Category: Tamil Worship Songs Lyrics

  • Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

    ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே

    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது

    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே

    கண்ணீரைக் கண்டீரையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம்மையே நம்பி உள்ளேன்
    பூரண சமாதானரே
    போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்


    Jebam Kaetteeraiyaa Jeyam Thandheeraiyaa Lyrics in English

    jepam kaettiraiyaa
    jeyam thantheeraiyaa
    thallaada vidavillaiyae
    thaangiyae nadaththineerae

    pukalkinten paattuppaati
    puyal intu oynthathu
    puthuraakam piranthathu

    nanti appaa nallavarae
    intum entum vallavarae

    kannnneeraik kannteeraiyaa
    karam pitiththeeraiyaa
    vinnnappam kaettiraiyaa
    viduthalai thantheeraiyaa – pukalkinten

    epinaesar neerthaanaiyaa
    ithuvarai uthavineerae
    elroyee neerthaanaiyaa
    ennaiyum kannteeraiyaa – pukalkinten

    uruthiyaay pattik konntaen
    ummaiyae nampi ullaen
    poorana samaathaanarae
    pothumae um samookamae – pukalkinten

  • Jeba velai emakanantham ஜெபவேளை எமக்கானந்தம்

    ஜெபவேளை எமக்கானந்தம்
    என்றும் ஜெபமில்லா ஜெயமில்லை
    ஜெபம் எங்கள் ஜெயமே

    இருள் சூழ்ந்த வனம் போன்ற
    இருண்ட கெத்செமனேயில்
    இறுதி வேளையில் ஜெபித்தீர் – இரத்த
    வேர்வையும் பெருமூச்சும் பெருகிடவே
    அந்த இரவெல்லாம் ஜெபித்தீரையா – இந்த

    மறுரூப மலைமீதில் தரிசனம் கொடுத்து
    உம் மகிமையை அளித்தீரையா
    அன்று போல உம் தரிசனம் எமக்கருளும்
    எங்கள் அருமை ஆண்டவர் இயேசையா

    சரீரமோ பெலவீனம்
    ஆவியே உயிர்ப்பிக்கும்
    சலிப்பின்றி ஜெபித்திடுவோம்
    அந்த சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவே
    நல்ல அருள் ஆவி வரம் தாருமே

    ஊர் ஆரோன் இருவரும் கரங்களை சுமந்திட
    ஊக்கமாய் ஜெபம் செய்தாரே
    பக்தன் மோசே போல் ஜெயம் பெற
    ஜெபித்திடவே நித்தியபரனே கிருபை தாருமே

    உயர் கர்மேல் மலை மீது
    ஜெபித்திடும் எலியா போல்
    துயருற்ற மகள் அன்னாள் போல்
    தாசன் தானியேல் எனும் பக்தர் பலர்
    ஜெபித்த அந்த தனி ஜெப வரம் தாருமே


    Jeba velai emakanantham Lyrics in English

    jepavaelai emakkaanantham
    entum jepamillaa jeyamillai
    jepam engal jeyamae

    irul soolntha vanam ponta
    irunnda kethsemanaeyil
    iruthi vaelaiyil jepiththeer – iraththa
    vaervaiyum perumoochchum perukidavae
    antha iravellaam jepiththeeraiyaa – intha

    maruroopa malaimeethil tharisanam koduththu
    um makimaiyai aliththeeraiyaa
    antu pola um tharisanam emakkarulum
    engal arumai aanndavar iyaesaiyaa

    sareeramo pelaveenam
    aaviyae uyirppikkum
    salippinti jepiththiduvom
    antha santhi maththiyaanaththil jepiththidavae
    nalla arul aavi varam thaarumae

    oor aaron iruvarum karangalai sumanthida
    ookkamaay jepam seythaarae
    pakthan mose pol jeyam pera
    jepiththidavae niththiyaparanae kirupai thaarumae

    uyar karmael malai meethu
    jepiththidum eliyaa pol
    thuyarutta makal annaal pol
    thaasan thaaniyael enum pakthar palar
    jepiththa antha thani jepa varam thaarumae

  • Jeba Sinthai Enil Thaarum Deva ஜெப சிந்தை எனில் தாரும், தேவா

    ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை

    அனுபல்லவி

    அபயமென் றுனக் குக்கை
    அளித்தேன் பொற்பாதா — ஜெப

    சரணங்கள்

    1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
      கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
      தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ
      தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப
    2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்
      இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
      சடமுலகப் பேயை வெல்லும் – நற்
      சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப
    3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா
      நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
      பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
      ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப

