Category: Tamil Worship Songs Lyrics

  • Karunai Un Vadivallava கருணை உன் வடிவல்லவா

    கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா

    கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா

    கருணை உன் வடிவல்லவா

    வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்

    கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்

    எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

    வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்

    மனதீபம் நீ என்று அறியாமலே

    அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்

    அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே – 2

    தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்

    உணராத நிலை மாற்றுவாயோ

    உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்

    ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்

    மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

    செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்

    புவிமீது இசைஞானம் இழிவாகுமே

    சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்

    புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே – 2

    உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை

    உண்டாக்கி அருள் வீசுவாயோ

    தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்

    இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்

    நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்


    Karunai Un Vadivallava Lyrics in English

    karunnai un vativallavaa kadavul un peyarallavaa

    kadanthaalum ullaththin ul vaalpavaa

    karunnai un vativallavaa

    vaanam paranthaalum angum un maenmai thangum

    kadalaalam sentalum un njaanam pongum

    engaெngum theyveeka mayamallavaa

    veli engum sudar veesum oli entu solvaar

    manatheepam nee entu ariyaamalae

    arulmaekam polikinta malai entum solvaar

    akam oorum unathanpaip puriyaamalae – 2

    thodunthooram irunthaalum neethaan entan

    unaraatha nilai maattuvaayo

    unthan kadal ponta anpin thuli pothum vaalvaen

    oli unndu vaalum malar pola aavaen

    manavaasal thiranthae un mayamaakuvaen

    seviyintik kuyilpaadal inithentu sonnaal

    puvimeethu isainjaanam ilivaakumae

    suyam thaeti alaivorkal anpentu unnaip

    pukalnthaalum un maenmai paluthaakumae – 2

    un vaana vinnmeenil ontay ennai

    unndaakki arul veesuvaayo

    thooymai ulaimeethu olirum irumpaakak kaayvaen

    iraimeettum yaalil narampaakath thaeyvaen

    nilai enna vanthaalum unaip pottuvaen

  • Karunagara Deva Irangi கருணாகர தேவா இரங்கி

    கருணாகர தேவா இரங்கி இந்தக்
    கங்குலில் எனைக் காவா

    இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
    என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக

    சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
    சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
    நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
    நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி

    நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
    நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
    சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
    தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து

    தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
    தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
    வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
    மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு

    தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
    திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
    காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
    காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட


    Karunagara Deva Irangi Lyrics in English

    karunnaakara thaevaa irangi inthak
    kangulil enaik kaavaa

    irulaethum anukaamal iravilum pakalpola
    entum prakaasamaaka ilangum maathiriyaeka

    senta pakalil kaaththuch ser vipaththukal neeththuch
    serththaiyae vali paarththuth thikil theerththu
    nanti yatharkuth thuthi navilvan nee en kathi
    naadum en athipathi namaskaaram unakkathi

    niththiraiyil utpukunthu saththurup pasaasu vanthu
    nerungaamal nee elunthu nilai purinthu
    suththa nenjaோdamainthu thoonga nal thuyil thanthu
    thoothar kaaval nirainthu thunnaiyaay ennotirunthu

    thaathaa anntinaen unnaith thanjam neeyae ennaith
    thaanguvathaar pinnai saarvan ninnai
    vaethaa naan un thonndu vinainjan ennilai kanndu
    meenndum settaைkal vinndu vilakaa thanaiththuk konndu

    theeya ennnangal paara thikil kanavukal maarath
    thivya sinthai ul oora sthiram aerak
    kaayam uyirum koodak karuththunno duravaadak
    kaalai nallaram naadak karisiththun thuthi paada

  • Karththavey En Pelaney கர்த்தாவே என் பெலனே

    கர்த்தாவே என் பெலனே
    உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
    துருகமும் நீர் கேடகம் நீர்
    இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் (2)

    1.மரணத்தின் கட்டுகள் சூழ்ந்தபோதும்
    துர்ச்சனப் பிரவாகம்புரண்டபோதும்
    நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
    உருக்கமாய் வந்து உதவி செய்தார் (2)

