Category: Tamil Worship Songs Lyrics

  • Maaperum Aruvatai Onru மாபெரும் அறுவடை ஒன்று

    ஏறெடுத்துப் பாருங்கள்

    மாபெரும் அறுவடை ஒன்று கண் எதிர் தெரிகின்றது
    காத்திருக்கும் சபை சாட்சி பெறும் .. இயேசு
    வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும்

    1. கோடிக்கோடியாக மக்கள் உண்டு
      உடல் உள்ளம் இரண்டிலும் தேவைகொண்டு!
      ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு
      பெரும் பாரதம்! பெரும் பாரதம்!
    2. சத்தியம் பெற்றவர் கூறாவிட்டால்
      சுபநித்திய பாக்கியம் யார் பெறுவார்?
      தொண்ணூற்று ஆறு ஐந்து கோடி உண்டு
      பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    3.அன்பெனும் சங்கிலி கைகள் கட்ட
    சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட
    இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    4.மிஷனெரிச் சபைகள் தோன்றும் காலம்
    சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம்
    தயங்கினால் சந்தர்ப்பம் கைநழுவும்
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!

    5.உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க!
    உம் பணிக்காகக் கொடுத்திடும் மக்கள் வாழ்க!
    அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க
    பெரும் பாரதம்! பெரும் பாரதம்!


    Maaperum Aruvatai Onru Lyrics in English

    aeraெduththup paarungal

    maaperum aruvatai ontu kann ethir therikintathu
    kaaththirukkum sapai saatchi perum .. Yesu
    veettirukkum sapai saatchi sollum

    1. kotikkotiyaaka makkal unndu
      udal ullam iranntilum thaevaikonndu!
      oti otich seyya idamum unndu
      perum paaratham! perum paaratham!
    2. saththiyam pettavar kooraavittal
      supaniththiya paakkiyam yaar peruvaar?
      thonnnnoottu aatru ainthu koti unndu
      perum paaratham! perum paaratham!

    3.anpenum sangili kaikal katta
    sapai sangaththin palakaikal otivida
    Yesuvin naamam uyarththappadum
    perum paaratham! perum paaratham!

    4.mishanerich sapaikal thontum kaalam
    suvisesham solla ithu vasantha kaalam
    thayanginaal santharppam kainaluvum
    perum paaratham! perum paaratham!

    5.umakkaaka ulaiththidum pakthar vaalka!
    um pannikkaakak koduththidum makkal vaalka!
    anaiththu ullaththilum Yesu vaalka
    perum paaratham! perum paaratham!

  • Maanuvel Thondare மானுவேல் தொண்டரே

    மானுவேல் தொண்டரே – ஆர்ப்பரிந்து
    மகிழ்ந்து பூரிப்போம்

    மானிலமீது சமாதானமா மென்ற
    வானவர் வாழ்த்துவறா தெனநம்பும்
    நானிலமெங்கும் சகோதர ஐக்கியம்
    நண்ணும் பகலருணோதயம் ஆகுதே
    நாடுவோம் – அதைத் தேடுவோம் – இனி
    நாமுமுயற்சி கையாடுவோம் பாடுவோம்

    தீர்க்க ருரைப்படியே – உலகெங்கும்
    தீங்கீலாக் காலம் வரும்
    தாக்கும் படைக்கலங்கள் – கிருஷிகச்
    சாதனமாகி விடும்
    மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய்
    மன்னன் யேசுவுக்கு ளன்றான தோழராய்
    வாக்குவாதங்கள் வழக்குகள் யுத்தங்கள்
    நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள்
    நிலைத்து – அன்பு – வளர்த்துக் – கரங்
    கொடுத்து – உற – வடுத்துமதிப்பர்

    போன காலங்களிலே – நடந்திட்ட
    பொல்லாங்கும் பாடுகளும்
    ஈனத் துரோகங்களும் – விளைவித்த
    ஈங்கிசை போதும் இனி
    வானபரனின் மலரடிக் கண்ணுற்று
    வல்ல பரிசுத்த் அன்பினாவி பெற்று
    மானுவேலே சையர் நாமமே முன்னிட்டு
    மற்றுமவர் செய்கை மாதிரி நாம் கற்று
    மாட்சியாய் – அவர் – சாட்சியாய் – இந்த
    மண்ணிலத்தார் ஒத்து வாழச் செபித்துமே

