Category: Tamil Worship Songs Lyrics

  • Maasillaa Maasillaa மாசில்லா மாசில்லா

    மாசில்லா மாசில்லா
    மனம் வேண்டும் இயேசையா
    ஆசைமேல் ஆசையாய்
    வாஞ்சிக்கிறேன் தாருமையா!

    மாசில்லா மாசில்லா
    மனம் வேண்டும் இயேசையா
    வாஞ்சையோடு கெஞ்சுகிறேன்
    அடியோடெனை மாற்றுமையா (2)

    1. எண்ணத்தில் உண்மை வேண்டும்
      இதயத்தில் தூய்மை வேண்டும் ( 2)
      அக்கினியின் ஜீவாலை வேண்டும்
      புலன்கள் மேல் வெற்றி வேண்டும்!
      வாழ்வெல்லாம் உம் அழகு
      மங்காமல் விளங்க வேண்டும்
      மனிதரெல்லாம் என்னில் உம்மை
      நாள்தோறும் காண வேண்டும் (2)
    2. விசுவாச தைரியம் வேண்டும்
      ஆசையை அடக்க வேண்டும் (2)
      சிலுவையை சுமக்க வேண்டும்
      தேவபயம் நிரம்ப வேண்டும்!
      நித்தம் உம் சத்தத்தை வாஞ்சிக்கும்
      செவிகள் வேண்டும்
      தேவசித்தம் செய்திடவே
      ஆவல் நிரம்ப வேண்டும் (2)
    3. நன்னடத்தை உறவில் வேண்டும்
      நாணயம் என் செயலில்
      வேண்டும் (2)
      நல்லொழுக்கம் பண்பில் வேண்டும்
      நாவடக்கம் பேச்சில் வேண்டும்!
      நாளெல்லாம் முதிர்ச்சி
      பெற்றே மகிழ்ச்சியாய்
      வாழ வேண்டும்
      நண்பர்களைத் திரளாக
      உம்மண்டை சேர்க்க வேண்டும் (2)

    Maasillaa Maasillaa Lyrics in English

    maasillaa maasillaa
    manam vaenndum iyaesaiyaa
    aasaimael aasaiyaay
    vaanjikkiraen thaarumaiyaa!

    maasillaa maasillaa
    manam vaenndum iyaesaiyaa
    vaanjaiyodu kenjukiraen
    atiyodenai maattumaiyaa (2)

    1. ennnaththil unnmai vaenndum
      ithayaththil thooymai vaenndum ( 2)
      akkiniyin jeevaalai vaenndum
      pulankal mael vetti vaenndum!
      vaalvellaam um alaku
      mangaamal vilanga vaenndum
      manitharellaam ennil ummai
      naalthorum kaana vaenndum (2)
    2. visuvaasa thairiyam vaenndum
      aasaiyai adakka vaenndum (2)
      siluvaiyai sumakka vaenndum
      thaevapayam nirampa vaenndum!
      niththam um saththaththai vaanjikkum
      sevikal vaenndum
      thaevasiththam seythidavae
      aaval nirampa vaenndum (2)
    3. nannadaththai uravil vaenndum
      naanayam en seyalil
      vaenndum (2)
      nallolukkam pannpil vaenndum
      naavadakkam paechchil vaenndum!
      naalellaam muthirchchi
      pette makilchchiyaay
      vaala vaenndum
      nannparkalaith thiralaaka
      ummanntai serkka vaenndum (2)
  • Maasila Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
    ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
    மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

    1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
      ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
    2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
      வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
    3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
      தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

    Maasila Deva Puthiran Lyrics in English

    maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya! (2)
    jeya maasillaath thaeva puththiran maanidanaanaarae jeya! jeya!
    maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya!

    1. aaseervaathamae! kana thaesaar neethamae (2)
      olir kaasini meethathi naesappirakaasa vinn vaasa kirupaasana
    2. saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)
      valar pethlakaem oorthanilae karisiththuk kanniyaasthiri viththinil
    3. antharam poomiyum athi sunthara naemiyum (2)
      thinam ainthoru naalinilae thiru munthina moontilontakiya
  • Maasarra Thuuyanal Anpae மாசற்ற தூயநல் அன்பே

    இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்

    மாசற்ற தூயநல் அன்பே அன்பே
    மாறிடா மங்கிடா அன்பே அன்பே
    காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
    உள்ளம் உடைக்கும் அன்பே!

