. mantal sey thaevi, mannaalanukkaavi
      manthiram avar kuraiyumae thaavi
      mantiyip puvi yamarntha sanjaீvi
      avalaiyillaathava noru paavi – nalla
  • Manathurugum deivame மனதுருகும் தெய்வமே

    மனதுருகும் தெய்வமே இயேசய்யா
    மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்
    உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
    உம் அன்பிற்கு அளவே இல்லை
    அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

    மெய்யாக எங்களது
    பாடுகளை ஏற்றுக்கொண்டு
    துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

    எங்களுக்கு சமாதானம்
    உண்டு பண்ணும் தண்டனையோ
    உம்மேலே விழுந்ததையா ஐயா

    சாபமான முள்முடியே
    தலைமேலே சுமந்து கொண்டு
    சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

    எங்களது மீறுதலால்
    காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
    தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

    தேடிவந்த மனிதர்களின்
    தேவைகளை அறிந்தவராய்
    தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா


    Manathurugum deivame Lyrics in English

    manathurukum theyvamae iyaesayyaa
    manathaarath thuthippaen sthoththarippaen

    neer nallavar sarva vallavar
    um irakkaththirku mutivae illai
    um anpirku alavae illai
    avai kaalaithorum puthithaayirukkum

    meyyaaka engalathu
    paadukalai aettukkonndu
    thukkangalai sumanthu konnteer aiyaa

    engalukku samaathaanam
    unndu pannnum thanndanaiyo
    ummaelae vilunthathaiyaa aiyaa

    saapamaana mulmutiyae
    thalaimaelae sumanthu konndu
    siluvaiyilae vetti sirantheer aiyaa

    engalathu meeruthalaal
    kaayappattir norukkappattir
    thalumpukalaal sukaamaanom unthan

    thaetivantha manitharkalin
    thaevaikalai arinthavaraay
    thinam thinam arputham seytheer aiyaa

  • Manasukkulley Pongum Kadalaai மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்

    மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
    ஆனந்த நீர் ஊற்று!
    இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்
    விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!
    மீட்புதானே தேவன் வழங்கும்
    உன்னத சீர் அமைப்பு! – 2
    இளமையிலே இந்த அற்புதம்
    விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! – 2
    ஆனந்த பூமழையில் – தினம்
    பூரித்து நனைகின்றேன்!
    ஆவியின் அருள் மழையில் – மனம்
    நிரம்பியே வழிகின்றேன்!

    1. மாசில்லாத புனித நல்வாழ்வே
      புத்தம் புது படைப்பு – நல்
      ரூபமாற்றமே அதனைக்
      காட்டிடும் அழகின் அணிவகுப்பு
      வாழ்வைஆள்பவர்வலிமையூட்டினால்
      “வெற்றிச் சிகரம் தொடும்” – அவர்
      அழகு வாசனை, சொல்
      வினையானால்
      உலகம் பாரட்டும்! …. 2 –
      ஆனந்த
    2. நல்ல கிறிஸ்தவன் நாடறிய
      அவன் வாழ்க்கை வேறாகும்!
      நீதி நேர்மையும் உண்மை, நாணயம்
      அவன் விடும் மூச்சாகும்!
      தேவ ஆட்சியின் மாட்சி
      வலிமைதான்“அவனில்
      அரங்கேறும்” – தினம்சிலுவையை
      சுமந்து சீடன் நடந்தால்
      சீடரின் தொகை பெருகும்!… 2 –
      ஆனந்த
    3. சபைகளின் நடுவே உலாவுகின்றவர்
      விடுக்கும் அறைகூவல்!
      ஆதியில்
      கொண்டஅன்புக்குத்திரும்பிட
      அழைக்கும் அன்புக்குரல்!
      ஊன் – உடல் உள்ளம் யாவும்
      படைத்தால் “ஆனந்தம் ஓயாது”
      இளைஞர் எழுச்சியால்
      சபைகள் வளரும்
      சரித்திரம் மாறிவிடும்!… 2 –
      ஆனந்த

    Manasukkulley Pongum Kadalaai Lyrics in English

    manasukkullae pongum kadalaay
    aanantha neer oottu!
    Yesuvin varavaal nikalnthidum
    vinthaiyaik koorungal aarppariththu!
    meetputhaanae thaevan valangum
    unnatha seer amaippu! – 2
    ilamaiyilae intha arputham
    vitinthaalvaalvellaam sirappu! – 2
    aanantha poomalaiyil – thinam
    pooriththu nanaikinten!
    aaviyin arul malaiyil – manam
    nirampiyae valikinten!

    1. maasillaatha punitha nalvaalvae
      puththam puthu pataippu – nal
      roopamaattamae athanaik
      kaatdidum alakin annivakuppu
      vaalvaiaalpavarvalimaiyoottinaal
      “vettich sikaram thodum” – avar
      alaku vaasanai, sol
      vinaiyaanaal
      ulakam paarattum! …. 2 –
      aanantha
    2. nalla kiristhavan naadariya
      avan vaalkkai vaeraakum!
      neethi naermaiyum unnmai, naanayam
      avan vidum moochchaாkum!
      thaeva aatchiyin maatchi
      valimaithaan“avanil
      arangaerum” – thinamsiluvaiyai
      sumanthu seedan nadanthaal
      seedarin thokai perukum!… 2 –
      aanantha
    3. sapaikalin naduvae ulaavukintavar
      vidukkum araikooval!
      aathiyil
      konndaanpukkuththirumpida
      alaikkum anpukkural!
      oon – udal ullam yaavum
      pataiththaal “aanantham oyaathu”
      ilainjar eluchchiyaal
      sapaikal valarum
      sariththiram maarividum!… 2 –
      aanantha