    2.தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
    உத்தமனை நீர் உயர்த்திடுவீர் (2)
    புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
    புதிய கிருபையின் உறைவிடமே (2)

    3.உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன்
    உம்மாலே மதிலை தாண்டுவேன் (2)
    சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
    சதாகாலமும் ஜெயம் எடுப்பேன் (2)

    4.இரட்சணிய கேடகம் எனக்குத் தந்தீர்
    உமது கரம் என்னை உயர்த்தும்
    கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
    அவரே எந்தன் கன்மலையாவார் – கர்த்தாவே

    5.பெலத்தினால் என்னை இடைக்கட்டி
    மான்களின் கால்களைப் போலாக்கி
    நீதியின் சால்வையை எனக்கு தந்து

    உயர்ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் (2)


    Karththavey En Pelaney Lyrics in English

    karththaavae en pelanae
    ummil anpu koornthiduvaen
    thurukamum neer kaedakam neer
    iratchannya kompum ataikkalam neer (2)

    1.maranaththin kattukal soolnthapothum
    thurchchanap piravaakampuranndapothum
    nerukkaththin maththiyil kural eluppa
    urukkamaay vanthu uthavi seythaar (2)

    2.thayai seypavanukku neer thayaiyullavar
    uththamanai neer uyarththiduveer (2)
    punithanukku neer punitharanto
    puthiya kirupaiyin uraividamae (2)

    3.ummaalae or senaikkul paayvaen
    ummaalae mathilai thaannduvaen (2)
    saththuruvai naan thodarnthiduvaen
    sathaakaalamum jeyam eduppaen (2)

    4.iratchanniya kaedakam enakkuth thantheer
    umathu karam ennai uyarththum
    karththarai allaal thaevan illai
    avarae enthan kanmalaiyaavaar – karththaavae

    5.pelaththinaal ennai itaikkatti
    maankalin kaalkalaip polaakki
    neethiyin saalvaiyai enakku thanthu
    uyarsthalaththil ennai niruththukintar (2)

  • Karththarin Vairaakkiyam கர்த்தரின் வைராக்கியம்

    கர்த்தரின் வைராக்கியம் – நம்
    கர்த்தரின் வைராக்கியம்
    இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்
    கர்த்தரின் வைராக்கியம்

    1. வானமும் பூமியும் படைத்தவர்
      வார்த்தையினால் உண்டாக்கியவர்
      விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்
      அதிகாரம் அனைத்தும் கொண்டவர்
      ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்
      அவராலே எல்லாம் கூடும்!
    2. கடலை மதிலாய் நிறுத்தியவர்
      எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!
      சிங்கத்தின் வாயைக் கட்டியவர்
      நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!
      மீந்திருக்கும் தம் ஜனத்துக்கு
      கர்த்தர் நாமம் அடைக்கலமே!
    3. எம்மாவவூர் சென்ற சீடருடன்
      நடந்தே வேதம் போதித்தவர்!
      பேதை ஊழியர் இதயத்தில்
      அக்கினி ஜூவாலையை மூட்டியவர்!
      உயிர்த்தெழுந்த இயேசுவோடு
      இணைந்து பாடுகள் சந்திப்போம்!
    4. நமக்காய் யாவையும் செய்திடுவார்!
      வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!
      கண்மணிபோலக் காத்திடுவார்!
      சபையைத் திரளாய்ப் பெருக்கிடுவார்!
      யாக்கோபின் தேவனின் துணை உண்டு!
      அவர்க்கெதிராய் யார்தான் உண்டு!