    1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
      கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
      என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
      ஓ நல்ல தேவ அன்பே!
    2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
      என் உள்ளக் கறையை கழுவவோ!
      ஏனையா இத்தனை என் மீது அக்கறை
      ஓ நல்ல தேவ அன்பே!
    3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
      அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
      என்யாவும் அன்பிற்கே! என் எல்லாம் அன்பிற்கே
      உள்ளம் மகிழ்கின்றேனே.

    Maasarra Thuuyanal Anpae Lyrics in English

    ivvalavaay anpu koornthaar

    maasatta thooyanal anpae anpae
    maaridaa mangidaa anpae anpae
    kaalaththil adangaa njaalaththil sirantha
    ullam utaikkum anpae!

    1. erusalaem therukkalil olam aen?
      kolkathaa malaiyil koottam aen?
      ennaith thiruththida en anpu saakuthae
      o nalla thaeva anpae!
    2. siluvaiyin atiyil iraththak karai
      en ullak karaiyai kaluvavo!
      aenaiyaa iththanai en meethu akkarai
      o nalla thaeva anpae!
    3. naesaththirkethiraay ontum seyyaen
      anpirku atimai aakukinten
      enyaavum anpirkae! en ellaam anpirkae
      ullam makilkintenae.
  • Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும்

    மாறிடும் எல்லாம் மாறிடும்
    என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

    1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
      ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
      கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே
    2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
      அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
      பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே
    3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
      மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
      அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே
    4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
      மாறுதே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே
      என் இயேசுவாலே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே

    மாறிற்றே எல்லாம் மாறிற்றே
    என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே


    Maaridum Ellaam Maaridum Lyrics in English

    maaridum ellaam maaridum
    en Yesuvaalae ellaam maaridum (2)

    1. avar aataiyai thotta maaththiraththil perum paadu maaritte
      aathiyum anthamamumaanavaraalae anthakaaram neengitte
      kattukal utainthathae kavalaikal neengitte
    2. iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte
      amaithalaay iru entarae alaikalum oynthathae
      payangal paranthathae nampikkai piranthathae
    3. laasaruvae nee elunthu vaa entu sonnaarae
      mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae
      alukural nintathae aanantham vanthathae
    4. maaruthae ellaam maaruthae en Yesuvaal ellaam maaruthae
      maaruthae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae
      en Yesuvaalae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae

    maaritte ellaam maaritte
    en Yesuvaalae ellaam maaritte

  • Maaridathore nesa meetpar மாறிடாதோர் நேச மீட்பர்

    மாறிடாதோர் நேச மீட்பர்
    மாற்றுவார் உன் வேதனை
    பாவத்தாலும் நோயினாலும்
    வருந்துவானேன் நம்பிவா

    நம்பி வா நீ நம்பி வா
    இயேசு உன்னை அழைக்கிறார்

    லோக மாந்தர் கைவிடுவார்
    துரோகம் கூறி தூற்றுவார்
    தூய இயேசு மெய் நேசமாய்
    துன்பம் தீர்ப்பார் நம்பி வா

    வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
    வற்றிப் போகச் செய்குவார்
    வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
    என்றும் ஊறும் நம்பி வா


    Maaridathore nesa meetpar Lyrics in English

    maaridaathor naesa meetpar
    maattuvaar un vaethanai
    paavaththaalum Nnoyinaalum
    varunthuvaanaen nampivaa

    nampi vaa nee nampi vaa
    Yesu unnai alaikkiraar

    loka maanthar kaividuvaar
    thurokam koori thoottuvaar
    thooya Yesu mey naesamaay
    thunpam theerppaar nampi vaa

    valla meetpar kannnneer yaavum
    vattip pokach seykuvaar
    vattaா jeeva oottaாy unmael
    entum oorum nampi vaa

  • Maarida Em Maa Nesare மாறிடா எம் மா நேசரே

    1. மாறிடா எம் மா நேசரே – ஆ
      மாறாதவர் அன்பெந்நாளுமே
      கல்வாரி சிலுவை மீதிலே
      காணுதே இம்மா அன்பிதே – ஆ

    ஆ! இயேசுவின் மகா அன்பிதே
    அதன் ஆழம் அறியலாகுமோ
    இதற்கிணையேதும் வேறில்லையே
    இணை ஏதும் வேறில்லையே

