Category: Tamil Worship Songs Lyrics

  • Immattum kathavar இம்மட்டும் காத்தவர்

    இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
    அவர் இனியும் நடத்திடுவார்
    அவர் கிருபை என்றென்றுமுள்ளது

    தாழ்வில் நினைத்தவரே
    என்னை தயவாய் தூக்கினீரே
    சத்துருவின் கையினின்று விடுதலை தந்தவரை
    என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்

    உம் வார்த்தையால் தேற்றினீரே
    ஆத்துமாவில் பெலன் தந்தீரே
    கூப்பிடும் போது பதில் தரும் தேவனே
    உம்மையே ஆராதிப்பேன்

    உம் நீதியின் வலக்கரத்தால்
    என்னை தாங்கி இரட்சிப்பவரே
    எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
    என்றென்றும் நம்பிடுவேன்


    Immattum kathavar Lyrics in English

    immattum kaaththavar immaanuvael
    avar iniyum nadaththiduvaar
    avar kirupai ententumullathu

    thaalvil ninaiththavarae
    ennai thayavaay thookkineerae
    saththuruvin kaiyinintu viduthalai thanthavarai
    ententum sthoththirippaen

    um vaarththaiyaal thaettineerae
    aaththumaavil pelan thantheerae
    kooppidum pothu pathil tharum thaevanae
    ummaiyae aaraathippaen

    um neethiyin valakkaraththaal
    ennai thaangi iratchippavarae
    enakkaaka yaavaiyum seythu mutippaar
    ententum nampiduvaen

  • Immattum Kaathu Nadathinire இம்மட்டும் காத்து நடத்தினீரே

    இம்மட்டும் காத்து நடத்தினீரே
    இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    உமக்கே ஆராதனை – 3

    1.நான் நம்பும் தேவனும் நீர்
    எந்தன் அடைக்கலம் நீர் – 2
    எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும்
    தஞ்சமும் ஆனவர் நீர் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    2.எந்தன் ஜீவனும் நீர்
    ஜீவனின் பெலனுமே நீர் – 2
    ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
    நல்ல மேய்ப்பனும் நீர் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    3.எந்தன் ஆதரவும் நீர்
    எந்தன் கேடகமும் நீர் – 2
    கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
    யாருக்கும் பயப்படேன் நான் – 2

    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    இம்மட்டும் காத்து நடத்தினீரே
    இனிமேலும் காத்து நடத்துவீரே – 2
    ஜீவனுள்ள தேவனே
    ஜீவனுக்குள் வாழ்பவரே
    உமக்கே ஆராதனை – 2

    உமக்கே ஆராதனை – 3


    Immattum Kaathu Nadathinire Lyrics in English

    immattum kaaththu nadaththineerae
    inimaelum kaaththu nadaththuveerae – 2
    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    umakkae aaraathanai – 3

    1.naan nampum thaevanum neer
    enthan ataikkalam neer – 2
    enthan kottaைyum thurukamum pelanum
    thanjamum aanavar neer – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    2.enthan jeevanum neer
    jeevanin pelanumae neer – 2
    aadukalukkaaka than jeevan eentha
    nalla maeyppanum neer – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    3.enthan aatharavum neer
    enthan kaedakamum neer – 2
    karththar en velichchamum iratchippumaaneer
    yaarukkum payappataen naan – 2

    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    immattum kaaththu nadaththineerae
    inimaelum kaaththu nadaththuveerae – 2
    jeevanulla thaevanae
    jeevanukkul vaalpavarae
    umakkae aaraathanai – 2

    umakkae aaraathanai – 3

  • Immanuel Immanuel Ennodiruntharae இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

    1.பெத்லகேமில் பிறந்த அவர்
    பாலகனாய் ஜெனித்த அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே
    உலகத்தின் ராஜா அவர்
    தூதர் போற்றும் தேவன் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    2.மகிமை நிறைந்த தேவன் அவர்
    மகத்துவத்தின் கர்த்தர் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே
    சமாதான பிரபு அவர்
    நன்மை தரும் தகப்பன் அவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    1. மனிதனாகப் பிறந்த அவர்
      பரலோகத்தை திறந்த அவர்
      இம்மானுவேல் என்னோடிருப்பாரே
      மாம்சமாக வந்த அவர்
      நமக்குள் வாழும் இயேசு அவர்
      இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

    இம்மானுவேல் இம்மானுவேல்
    இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4


    Immanuel Immanuel Ennodiruntharae Lyrics in English

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-4

    1.pethlakaemil pirantha avar
    paalakanaay jeniththa avar
    immaanuvael ennotiruppaarae
    ulakaththin raajaa avar
    thoothar pottum thaevan avar
    immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-2