    சர்வ ஜனநேசம் – நிறைவுறத்
    தாமதமானாலும்
    கர்வம் பொறாமை பகை – தடை செய்யக்
    காலம் நீடித்தாலும்,
    அருள் நம்பிக்கை கொண்டற்ப மெனு நம்மால்
    ஆனதைச் செய்குவோம் முன்தூதர் போலவே
    இருளகல விடிவெள்ளி தோணுது
    எங்கும் நடுப்பகல் மங்களநாள் வரும்
    யேசுவே – இக – மாசுடர் – அவர்
    நேசமே – புவித் – தோஷமகற்றிடும்


    Maanuvel Thondare Lyrics in English

    maanuvael thonndarae – aarpparinthu
    makilnthu poorippom

    maanilameethu samaathaanamaa menta
    vaanavar vaalththuvaraa thenanampum
    naanilamengum sakothara aikkiyam
    nannnum pakalarunnothayam aakuthae
    naaduvom – athaith thaeduvom – ini
    naamumuyarsi kaiyaaduvom paaduvom

    theerkka ruraippatiyae – ulakengum
    theengaீlaak kaalam varum
    thaakkum pataikkalangal – kirushikach
    saathanamaaki vidum
    maakka lelaamorae thanthaiyin makkalaay
    mannan yaesuvukku lantana tholaraay
    vaakkuvaathangal valakkukal yuththangal
    neekki yinakkam porumai narkunangal
    nilaiththu – anpu – valarththuk – karang
    koduththu – ura – vaduththumathippar

    pona kaalangalilae – nadanthitta
    pollaangum paadukalum
    eenath thurokangalum – vilaiviththa
    eengisai pothum ini
    vaanaparanin malaratik kannnuttu
    valla parisuthth anpinaavi pettu
    maanuvaelae saiyar naamamae munnittu
    mattumavar seykai maathiri naam kattu
    maatchiyaay – avar – saatchiyaay – intha
    mannnnilaththaar oththu vaalach sepiththumae

    sarva jananaesam – niraivurath
    thaamathamaanaalum
    karvam poraamai pakai – thatai seyyak
    kaalam neetiththaalum,
    arul nampikkai konndarpa menu nammaal
    aanathaich seykuvom munthoothar polavae
    irulakala vitivelli thonuthu
    engum naduppakal mangalanaal varum
    yaesuvae – ika – maasudar – avar
    naesamae – puvith – thoshamakattidum

  • Maanitarae! Poerrunkalae! மானிடரே! போற்றுங்களே!

    இயேசு மேலானவர்

    மானிடரே! போற்றுங்களே!
    மாநிலத்தில் பறைசாற்றுங்களே!

    மேலானவர் இயேசு மேலானவர்
    ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2

    1. இருளில் ஒளியும் இயேசு – நம்
      இதய விளக்கும் இயேசு
      மருள்வோர் வழியும் இயேசு – அவர்
      மனதின் உறுதி இயேசு
      அருளின் சுனையும் இயேசு – உயர்
      அன்பின் பொருளும் இயேசு
    2. உலகம் அவரால் வாழும் – அதில்
      உயிர்கள் புனிதம் ஆகும்
      பலரின் வாழ்வு மாறும் – பாவப்
      பழிகள் யாவும் தீரும்
      நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
      நிறையக் குடும்பம் தோறும்
    3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
      அழிவைக் காண நேரும்
      மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
      மனங்கள் பயந்து சாகும்
      நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
      நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்

    Maanitarae! Poerrunkalae! Lyrics in English

    Yesu maelaanavar

    maanidarae! pottungalae!
    maanilaththil paraisaattungalae!

    maelaanavar Yesu maelaanavar
    aakaayam poomikkum maelaanavar – 2

    1. irulil oliyum Yesu – nam
      ithaya vilakkum Yesu
      marulvor valiyum Yesu – avar
      manathin uruthi Yesu
      arulin sunaiyum Yesu – uyar
      anpin porulum Yesu
    2. ulakam avaraal vaalum – athil
      uyirkal punitham aakum
      palarin vaalvu maarum – paavap
      palikal yaavum theerum
      nilavum makilchchi naalum – ini
      niraiyak kudumpam thorum
    3. alaikal vaalvil mothum – palar
      alivaik kaana naerum
      malaikal peyarnthu pokum – palar
      manangal payanthu saakum
      nilaiyaayk karangal korppaar – nammai
      nijamaayk karaiyil serppaar
  • Maanida Uruvil மானிட உருவில்