    Karththarin Vairaakkiyam Lyrics in English

    karththarin vairaakkiyam – nam
    karththarin vairaakkiyam
    intha thaesaththai suthantharikkum – nam
    karththarin vairaakkiyam

    1. vaanamum poomiyum pataiththavar
      vaarththaiyinaal unndaakkiyavar
      vinnnnaiyum mannnnaiyum aalupavar
      athikaaram anaiththum konndavar
      ongi nirkum avar valathukaram
      avaraalae ellaam koodum!
    2. kadalai mathilaay niruththiyavar
      ethiriyai aaliyil amilththiyavar!
      singaththin vaayaik kattiyavar
      neruppil vaekaamal niruththiyavar!
      meenthirukkum tham janaththukku
      karththar naamam ataikkalamae!
    3. emmaavavoor senta seedarudan
      nadanthae vaetham pothiththavar!
      paethai ooliyar ithayaththil
      akkini joovaalaiyai moottiyavar!
      uyirththeluntha Yesuvodu
      innainthu paadukal santhippom!
    4. namakkaay yaavaiyum seythiduvaar!
      vettikku naeraay nadaththiduvaar!
      kannmannipolak kaaththiduvaar!
      sapaiyaith thiralaayp perukkiduvaar!
      yaakkopin thaevanin thunnai unndu!
      avarkkethiraay yaarthaan unndu!
  • Karththarin Naal Payankaram கர்த்தரின் நாள் பயங்கரம்

    பலிபீடத்துக்கு வாருங்கள்

    கர்த்தரின் நாள் பயங்கரம்
    அந்த நாளை சகிப்பவன் யார்?

    ஆதலால் நீங்கள் யாவரும்
    உபவாசித்துப் புலம்புங்கள்

    1. வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்
      நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே
    2. முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்
      கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள்
    3. கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்
      திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள்
    4. கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்
      தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு
    5. வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்
      முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே

    Karththarin Naal Payankaram Lyrics in English

    palipeedaththukku vaarungal

    karththarin naal payangaram
    antha naalai sakippavan yaar?

    aathalaal neengal yaavarum
    upavaasiththup pulampungal

    1. vasthiramalla iruthayaththai parisuththamae pannnungal
      namathu ullam norunginaalthaan karththarukkup piriyamae
    2. muthiyorkalum kulanthaikalum vaaliparum sapaiyorum
      kootivanthu Yesu paatham kaaththirunthu jepiyungal
    3. karththarutaiya ooliyarae palipeedaththil vaarungal
      thirappin vaasalil nintukonndu aluthu pulampi jepiyungal
    4. karththar namathu thaesaththin mael periya kaariyam seykuvaar
      thaesamae nee payappadaathae mana makilnthu kalikooru
    5. vaakkuththaththam seytha thaevan munmaariyaip polinthittar
      munmaari pinmaariyaiyum nichchayamaayth tharuvaarae
  • Karththarilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

    கர்த்தரில் பெலப்படுவோம்

    1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
      கிருபையால் அனைவரும் பலப்படுவோம்
      தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
      திராணியுடன் போர் புரிவோம்

    சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்
    சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர்
    சத்துவ வல்லமையால்

    1. மாமிசம் இரத்தத்துடனுமல்ல
      துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
      லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
      போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத
    2. சத்தியமாம் கச்சையை கட்டியே
      நீதியின் மார்க்கவசம் தரித்தே
      சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
      நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத
    3. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
      வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம்
      விசுவாசம் என்னும் கேடகம் மேலே
      வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத
    4. இரட்சண்யமாம் தலைச்சீராவும்
      எச்சனமும் அணிந்துகொள்வோம்
      தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
      தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத
    5. எந்தச் சமயத்திலும் சகல
      வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
      பரிசுத்தர்கட்காக ஆவியினால்
      மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

    Karththarilum Tham Vallamaiyilum Lyrics in English

    karththaril pelappaduvom

    1. karththarilum tham vallamaiyilum
      kirupaiyaal anaivarum palappaduvom
      theengu naalilae saaththaanai ethirththu nintu
      thiraanniyudan por purivom

    sarvaayutha varkkaththai eduththukkolvom
    saaththaanin senaiyai muriththiduvom – avar
    saththuva vallamaiyaal