    2.makimai niraintha thaevan avar
    makaththuvaththin karththar avar
    immaanuvael ennotiruppaarae
    samaathaana pirapu avar
    nanmai tharum thakappan avar
    immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-2

    1. manithanaakap pirantha avar
      paralokaththai thirantha avar
      immaanuvael ennotiruppaarae
      maamsamaaka vantha avar
      namakkul vaalum Yesu avar
      immaanuvael ennotiruppaarae-2

    immaanuvael immaanuvael
    immaanuvael ennotiruppaarae-4

  • Immanar Kummarul Eyum இம்மணர்க் கும்மருள் ஈயும்

    இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா
    ஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா

    செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
    தேவரீர் இவ்விரு பேரையும் காரும்

    ஆதமோ டேவையை அன்றமைத்தீரே
    அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே

    அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி
    ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர்

    உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
    ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்

    தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்
    தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன்

    இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்
    இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்


    Immanar Kummarul Eyum Lyrics in English

    immanark kummarul eeyum para vaasaa
    aesuk kiristhaiyaa o saruvaesaa

    semmaiyum nanmaiyum selvamum thaarum
    thaevareer ivviru paeraiyum kaarum

    aathamo taevaiyai antamaiththeerae
    avvithamaaka neer intum seyveerae

    anpan eesaakku repekkaat kirangi
    aapirakaamudan saaraalaik kaaththeer

    unthayai pettivar ongip perukavum
    oruvark koruvar nallanpil nilaikkavum

    thaalmai porumaikal sarkuna maenmaikal
    thanthuma thaaviyaik konndu kaaththaalumaen

    Yesukiristhuvai naesiththu vaalavum
    inpa visuvaasa veettar entakavum

  • Immadum katha இம்மட்டும் காத்த

    இம்மட்டும் காத்த எபினேசரே
    உம் பாதம் நம்பி நான் வந்தாலும்
    கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
    நீ என்னோடு இருந்தால்
    எல்லாம் மாறுமே

    நன்றி இயேசுவே -4
    நன்மை செய்தீரே
    நன்றி இயேசுவே

    ஆபத்து நேரத்தில் காத்திரைய்யா
    அடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யா
    எதிரிகள் வந்தாலும்
    எதிர்ப்புகள் வந்தாலும்
    எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா

    என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யா
    நான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயா
    தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
    அற்புதமாய் என்னை நடத்தினீரே

    Immattum katha ebinaesarae
    Um padham nambi nan vandhullaen
    Kashtam vandhalum nashtam vandhalum
    Neer Ennodu irundhal ellam marumae

    Nandri Yesuvae(X4)
    nanmai seidhirae
    Nandri Yesuvae

    Aabathu nerathil kathiraiya
    Adaikalamai kondu saerthiraiya
    Edhirigal vandhalum
    Edhirpugal vandhalum
    Enakkai neer yutham seidhiraiya

    En yekkam ellam neer arindiraiya
    nan ninaithadhai neer kodutheeraiya
    Thozhvigal ellam jeyamai mattri
    Arpudhamai ennai nadathineerae


    Immadum katha (Nandri Yesuvae) Lyrics in English

    immattum kaaththa epinaesarae
    um paatham nampi naan vanthaalum
    kashdam vanthaalum nashdam vanthaalum
    nee ennodu irunthaal
    ellaam maarumae

    nanti Yesuvae -4
    nanmai seytheerae
    nanti Yesuvae

    aapaththu naeraththil kaaththiraiyyaa
    ataikkalamaay konndu serththiraiyyaa
    ethirikal vanthaalum
    ethirppukal vanthaalum
    enakkaaka neer yuththam seytheer aiyaa

    en aekkamellaam neer arinthiraiyyaa
    naan ninaiththai neer koduththeer aiyaa
    tholvikal ellaam jeyamaay maatti
    arputhamaay ennai nadaththineerae

    Immattum katha ebinaesarae
    Um padham nambi nan vandhullaen
    Kashtam vandhalum nashtam vandhalum
    Neer Ennodu irundhal ellam marumae

    Nandri Yesuvae(X4)
    nanmai seidhirae
    Nandri Yesuvae

    Aabathu nerathil kathiraiya
    Adaikalamai kondu saerthiraiya
    Edhirigal vandhalum
    Edhirpugal vandhalum
    Enakkai neer yutham seidhiraiya

    En yekkam ellam neer arindiraiya
    nan ninaithadhai neer kodutheeraiya
    Thozhvigal ellam jeyamai mattri
    Arpudhamai ennai nadathineerae