    Jeba Sinthai Enil Thaarum Deva Lyrics in English

    jepa sinthai enil thaarum, thaevaa – ennai

    anupallavi

    apayamen runak kukkai
    aliththaen porpaathaa — jepa

    saranangal

    1. unnmai manatho dunnaik kenja – ula
      kennna mellaam akatti urimaiyae minja,
      thonmai aayakkaaran polanja – pava
      thoshamakalath thiruraththam ullinja — jepa
    2. itaividaamal seyyum ennnam – en
      ithayaththil uthayamaay ilangidap pannnum,
      sadamulakap paeyai vellum – nar
      saathaka munndaakath thayaisey ennullam — jepa
    3. ookkamudan jepam seyya – thakaa
      Nnokka mellaam kettu norungiyae naiya,
      paeykkana modupor seyya – nal
      aakkam enil thanthu aekkam theernthuyya — jepa
  • Jeba Aavi Ootrumaiah Jebikkanum ஜெப ஆவி ஊற்றுமையா

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே


    Jeba aavi ennil Lyrics in English

    jepa aavi ennil oottum thaevaa
    jepa sinthai ennil thaarum thaevaa

    akkiniyaay naan eriya vaenndum
    anal mootdidum aluthu pulampi jepiththida
    jepa aaviyaal nirappumae

    ulakam maamisam pisaasinaal
    aliyum maantharkkaay
    thirappin vaasalil nintida
    jepa aaviyaal nirappumae

    iraththamum vaervaiyum sinthiyae
    jepiththa naesarae
    vaalnaalellaam ummaip polavae
    jepa aaviyaal nirappumae

  • Jeba aavi ennil ஜெப ஆவி என்னில்

    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே


    Jeba aavi ennil Lyrics in English

    jepa aavi ennil oottum thaevaa
    jepa sinthai ennil thaarum thaevaa

    akkiniyaay naan eriya vaenndum
    anal mootdidum aluthu pulampi jepiththida
    jepa aaviyaal nirappumae

    ulakam maamisam pisaasinaal
    aliyum maantharkkaay
    thirappin vaasalil nintida
    jepa aaviyaal nirappumae

    iraththamum vaervaiyum sinthiyae
    jepiththa naesarae
    vaalnaalellaam ummaip polavae
    jepa aaviyaal nirappumae

  • Jaithuvitaar marathai ஜெயித்து விட்டார் மரணத்தை

    ஜெயித்து விட்டார் மரணத்தை
    விழுங்கி விட்டார் சாவினை
    எழுந்து விட்டார் ஜீவனோடே
    வென்று விட்டார் பாவத்தை
    கொன்று விட்டார் சாபத்தை
    உயிர்த்து விட்டார் என்றென்றுமே

    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    உயிருடன் எழுந்தவரை கொண்டாடுமே

    ஒடித்து விட்டார் சாவின் கூர்
    ஜெயித்து விட்டார் நரகத்தை
    முடித்து விட்டார் கிரியைதனை
    தந்து விட்டார் இரட்சிப்பை
    சென்று விட்டார் பரலோகம்
    அமர்ந்து விட்டார் தேவனோடே

    ஆர்ப்பரித்து ஆடுவோம்
    மகிழ்ச்சியோடே பாடுவோம்
    இயேசு என்றும் ஜீவிக்கிறார்
    எங்கும் சொல்வோம் நற்செய்தி
    கொண்டு செல்வோம் சுவிசேஷம்
    இயேசு நாமம் போற்றிடுவோம்


    Jaithuvitaar marathai Lyrics in English

    jeyiththu vittar maranaththai
    vilungi vittar saavinai
    elunthu vittar jeevanotae
    ventu vittar paavaththai
    kontu vittar saapaththai
    uyirththu vittar ententumae

    konndaaduvom konndaaduvom
    uyirudan elunthavarai konndaadumae

    otiththu vittar saavin koor
    jeyiththu vittar narakaththai
    mutiththu vittar kiriyaithanai
    thanthu vittar iratchippai
    sentu vittar paralokam
    amarnthu vittar thaevanotae

    aarppariththu aaduvom
    makilchchiyotae paaduvom
    Yesu entum jeevikkiraar
    engum solvom narseythi
    konndu selvom suvisesham
    Yesu naamam pottiduvom

  • Jaganaatha Gurubaranaatha Thiru ஜகநாதா, குருபரநாதா, திரு

    ஜகநாதா, குருபரநாதா, திரு
    அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!