    1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
      பாரில் உன்னைத் தேடி வந்தாரே
      நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
      நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு
    2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
      உள்ளம் போல் நேசித்ததினால்
      அல்லல் யாவும் அகற்றிடவே
      ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு
    3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
      தேவனின் விண் சாயல் அணிய
      ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
      ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு
    4. நியாய விதி தினமதிலே – நீயும்
      நிலையாகும் தைரியம் பெறவே
      பூரணமாய் அன்பு பெருக
      புண்ணியரின் அன்பு வல்லதே — ஆ! இயேசு
    5. பயமதை நீக்கிடுமே – யாவும்
      பாரினிலே சகித்திடுமே
      அது விசுவாசம் நாடிடுமே
      அன்பு ஒருக்காலும் ஒழியாதே — ஆ! இயேசு

    maaridaar em maa naesarae
    aa maaraathavar anpennaalumae
    kalvaari siluvai meethilae
    kaanuthae im maa anpithae

    aa Yesuvin makaa anpithae
    athin aalam ariyalaakumae
    itharkinnaiyaethum vaerillaiyae

    paaviyaaka irukkaiyilae anpaay
    paaril unnaiththaeti vanthaarae
    neesan entunnaith thallaamalae
    naesanaaka maattidavae

    ullaththaal avarai thallinum
    tham ullam pol naesiththathinaal
    allal yaavum akattidavae
    aathi thaevan paliyaanaarae

    aaviyaal anpai pakarnthida
    thooya thaevanin vinn saayal anniya
    aaviyaalae anpaich sorinthaar
    aavalaay avaraich santhikka

    niyaayavithi thinamathilae
    neeyum nilaiyaakum thairiyam peravae
    pooranamaay anpu peruka
    punnnniyarin anpu vallathae

    payamathai neekkidumae
    yaavum paarinil sakiththidumae
    athu viduvaasam naadidumae
    anpu orukkaalum oliyaathae

  • Maarave Aasaipadugiren மாறவே ஆசைப்படுகிறேன்

    மாறவே ஆசைப்படுகிறேன்
    என்னை மாற்றிவிடும்
    கருணை நேசரே – 2

    1. என் சிந்தை மாறணும்
      என் செயல்கள் மாறணும்
      என் பேச்சு மாறணும்
      என் பெருமை மாறணும்
      – மாறவே ஆசை
    2. என் நடை மாறணும்
      என் உடை மாறணும்
      என் உள்ளம் மாறணும்
      ஐயா உம்மை போலவே
      – மாறவே ஆசை
    3. என் ஜெபம் மாறணும்
      என் துதி மாறணும்
      என் சுயம் சாகணும்
      ஐயா உம்மை போலவே
      – மாறவே ஆசை

    Maarave Aasaipadugiren Lyrics in English

    Maarave Aasaipadugiren
    maaravae aasaippadukiraen
    ennai maattividum
    karunnai naesarae – 2

    1. en sinthai maaranum
      en seyalkal maaranum
      en paechchu maaranum
      en perumai maaranum
    • maaravae aasai
    1. en natai maaranum
      en utai maaranum
      en ullam maaranum
      aiyaa ummai polavae
    • maaravae aasai
    1. en jepam maaranum
      en thuthi maaranum
      en suyam saakanum
      aiyaa ummai polavae
    • maaravae aasai
  • Maaratha naal visuvaasiyea மாறாத நல் விசுவாசம்

    மாறாத நல் விசுவாசம் பரன்
    நம் இயேசு தேவனில் வைத்திடுவோம்
    அகன்றிடும் மலைகளும்
    அதிசயம் வெளிப்படும்

    விசுவாச வார்த்தையினால்
    இதயம் நிரம்பி அழிந்திடுமே
    அகமதினில் விசுவாசம்
    என்றும் ஜெயம் தாரும் -2

    கிரியை இல்லா விசுவாசம்
    ஏதும் செய்திட உதவாது
    செயல்படுமே விசுவாசம்
    என்றும் ஜெயம் தாரும் -2

    லோகமதின் இன்பங்களை
    விரும்பி மனதில் தொடராமல்
    விசுவாசத்தால் பெலன் அடைவோம்
    நல் தேவன் தாங்குவார் -2


    Maaratha naal visuvaasiyea Lyrics in English

    maaraatha nal visuvaasam paran
    nam Yesu thaevanil vaiththiduvom
    akantidum malaikalum
    athisayam velippadum

    visuvaasa vaarththaiyinaal
    ithayam nirampi alinthidumae
    akamathinil visuvaasam
    entum jeyam thaarum -2

    kiriyai illaa visuvaasam
    aethum seythida uthavaathu
    seyalpadumae visuvaasam
    entum jeyam thaarum -2

    lokamathin inpangalai
    virumpi manathil thodaraamal
    visuvaasaththaal pelan ataivom
    nal thaevan thaanguvaar -2

  • Maaranum Manam Maaranum மாறணும் மனம் மாறணும்

    மாறணும் மனம் மாறணும்
    மனம் இன்றே மாறணும்
    அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
    தடுமாறியே சிறையாகிடும்
    மனம் இன்றே மாறணும்
    அடியோடு மாறணும்
    மனம் மனம் கல்மனம் மாறணும்
    வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
    ஆவியின் அலை புரண்டோடணும்
    சத்திய வசனம் பதிக்கணும்
    கனிந்த இதயம் காணணும்!