  • Immaanuvaelin Iraththaththaal இம்மானுவேலின் இரத்தத்தால்

    1. இம்மானுவேலின் இரத்தத்தால்
      நிறைந்த ஊற்றுண்டே
      எப்பாவத் தீங்கும் அதினால்
      நிவிர்த்தியாகுமே
    2. மா பாவியான கள்ளனும்
      அவ்வூற்றில் மூழ்கினான்
      மன்னிப்பும் மோட்சானந்தமும்
      அடைந்து பூரித்தான்
    3. அவ்வாறே நானும் யேசுவால்
      விமோசனம் பெற்றேன்
      என் பாவம் நீங்கிப் போனதால்
      ஓயாமல் பாடுவேன்
    4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
      விஸ்வாசத்தால் கண்டேன்
      ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
      எங்கும் பிரஸ்தாபிப்பேன்
    5. பின் விண்ணில் வல்ல நாதரை
      நான் கண்டு பூரிப்பேன்
      அங்கென்னை மீட்ட நேசத்தைக்
      கொண்டாடிப் போற்றுவேன்

    Immaanuvaelin Iraththaththaal Lyrics in English

    1. immaanuvaelin iraththaththaal
      niraintha oottunntae
      eppaavath theengum athinaal
      nivirththiyaakumae
    2. maa paaviyaana kallanum
      avvoottil moolkinaan
      mannippum motchaாnanthamum
      atainthu pooriththaan
    3. avvaatae naanum yaesuvaal
      vimosanam petten
      en paavam neengip ponathaal
      oyaamal paaduvaen
    4. kaayaththil odum raththaththai
      visvaasaththaal kanntaen
      oppatta meetpar naesaththai
      engum pirasthaapippaen
    5. pin vinnnnil valla naatharai
      naan kanndu poorippaen
      angaெnnai meetta naesaththaik
      konndaatip pottuvaen
  • Immaanuvaelae Vaarum Vaarumae இம்மானுவேலே வாரும் வாருமே

    இம்மானுவேலர் வந்தார்

    1. இம்மானுவேலே வாரும் வாருமே
      மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
      மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
      உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

    மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
    இம்மானுவேலின் நாள் சமீபமே

    1. ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
      பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
      பாதாள ஆழம் நின்று இரட்சியும்
      வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்
    2. அருணோதயமே ஆ வாருமே
      வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
      மாந்தார ராவின் மேகம் நீக்கிடும்
      இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்
    3. தாவீதின் திறவுகோலே வாருமே
      விண் வாசலைத் திறந்து தாருமே
      ஒடுக்கமாம் நல்வழி காத்திடும்
      விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்
    4. மா வல்ல ஆண்டவா வந்தருளும்
      முற்காலம் சீனாய் மலைமீதிலும்
      எக்காளம் மின்னலோடு தேவரீர்
      பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்

    Immaanuvaelae Vaarum Vaarumae Lyrics in English

    immaanuvaelar vanthaar

    1. immaanuvaelae vaarum vaarumae
      mey isravaelaich sirai meelumae
      maa theyva mainthan thontum varaikkum
      un janam paaril aengith thavikkum

    makil! makil! seeyonin sapaiyae
    immaanuvaelin naal sameepamae

    1. eesaayin vaerth thulirae vaarumae
      pisaasin valla koshdam neekkumae
      paathaala aalam nintu iratchiyum
      vem saavinmael paer vetti aliyum
    2. arunnothayamae aa vaarumae
      vanthengal nenjai aattith thaettumae
      maanthaara raavin maekam neekkidum
      irunnda saavin nilal otdidum
    3. thaaveethin thiravukolae vaarumae
      vinn vaasalaith thiranthu thaarumae
      odukkamaam nalvali kaaththidum
      visaalamaam thurp paathai thoorththidum
    4. maa valla aanndavaa vantharulum
      murkaalam seenaay malaimeethilum
      ekkaalam minnalodu thaevareer
      piramaanam isravaelukkaliththeer
  • Imayamum kumariyum இமயமும் குமரியும்

    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    நெஞ்சார் அன்பின் தியாக சேவையே
    நெறியாம் சிலுவையின் வீரம்
    தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
    சாந்தியின் வாழ்வருள் நாதா!
    சமாதானம் யேசுவின் வீடே
    சகலர்க்கும் சாந்தி எம் நாடே,
    சாந்தி இதற்கிலை ஈடே,
    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
    ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!

    உழவெழத் தொழிலெழ உற்ப்பத்தி மிகவே
    ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
    பொய்யா மொழி மாகாணத்தலைவர்
    புருஷோத்தம மந்திரிகள்
    நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
    நட்புடன் கருணை இலங்கப்
    பணிவிடை நேர்மை அருளே,
    பரனர செனப்பகர் தெருளே,
    பாரதம் போற்ற மெய்ப் பொருளே!
    இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
    எந்தாய் நாட்டினைக் காத்தாள்.
    ஜெயமே, ஜெயமே, ஜெயமே!
    ஜெய, ஜெய, ஜெய, ஜெயமே!