    1. maamisam iraththaththudanumalla
      thuraiththanam athikaaram anthakaaraththin
      lokaathipathiyodum pollaa aaviyodum
      poraattam namakku unndu – sarvaayutha
    2. saththiyamaam kachchaைyai kattiyae
      neethiyin maarkkavasam thariththae
      samaathaanaththin suvisesha paatharatchaை
      naam kaalkalil thoduththukkolvom – sarvaayutha
    3. pollaangan eyyum ampukalai
      vallamaiyodum ethirkkum aayutham
      visuvaasam ennum kaedakam maelae
      veeramudan pitiththu nirpom – sarvaayutha
    4. iratchannyamaam thalaichchaீraavum
      echchanamum anninthukolvom
      thaeva vasanamennum aaviyin pattayam
      thaevai athaippitiththukkolvom – sarvaayutha
    5. enthach samayaththilum sakala
      vaennduthalodum vinnnappaththodum
      parisuththarkatkaaka aaviyinaal
      manauruthiyudan jepippom – sarvaayutha
  • Karththaraiye Paadiye கர்த்தரைப் பாடியே

    கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
    கருத்துடன்துதிப்போம் இனியநாமமதை
    கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
    கரையில்லை அவரன்பு கரையற்றதே!

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர் – என்
    இயேசுவைபோல் வேறு நேசரில்லையே!

    1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
    அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
    பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும்
    திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்!

    2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
    கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
    தேவ குமாரனின் விசுவாசத்தாலே
    நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்!

    3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
    கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
    எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
    வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்!

    4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட
    இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
    முகமுகமாகவே காண்போமே
    அவரை யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்!


    Karththaraiye Paadiye Lyrics in English

    karththaraip paatiyae pottiduvomae
    karuththudanthuthippom iniyanaamamathai
    kadalin aalam pol karunnaiyotirakkam
    karaiyillai avaranpu karaiyattathae!

    Yesu nallavar Yesu vallavar – en
    Yesuvaipol vaetru naesarillaiyae!

    1.kodumaiyor seeral peruvellam pola
    atikkaiyil mothiyae mathilkalin meethae
    pelanum ivvaelaikkum eliyorkkum
    thidanaay veyilukku othungum vinn nilalumaanaar!

    2.porattam sothanai ninthai avamaanam
    koramaay vanthum kirupaiyil nilaikka
    thaeva kumaaranin visuvaasaththaalae
    naan jeeviththu sevikka thidamaliththaar!

    3.kallum mullukalulla katina paathaiyilae
    kalakkangal nerukkangal akamathai varuththa
    ellaiyillaa ethir emakku vanthaalum
    vallavar Yesu nam mun selkiraar!

    4.seeyonil sirappudan serththida
    Yesu seekkiram varum naal nerungi vanthiduthae
    mukamukamaakavae kaannpomae
    avarai yukayukamaakavae vaalnthiduvom!

  • Karththarai Thuthiyunkal Avar Enrum கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும்

    கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
    அவர் பேரன்பு என்றுமுள்ளது

    1. ஒருவராய் மாபெரும்
      அதிசயங்கள் செய்தாரே
      வானங்களை ஞானமாய்
      உண்டாக்கி மகிழ்ந்தாரே

    இன்று போற்றி புகழுவோம்
    நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)

    1. பகலை ஆள்வதற்கு
      கதிரவனை உருவாக்கினார்
      இரவை ஆள்வதற்கு
      சந்திரனை உருவாக்கினார்
    2. செங்கடலை இரண்டாக
      பிரித்து நடக்கச் செய்தார்
      வனாந்திர பாதையிலேää
      ஜனங்களை நடத்திச் சென்றார்
    3. தாழ்மையில் இருந்த
      நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்
      எதிரியின் கையினின்று
      விடுவித்துக் காத்திக் கொண்டார்

    Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in English

    karththarai thuthiyungal avar entum nallavar
    avar paeranpu entumullathu

    1. oruvaraay maaperum
      athisayangal seythaarae
      vaanangalai njaanamaay
      unndaakki makilnthaarae

    intu potti pukaluvom
    naam uyarththi makiluvom – (2)