    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

    ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
    அவனியிலே உனக்காய் உதித்தார்
    அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
    அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

    கூவி அழைப்பது தேவ சத்தம்
    குருசில் வடிவது தூய ரத்தம்
    பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
    பாக்கியம் நல்கிட அவரே வழி

    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இதை நாடுவோர்க்கு விடுதலையே
    துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
    இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

    அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
    அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
    உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
    உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

    கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
    கடைசி வரை தளராதே நம்பு
    என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
    இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்


    Maanida Uruvil Lyrics in English

    maanida uruvil avathariththa
    maasudar oliyae kiristhaesuvae

    aaththuma meetpaiyum aerpaduththa
    avaniyilae unakkaay uthiththaar
    annti varuvaay vaennti ataivaay
    annnalae aaththuma vinai neekkuvaar

    koovi alaippathu thaeva saththam
    kurusil vativathu thooya raththam
    paava mannippu aathma iratchippu
    paakkiyam nalkida avarae vali

    Yesuvin naamaththil vallamaiyae
    ithai naaduvorkku viduthalaiyae
    thunpa kattukal kaaval siraikal
    intu akattuvaar neeyum nampi vaa

    arputhangal karththar seythiduvaar
    athisayangal avar kaatdiduvaar
    unnmai niraintha ullam thiranthu
    un karththar Yesuvai visuvaasippaay

    karththar unnai ini kaividaarae
    kataisi varai thalaraathae nampu
    entum nallavar karththar vallavar
    Yesuvidam vanthaal purampae thallaar

  • Maangal neerodai vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து

    மான்கள் நீரோடை வாஞ்சித்து
    கதறும்போல் தேவனே
    எந்தன் ஆத்துமா உம்மையே
    வாஞ்சித்துக் கதறுதே
    தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
    கோட்டையும் நீர் என்றும் காப்பீர்

    தேவன் மேல் ஆத்துமாவே
    தாகமாயிருக்கிறதே
    தேவனின் சந்நிதியில் நின்றிட
    ஆத்துமா வாஞ்சிக்குதே

    ஆத்துமா கலங்குவதேன்
    நேசரை நினைத்திடுவாய்
    அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
    துதித்துப் போற்றிடுவோம்

    யோர்தான் தேசத்திலும்
    எர்மோன் மலைகளிலும்
    சிறுமலைகளிலிருந்தும் உம்மை
    தினமும் நினைக்கின்றேன்

    கன்மலையாம் தேவன்
    நீர் என்னை ஏன் மறந்தீர்
    எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
    துக்கத்தால் திரிவதேனோ

    தேவரீர் பகற்காலத்தில்
    கிருபையைத் தருகின்றீர்
    இரவினில் பாடும் பாட்டு எந்தன்
    வாயினிலிருக்கிறது


    Maangal neerodai vaanjithu Lyrics in English

    maankal neerotai vaanjiththu
    katharumpol thaevanae
    enthan aaththumaa ummaiyae
    vaanjiththuk katharuthae
    thanjam neer ataikkalam neer
    kottaைyum neer entum kaappeer

    thaevan mael aaththumaavae
    thaakamaayirukkirathae
    thaevanin sannithiyil nintida
    aaththumaa vaanjikkuthae

    aaththumaa kalanguvathaen
    naesarai ninaiththiduvaay
    anparin iratchippinaal thinamum
    thuthiththup pottiduvom

    yorthaan thaesaththilum
    ermon malaikalilum
    sirumalaikalilirunthum ummai
    thinamum ninaikkinten

    kanmalaiyaam thaevan
    neer ennai aen marantheer
    ethirikalaal otingi atiyaen
    thukkaththaal thirivathaeno

    thaevareer pakarkaalaththil
    kirupaiyaith tharukinteer
    iravinil paadum paattu enthan
    vaayinilirukkirathu

  • Maa Thooya Aavi! Irangum மா தூய ஆவி! இறங்கும்

    மா தூய ஆவி! இறங்கும்
    விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்
    ஞானாபிஷேக தைலம் நீர்
    நல் வரம் ஏழும் ஈகிறீர். ஆமேன்.


    Maa Thooya Aavi! Irangum Lyrics in English
    maa thooya aavi! irangum
    vinn theepam nenjil aettidum
    njaanaapishaeka thailam neer
    nal varam aelum eekireer. aamaen.