    Imayamum kumariyum Lyrics in English

    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    nenjaar anpin thiyaaka sevaiyae
    neriyaam siluvaiyin veeram
    thangidath thaesaththalaivarmael aasi
    saanthiyin vaalvarul naathaa!
    samaathaanam yaesuvin veetae
    sakalarkkum saanthi em naatae,
    saanthi itharkilai eetae,
    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    jeyamae, jeyamae, jeyamae!
    jeya, jeya, jeya, jeyamae!

    ulavelath tholilela urppaththi mikavae
    ongiya varththakam thaangap
    poyyaa moli maakaanaththalaivar
    purushoththama manthirikal
    narkiris thiraivanin siluvaich sevai
    natpudan karunnai ilangap
    pannivitai naermai arulae,
    paranara senappakar therulae,
    paaratham potta meyp porulae!
    imayamum kumariyum ellaikkadalutai
    enthaay naattinaik kaaththaal.
    jeyamae, jeyamae, jeyamae!
    jeya, jeya, jeya, jeyamae!

  • Imaya Muthal Kumari Varai இமய முதல் குமரி வரை

    1. இமய முதல் குமரி வரையுள்ள
      இதயங்கள் விடுதலைக் காணவே
      இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
      இளைஞரே எழுந்து செல்வோம்
      செல்லுவோம் சேனை வீரராய்
      வெல்லுவோம் தேவ அருளால்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
    2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
      அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
      இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
      பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
      சுடராய் வாழந்திடுவோம்
      சபையை பெருக்கிடுவோம்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
    3. என் பெயரை சொல்லி அழைத்த
      உன்னத தேவன் நீரன்றோ
      உன்னோடே கூட வருவேன் என்றீர்
      ஆவியால் நிறைத்திடுவீர்
      வரங்கள் உவந்தளிப்பீர்
      கனியால் அலங்கரிப்பீர்
      ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

    Imaya Muthal Kumari Varai Lyrics in English
    imaya muthal kumari varai

    1. imaya muthal kumari varaiyulla
      ithayangal viduthalaik kaanavae
      iyaesennum theepam aettuvom
      ilainjarae elunthu selvom
      selluvom senai veeraraay
      velluvom thaeva arulaal
      osannaa! osannaa! osannaa! – 2
    2. aanndukalaay janangalellaam
      ariyaamai iruttinil vaalkiraar
      Yesuvin viduthalaik kooruvom
      paarengum pukunthu selluvom
      sudaraay vaalanthiduvom
      sapaiyai perukkiduvom
      osannaa! osannaa! osannaa! – 2
    3. en peyarai solli alaiththa
      unnatha thaevan neeranto
      unnotae kooda varuvaen enteer
      aaviyaal niraiththiduveer
      varangal uvanthalippeer
      kaniyaal alangarippeer
      osannaa! osannaa! osannaa! – 2
  • Im Mattum Kaivida Devan இம்மட்டும் கைவிடா தேவன்

    இம்மட்டும் கைவிடா தேவன்
    இனியும் கைவிட மாட்டார்
    தாயின் வயிற்றில் தாங்கினார்
    ஆயுள் முழுதும் தாங்குவார்
    தாங்குவார் தப்புவிப்பார்
    ஏந்துவார் என் தெய்வம்

    ஆயன் இயேசு ஆடு நான்
    ஆதலால் பயமில்லை
    சாத்தான் பறிக்க முடியாது
    சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

    இயேசு கிறிஸ்து வசனத்தால்
    எல்லா நாளும் சந்தோஷம்
    வியாதி வறுமை வேதனை
    எது தான் பிரிக்க முடியுமோ

    கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
    கலக்கம் எனக்கு இனியில்லை
    துதித்து துதித்து நாளெல்லாம்
    துரத்திடுவேன் சத்துருவை


    Im Mattum Kaivida Devan Lyrics in English

    immattum kaividaa thaevan
    iniyum kaivida maattar
    thaayin vayittil thaanginaar
    aayul muluthum thaanguvaar
    thaanguvaar thappuvippaar
    aenthuvaar en theyvam

    aayan Yesu aadu naan
    aathalaal payamillai
    saaththaan parikka mutiyaathu
    sapikkinten Yesu naamaththil

    Yesu kiristhu vasanaththaal
    ellaa naalum santhosham
    viyaathi varumai vaethanai
    ethu thaan pirikka mutiyumo

    karththar enakkaay yuththam seyvaar
    kalakkam enakku iniyillai
    thuthiththu thuthiththu naalellaam
    thuraththiduvaen saththuruvai