    1. pakalai aalvatharku
      kathiravanai uruvaakkinaar
      iravai aalvatharku
      santhiranai uruvaakkinaar
    2. sengadalai iranndaaka
      piriththu nadakkach seythaar
      vanaanthira paathaiyilaeää
      janangalai nadaththich sentar
    3. thaalmaiyil iruntha
      nammaiyellaam ninaivukoornthaar
      ethiriyin kaiyinintu
      viduviththuk kaaththik konndaar
  • Karththarai Noekki Amarnthiruppoem கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்

    கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
    கவலை மறந்து காத்திருப்போம்

    1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
      நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
      அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
      இதய விருப்பம் நிறைவேற்றுவார்
    2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
      நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
      உமதி செய்து காத்திடுவார்
      உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
    3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
      ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
      கர்த்தரையே சார்ந்திருப்போம்
      அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
    4. சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்
      முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
      வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
      வாழ்வின் பாதை காட்டிடுவார்

    Karththarai Noekki Amarnthiruppoem Lyrics in English

    karththarai Nnokki amarnthiruppom
    kavalai maranthu kaaththiruppom

    1. karththarai nampi nanmai seyvom
      nallathor maeychchalai kanndataivom
      avaril naam makilnthiruppom
      ithaya viruppam niraivaettuvaar
    2. neethimaan iratchippu nichchayamae
      niththam ataikkalam karththar thaamae
      umathi seythu kaaththiduvaar
      ullaththil thangi nadaththiduvaar
    3. valikal anaiththum karththarukkae
      oppuviththu naam makilnthiruppom
      karththaraiyae saarnthiruppom
      avarae anaiththum vaaykkach seyvaar
    4. suyapuththiyul saaynthidaamal
      mulu ullaththodu nampiduvom
      valikalellaam ninaiththiduvom
      vaalvin paathai kaatdiduvaar
  • Karththarai Nampiyae Jeevippoem கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

    கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
    கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
    கைவிடா காத்திடும் பரமனின்
    கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

    1. ஜீவதேவன் பின் செல்லுவோம்
      ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
      மனதின் காரிருள் நீங்கிடவே
      மாசமாதானம் தங்கும்
    2. உண்மை வழி நடந்திடும்
      உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
      கண்கள் அவன் மீது வைத்திடுவார்
      கருத்தாய்க் காத்திடுவார்
    3. உள்ளமதின் பாரங்களை
      ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
      இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
      இயேசு வந்தாதரிப்பார்
    4. அன்புமிகும் அண்ணலிவர்
      அருமை இயேசுவை நெருங்குவோம்
      தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
      தாங்கி அணைத்திடுவார்
    5. நீதிமானின் சிரசின்மேல்
      நித்திய ஆசீர் வந்திறங்குமே
      கிருபை, நன்மைகள் தொடருமே
      கேட்பது கிடைக்குமே
    6. இம்மைக்கேற்ற இன்பங்களை
      நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
      மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
      மறுமை இராஜ்ஜியத்தில்

    Karththarai Nampiyae Jeevippoem Lyrics in English

    karththarai nampiyae jeevippom
    kavalai kashdangal theernthidum
    kaividaa kaaththidum paramanin
    karangalai naam pattik kolvom

    1. jeevathaevan pin selluvom
      jeeva olithanaik kanndataivom
      manathin kaarirul neengidavae
      maasamaathaanam thangum
    2. unnmai vali nadanthidum
      uththamanukkentum karththar thunnai
      kannkal avan meethu vaiththiduvaar
      karuththaayk kaaththiduvaar
    3. ullamathin paarangalai
      ookkamaay karththaridam solluvom
      ikkattu naeraththil kooppiduvom
      Yesu vanthaatharippaar
    4. anpumikum annnalivar
      arumai Yesuvai nerunguvom
      thammanntai vanthoraith thallidaarae
      thaangi annaiththiduvaar
    5. neethimaanin sirasinmael
      niththiya aaseer vanthirangumae
      kirupai, nanmaikal thodarumae
      kaetpathu kitaikkumae
    6. immaikkaetta inpangalai
      nammai vittae muttum akattuvom
      maaraatha santhosham thaediduvom
      marumai iraajjiyaththil