  • Maa Thayavae Thaeva Thayavae மா தயவே தேவ தயவே

    மா தயவே தேவ தயவே
    மானிலத்தில் தேவை எனக்கே

    1. வாக்களித்த வானபரன்
      வாக்கு மாறார் நம்பிடுவேன்
      நம்பினோரைக் கைவிடாரே
      நர்பாதமே சரணடைந்தேன் — மா
    2. ஏசுவின் பொன் நாமத்தினால்
      ஏதென்கிலும் கேட்டிடினும்
      தம் சித்தம் போல் தந்திடுவார்
      தந்தையிவர் எந்தனுக்கே — மா
    3. சத்துருக்கள் தூஷித்தாலும்
      சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்
      ஆதரவே அளித்திடுவார்
      ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் — மா
    4. என்னில் ஏதும் பெலனில்லையே
      எந்தனுக்காய் இராப்பகலாய்
      நீதியுள்ள நேசர் இயேசு
      நித்தியமாய் பரிந்துரைப்பார் — மா
    5. தாய் வயிற்றில் இருந்த முதல்
      தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்
      என் அழைப்பும் நிறைவேற
      எப்படியும் கிரியை செய்வார் — மா
    6. தம் வருகை தரணியிலே
      தாமதமாய் நடந்தினும்
      சார்ந்தவரை அனுதினமும்
      சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் — மா

    Maa Thayavae Thaeva Thayavae Lyrics in English

    maa thayavae thaeva thayavae
    maanilaththil thaevai enakkae

    1. vaakkaliththa vaanaparan
      vaakku maaraar nampiduvaen
      nampinoraik kaividaarae
      narpaathamae saranatainthaen — maa
    2. aesuvin pon naamaththinaal
      aethenkilum kaettitinum
      tham siththam pol thanthiduvaar
      thanthaiyivar enthanukkae — maa
    3. saththurukkal thooshiththaalum
      sakthiyeenthena patcham thanthiduvaar
      aatharavae aliththiduvaar
      aaruthalaay vaalnthiduvaen — maa
    4. ennil aethum pelanillaiyae
      enthanukkaay iraappakalaay
      neethiyulla naesar Yesu
      niththiyamaay parinthuraippaar — maa
    5. thaay vayittil iruntha muthal
      thamakkae ennai therintheduththaar
      en alaippum niraivaera
      eppatiyum kiriyai seyvaar — maa
    6. tham varukai tharanniyilae
      thaamathamaay nadanthinum
      saarnthavarai anuthinamum
      sornthidaamal jepiththiduvaen — maa
  • Maa Paaviyam Ennayum மா பாவியாம் என்னையும்

    மா பாவியாம் என்னையும்
    உம் அன்பால் அணைத்தீரே
    என் இயேசு ராஜா நன்றி
    உம் சித்தம் நிறைவேற
    தம் இரத்தம் தந்தீரே
    என் இயேசு ராஜா நன்றி – 2

    குயவன் கையில் களிமண்போல
    என்னைக் கொடுத்தேன்
    பரிசுத்தமாய் என்னை வனையும்
    ஆத்ம பாரம் தந்து என்னை
    இன்றே நிரப்பும்
    உம் ஊழியம் செய்ய அனுப்பும்

    அனுப்பும் அனுப்பும்
    உம் சேவை செய்திடவே
    அனுப்பும் அனுப்பும்
    என் தேசம் சந்திக்கவே

    இருள் சூழ்ந்த இடம் என்னை இன்றே அனுப்பும்
    அழியும் மாந்தர் சந்திக்க
    நரகாக்கினைனின்று ஜனம் இரட்சிக்க
    அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

    அனுப்பும் அனுப்பும்
    உம் சேவை செய்திடவே
    அனுப்பும் அனுப்பும்
    என் தேசம் சந்திக்கவே


    Maa Paaviyam Ennayum Lyrics in English

    maa paaviyaam ennaiyum
    um anpaal annaiththeerae
    en Yesu raajaa nanti
    um siththam niraivaera
    tham iraththam thantheerae
    en Yesu raajaa nanti – 2

    kuyavan kaiyil kalimannpola
    ennaik koduththaen
    parisuththamaay ennai vanaiyum
    aathma paaram thanthu ennai
    inte nirappum
    um ooliyam seyya anuppum

    anuppum anuppum
    um sevai seythidavae
    anuppum anuppum
    en thaesam santhikkavae

    irul soolntha idam ennai inte anuppum
    aliyum maanthar santhikka
    narakaakkinainintu janam iratchikka
    apishaekam thanthu ennai anuppum

    anuppum anuppum
    um sevai seythidavae
    anuppum anuppum
    en thaesam santhikkavae