    1. சத்திய ஒளிப் பார்வையில்
      தன் நிலை உணரனும்
      பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
      ஒப்புக்கொள்ளணும் – 2
      திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
      சொந்தம் கொண்டாடனும்
      பிதா வழங்கும் மன்னிப்பை
      ஆரத் தழுவணும் – அவர்
      அன்புக்குச் சரணாகணும்!
    2. ஆவியின் தின ஊட்டத்திலே
      தனிவேறாய் துலங்கணும்
      ஜெப வசனப் பயிற்சியினால்
      திருவார்ப்பாய் மாறணும் – 2
      பூரண வெற்றிப்பாட்டாக
      வாழ்வைத் தொடரணும்
      கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
      நித்தம் பின் செல்லணும்
      புகழ் ஆராதனை செய்யணும்!
    3. தேவ அன்பினில் அசைவின்றி
      நிலை உறுதி காக்கணும்
      சகமனிதருடன் நல்லுறவை
      கட்டியெழுப்பணும் – 2
      தூய ஆவியின் மெருகேற்றம்
      இயேசுவைக் காட்டணும்
      தேவன் அழைத்த பந்தயத்தின்
      இலக்கை அடையணும்
      என்றும் பரலோகம் பூரிக்கணும்!

    Maaranum Manam Maaranum Lyrics in English

    maaranum manam maaranum
    manam inte maaranum
    alai paaynthidum manam maaranum
    thadumaariyae siraiyaakidum
    manam inte maaranum
    atiyodu maaranum
    manam manam kalmanam maaranum
    vakkira silaikalai olikkanum
    aaviyin alai puranntoodanum
    saththiya vasanam pathikkanum
    kanintha ithayam kaananum!

    1. saththiya olip paarvaiyil
      than nilai unaranum
      paramanukkethiraay seytha kuttam
      oppukkollanum – 2
      thirumakan siluvai piraayachchiththam
      sontham konndaadanum
      pithaa valangum mannippai
      aarath thaluvanum – avar
      anpukkuch sarannaakanum!
    2. aaviyin thina oottaththilae
      thanivaeraay thulanganum
      jepa vasanap payirsiyinaal
      thiruvaarppaay maaranum – 2
      poorana vettippaattaka
      vaalvaith thodaranum
      kiristhuvin thooya atichchuvattil
      niththam pin sellanum
      pukal aaraathanai seyyanum!
    3. thaeva anpinil asaivinti
      nilai uruthi kaakkanum
      sakamanitharudan nalluravai
      kattiyeluppanum – 2
      thooya aaviyin merukaettam
      Yesuvaik kaattanum
      thaevan alaiththa panthayaththin
      ilakkai ataiyanum
      entum paralokam poorikkanum!
  • Maara Naatha மாராநாதா

    மாராநாதா அல்லேலூயா
    இயேசுராஜா வரப்போகிறார்
    அல்லேலூயா பாடி துதித்திடு
    ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு

    கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
    ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
    ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
    ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே

    கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
    கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது

    பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
    பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
    பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
    பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்

    இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
    இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
    சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
    ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே


    Maara Naatha Lyrics in English

    maaraanaathaa allaelooyaa
    Yesuraajaa varappokiraar
    allaelooyaa paati thuthiththidu
    aaravaaram seythu makilnthidu

    kotik koti thootharodu paadiduvomae
    jeevan mooppar koottaththodu thuthiththiduvomae
    jeevan thanthu meettavaraik kanndiduvomae
    jeevanullor thaesaththilae makilnthiduvomae

    kavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu
    karththarodu vaalkinta thaesamathu

    palingu nathiyin oraththilae paadiduvomae
    parisuththar koottaththodu aaraathippomae
    paasamulla naesar maarpil ilaippaaruvom
    paadukalai maranthu angae aatippaaduvom

    Yesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae
    Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae
    sooriyanum santhiranum angae illaiyae
    jeeva thaevan oliyaaka pirakaasippaarae