    அனுபல்லவி

    திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
    தீதறும் வேத போதா! — ஜகநாதா

    சரணங்கள்

    1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
      மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
      நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
      நரதேவனாக வந்தாய் மொழியாலோ? — ஜகநாதா
    2. எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,
      இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே,
      ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
      உடு வழி காட்டிடப் புரிந்தாயே — ஜகநாதா
    3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
      ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
      வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
      மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே — ஜகநாதா
    4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
      மதுரபரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
      சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
      திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே — ஜகநாதா
    5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
      தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
      வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
      மேவி அனுபவிக்க நேர்ந்தாயே — ஜகநாதா
    6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
      ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
      எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
      எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே — ஜகநாதா

    Jaganaatha Gurubaranaatha Thiru Lyrics in English

    jakanaathaa, kuruparanaathaa, thiru
    arul naathaa, aesupirasaathaa naathaa!

    anupallavi

    thikalurun thaathaa, pukalurum paathaa,
    theetharum vaetha pothaa! — jakanaathaa

    saranangal

    1. murkaalam aathimainthar mosap pisaasu thanthira
      moy konndu kaniyunnda paliyaalo?
      narkaalam nee therinthu, navinta vannnam parinthu,
      narathaevanaaka vanthaay moliyaalo? — jakanaathaa
    2. eliya kolam thariththae ing kavathiriththaalum,
      imaiyor vanthirainjidath therinthaayae,
      oli seyyum pannimuti uyar mannar tholumpati
      udu vali kaattidap purinthaayae — jakanaathaa
    3. arun thavan kaiyil thangi, anpinpak kadal pongi,
      aalayaththil thuthikka kaliththaayae,
      varum thava mathiyaal mun mara mannan thaetida, un
      malar mukang kaattamal oliththaayae — jakanaathaa
    4. makkal ulak kalangam maasattaொli vilanga,
      mathuraparasangam yaarkkum uraiththaayae;
      sik kadar thun manaththaith thiruththi, araththin viththai
      thiruth thayai koorn thevarkkum vithaiththaayae — jakanaathaa
    5. thanaiyar val Nnoyaikkannda thaayaar marunthut konnda
      thakaimai enap paeranpu koornthaayae;
      vinaiyar vem paavak kaedu vilaka ariya paadu
      maevi anupavikka naernthaayae — jakanaathaa
    6. amarar muttum ariyaar, atikal sattum ariyaar,
      aar un thiral arivaar, karththaavae?
      emathu pavam poruththae, irakkam emmael ukuththae,
      emaip puranthaalum, maanap parththaavae — jakanaathaa
  • Iyya Um Tholgalile ஐயா உம் தோள்களிலே

    ஐயா உம் தோள்களிலே

    ஆடிடும் மலரிலே

    மெய்யாய் ஒரு மலராய்

    தேவன் தரவில்லையே

    பல்லவி

    சின்னப் பூ நானல்லவோ தேவனே

    நான் சொல்லவோ

    என்னை உம் பாதத்திலே

    ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

    வண்ணம் எனக்கில்லையே

    வாசல் திறப்பில்லையே

    மண்ணில் உதிரும் முன்னே

    வாழ்வு கொடுத்தால் என்ன – சின்னப் பூ

    தொய்யும் உயிர் பிரிந்தே

    ஓடிப்பறக்கும் முன்னே

    தூய விரல்களிலே

    தொட்டுப் பறித்தால் என்ன – சின்னப் பூ


    Iyya Um Tholgalile Lyrics in English

    aiyaa um tholkalilae

    aadidum malarilae

    meyyaay oru malaraay

    thaevan tharavillaiyae

    pallavi

    sinnap poo naanallavo thaevanae

    naan sollavo

    ennai um paathaththilae

    aettukkonndaal ennavo(2)

    vannnam enakkillaiyae

    vaasal thirappillaiyae

    mannnnil uthirum munnae

    vaalvu koduththaal enna – sinnap poo

    thoyyum uyir pirinthae

    otipparakkum munnae

    thooya viralkalilae

    thottup pariththaal enna – sinnap poo

  • Iyya Um Thirunamam ஐயா உம்திரு நாமம்

    ஐயா உம்திரு நாமம்
    அகில மெல்லாம் பரவ வேண்டும்
    ஆறுதல் உம் வசனம்
    அனைவரும் கேட்க வேண்டும்