  • Maa Maatchi Karthar Sastangam Seivom மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

    1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
      வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
      நம் கேடகம் காவல் அனாதியானோர்
      மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்
    2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
      ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
      குமுறும் மின்மேகம் கோபரதமே
      கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே
    3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
      என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
      ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
      மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
    4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
      மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
      போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
      மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

    Maa Maatchi Karthar Sastangam Seivom Lyrics in English

    1. maa maatchi karththar saashdaangam seyvom
      vallavar anpar paatip pottuvom
      nam kaedakam kaaval anaathiyaanor
      makimaiyil veettuth thuthi anninthor
    2. sarva vallamai thayai pottuvom
      oli thariththor vaanam soolnthoraam
      kumurum minmaekam koparathamae
      kodum konndal kaattirul soolpaathaiyae
    3. maa neesa mannnnor naanal pontor naam
      entum kaiviteer ummai nampuvom
      aa, urukka thayai! muttum nirkumae
      meetpar nannpar kaavalar sirushtikarae
    4. aa, sarva sakthi! sollonnaa anpae!
      makilvaay vinnnnil thoothar pottavae
      pottiduvom thaalnthor naam arpar entum
      mey vanakkamaay thuthi paadalodum
  • Loeka Maayaiyil Sikkaathae லோக மாயையில் சிக்காதே

    லோக மாயையில் சிக்காதே

    1. லோக மாயையில் சிக்காது நின்று
      லோக இன்பத்தை அற்பமாய் எண்ணி
      லோக ஞானத்தை நம்பாது சென்று
      லோக ஆசையால் பற்றாது வாழ்வாய்
    2. தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமே
      லோக எண்ணமே லோக ஆசை
      லோக வேஷமே கடந்துபோமே
      பாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே
    3. தீர்க்கதரிசி பலரும் உண்டு
      அப்போஸ்தலர்கள் அனேகர் உண்டு
      மேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூட
      லோக நேசத்தால் குளிர்ந்து போனார்
    4. லோகப்பிரியம் கொள்வாரே மெல்ல
      ஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்
      வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்
      சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார்
    5. சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்
      கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்
      தேமா விலகி ஓடியே போனான்
      காரணம் ஏன்? லோகம் மேல் ஆசை!
    6. முந்நாள் நற்சாட்சி பகிர்ந்தோர் பலர்
      இந்நாள் மழுங்கி வீழ்ந்ததற்குப் பதில்
      லோகத்தின் மேலே நெஞ்சம் சென்றதால்
      எச்சரிப்போடே வாழ்க்கை நடத்து
    7. தேவமைந்தனாம் இயேசுவே இராஜா
      கலப்பை மீதே கைவைத்தேன் ஐயா
      ஆசை எதையும் கடந்து நிற்க
      வேண்டுகிறேனே அருள் கூரும் ஐயா

    Loeka Maayaiyil Sikkaathae Lyrics in English

    loka maayaiyil sikkaathae

    1. loka maayaiyil sikkaathu nintu
      loka inpaththai arpamaay ennnni
      loka njaanaththai nampaathu sentu
      loka aasaiyaal pattaாthu vaalvaay
    2. thaevappillaikal yaarkkum varumae
      loka ennnamae loka aasai
      loka vaeshamae kadanthupomae
      paavakkadalil thallik kollumae
    3. theerkkatharisi palarum unndu
      apposthalarkal anaekar unndu
      maeyppar ooliyar aakiyorkooda
      loka naesaththaal kulirnthu ponaar
    4. lokappiriyam kolvaarae mella
      jepaththil thalarchchiyuruvaarae pinnar
      vaethaththin maelae vaanjai ilappaar
      saatchimalungik kuppaiyaayp povaar
    5. simson than pelan marainthu seththaan
      kaeyaasi kushdam kanndu thutiththaan
      thaemaa vilaki otiyae ponaan
      kaaranam aen? lokam mael aasai!
    6. munnaal narsaatchi pakirnthor palar
      innaal malungi veelnthatharkup pathil
      lokaththin maelae nenjam sentathaal
      echcharippotae vaalkkai nadaththu
    7. thaevamainthanaam Yesuvae iraajaa
      kalappai meethae kaivaiththaen aiyaa
      aasai ethaiyum kadanthu nirka
      vaenndukiraenae arul koorum aiyaa