    1. கலங்கிடும் மாந்தர்
      கல்வாரி அன்பை
      கண்டு மகிழ வேண்டும்
      கழுவப்பட்டு வாழ வேண்டும்
    2. இருளில் வாழும் மாந்தர்
      பேரொளியைக் கண்டு
      இரட்சிப்பு அடைய வேண்டும்
      இயேசு என்று சொல்ல வேண்டும்
    3. சாத்தானை வென்று சாபத்தினின்று
      விடுதலை பெற வேண்டும்
      வெற்றி பெற்று வாழ வேண்டும்
    4. குருடரெல்லாம் பார்க்கணும்
      முடவரெல்லாம் நடக்கணும்
      செவிடரெல்லாம் கேட்கணுமே
      சுவிசேஷம் சொல்லணுமே

    Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம் Lyrics in English

    Iyya Um Thirunamam
    aiyaa umthiru naamam
    akila mellaam parava vaenndum
    aaruthal um vasanam
    anaivarum kaetka vaenndum

    1. kalangidum maanthar
      kalvaari anpai
      kanndu makila vaenndum
      kaluvappattu vaala vaenndum
    2. irulil vaalum maanthar
      paeroliyaik kanndu
      iratchippu ataiya vaenndum
      Yesu entu solla vaenndum
    3. saaththaanai ventu saapaththinintu
      viduthalai pera vaenndum
      vetti pettu vaala vaenndum
    4. kurudarellaam paarkkanum
      mudavarellaam nadakkanum
      sevidarellaam kaetkanumae
      suvisesham sollanumae
  • Iyesu umthainthu kaayam இயேசு உமதைந்து காயம்

    இயேசு உமதைந்து காயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    உம்முடைய வாதையின்
    நினைவு என் மனதின்
    இச்சை மாளுவதற்காக
    என்னிலே தரிப்பதாக

    லோகம் தன் சந்தோஷமான
    நகர வழியிலே
    என்னைக் கூட்டிக்கொள்வதான
    மோசத்தில் நான் இயேசுவே
    உமது வியாகுல
    பாரத்தைத் தியானிக்க
    என் இதயத்தை அசையும்
    அப்போ மோசங்கள்கலையும்

    எந்தச் சமயத்திலேயும்
    உம்முடைய காயங்கள்
    எனக்க நுகூலம் செய்யும்
    என்பதே என் ஆறுதல்
    ஏனெனில் நீர் எனக்கு
    பதிலாய் மரித்தது
    என்னை எந்த அவதிக்கும்
    நீங்கலாக்கி விடுவிக்கும்

    நீர் மரித்ததால் ஓர்க்காலும்
    சாவை ருசிபாரேனே
    இதை முழு மனதாலும்
    நான் நம்பட்டும் இயேசுவே
    உமது அவஸ்தையும்
    சாவின் வேதனைகளும்
    நான் பிழைக்கிறதற்காக
    எனக்குப் பலிப்பதாக

    இயேசு உமதைந்துகாயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    முடிவில் விசேஷமாய்
    என்னை மீட்ட மீட்பராய்
    என்னை ஆதரித்தன்பாக
    அங்கே சேர்த்துக் கொள் வீராக.


    Iyesu umthainthu kaayam Lyrics in English

    Yesu umathainthu kaayam
    Nnovum saavum enakku
    enthap porilum sakaayam
    aaruthalumaavathu
    ummutaiya vaathaiyin
    ninaivu en manathin
    ichchaை maaluvatharkaaka
    ennilae tharippathaaka

    lokam than santhoshamaana
    nakara valiyilae
    ennaik koottikkolvathaana
    mosaththil naan Yesuvae
    umathu viyaakula
    paaraththaith thiyaanikka
    en ithayaththai asaiyum
    appo mosangalkalaiyum

    enthach samayaththilaeyum
    ummutaiya kaayangal
    enakka nukoolam seyyum
    enpathae en aaruthal
    aenenil neer enakku
    pathilaay mariththathu
    ennai entha avathikkum
    neengalaakki viduvikkum

    neer mariththathaal orkkaalum
    saavai rusipaaraenae
    ithai mulu manathaalum
    naan nampattum Yesuvae
    umathu avasthaiyum
    saavin vaethanaikalum
    naan pilaikkiratharkaaka
    enakkup palippathaaka

    Yesu umathainthukaayam
    Nnovum saavum enakku
    enthap porilum sakaayam
    aaruthalumaavathu
    mutivil viseshamaay
    ennai meetta meetparaay
    ennai aathariththanpaaka
    angae serththuk kol veeraaka.