Category: Tamil Worship Songs Lyrics

  • Ezhupputhal En Thaesaththilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலே
    என் கண்கள் காண வேண்டும்
    தேவா கதறுகிறேன்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
      சாட்சியாக வாழணுமே
    2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
      முழங்கணுமே முழங்கணுமே
    3. கோடி மக்கள் சிலுவையை தேடி
      ஓடி வந்து சுகம் பெறணும்
    4. ஒரு மனமாய் சபைகளெல்லாம்
      ஒன்று கூடி ஜெபிக்கணுமே
    5. தேசமெல்லாம் மனம் திரும்பி
      நேசரையே நேசிக்கணும்
    6. ஆதி சபை அதிசயங்கள்
      அன்றாடம் நடக்கணுமே
    7. துதிசேனை எழும்பணுமே
      துரத்தணுமே எதிரிகளை
    8. மோசேக்கள் கரம் விரித்து
      ஜனங்களுக்காய் கதறணுமே
    9. ஸ்தோவான்கள் எழும்பணுமே
      தேவனுக்காய் நிற்கணுமே
    10. அதிசயங்கள் அற்புதங்கள்
      அனுதினமும் நடக்கணுமே
    11. உம் வழியை அறியணுமே
      உம் மீட்பை உணரணுமே
    12. இருளில் வாழும் மனிதரெல்லாம்
      பேரொளியை காணணுமே

    Ezhupputhal En Thaesaththilae Lyrics in English

    elupputhal en thaesaththilae
    en kannkal kaana vaenndum
    thaevaa katharukiraen
    thaesaththin mael manamirangum

    1. sapaikalellaam thooymaiyaaki
      saatchiyaaka vaalanumae
    2. theru theruvaay en Yesuvin naamam
      mulanganumae mulanganumae
    3. koti makkal siluvaiyai thaeti
      oti vanthu sukam peranum
    4. oru manamaay sapaikalellaam
      ontu kooti jepikkanumae
    5. thaesamellaam manam thirumpi
      naesaraiyae naesikkanum
    6. aathi sapai athisayangal
      antadam nadakkanumae
    7. thuthisenai elumpanumae
      thuraththanumae ethirikalai
    8. mosekkal karam viriththu
      janangalukkaay katharanumae
    9. sthovaankal elumpanumae
      thaevanukkaay nirkanumae
    10. athisayangal arputhangal
      anuthinamum nadakkanumae
    11. um valiyai ariyanumae
      um meetpai unaranumae
    12. irulil vaalum manitharellaam
      paeroliyai kaananumae
  • Ezhunthu Sel Veeranae எழுந்து செல் வீரனே

    எழுந்து செல் வீரனே இயேசு இராஜன் உன்னை அழைக்கிறார்
    துணிந்து நில் சாட்சியாய்
    இயேசு இராஜன் நமக்காய் மரித்து உயிர்த் தெழுந்தாரே

    1. அன்பு தூய்மை தாழ்மை விசுவாசம் கொண்டிரு
      வளரும் விசுவாசிகளுக்கு மாதிரி காண்பி
      பவுலைப் போல் சாட்சியாய்
      பரமனுக்காய்ப் பாடு சகித்து மகிமை அடைந்திடு
    2. பாவ மீட்பை அறிந்திடாத பாரதம் உண்டு
      இயேசு நாமம் அறிவித்திட யார் இங்கு உண்டு?
      ஸ்தேவான் போல் சாட்சியாய்
      இரத்தம் சிந்த முன் வருவோர் வேண்டுமே இன்று
    3. உலகின் முடிவு நாள் வரைக்கும் உன்னிடம் இருப்பேன்
      சகல அதிகாரங்களும் என்னிடம் உண்டே
      என்றவர் அழைக்கிறார்
      புறப்பட்டுப் போய் சீஷராக்க ஆயத்தம் தானா?

    Ezhunthu Sel Veeranae Lyrics in English

    elunthu sel veeranae Yesu iraajan unnai alaikkiraar
    thunninthu nil saatchiyaay
    Yesu iraajan namakkaay mariththu uyirth thelunthaarae

    1. anpu thooymai thaalmai visuvaasam konntiru
      valarum visuvaasikalukku maathiri kaannpi
      pavulaip pol saatchiyaay
      paramanukkaayp paadu sakiththu makimai atainthidu
    2. paava meetpai arinthidaatha paaratham unndu
      Yesu naamam ariviththida yaar ingu unndu?
      sthaevaan pol saatchiyaay
      iraththam sintha mun varuvor vaenndumae intu
    3. ulakin mutivu naal varaikkum unnidam iruppaen
      sakala athikaarangalum ennidam unntae
      entavar alaikkiraar
      purappattup poy seesharaakka aayaththam thaanaa?
  • Ezhunthu Oli Veesu எழுந்து ஒளி வீசு

    எழுந்து ஒளி வீசு – 2
    இயேசு வருகின்றார்
    உன்னில் வருகின்றார்

    1. கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
      காரிருள் நீங்கிப் போனதே
    2. துன்பம் எல்லாம் மறைந்து போனதே
      துயரமெல்லாம் நீங்கிப் போனதே
    3. ஆவியான தேவன் தாமே
      அனுதினம் நடத்துவாரே
    4. கண்ணீரெல்லாம் துடைப்பாரே
      கரம் பிடித்து நடத்துவாரே

    Ezhunthu Oli Veesu Lyrics in English

    elunthu oli veesu – 2
    Yesu varukintar
    unnil varukintar

    1. karththar makimai unnil vanthathae
      kaarirul neengip ponathae
    2. thunpam ellaam marainthu ponathae
      thuyaramellaam neengip ponathae
    3. aaviyaana thaevan thaamae
      anuthinam nadaththuvaarae
    4. kannnneerellaam thutaippaarae
      karam pitiththu nadaththuvaarae
  • Ezhunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமே
    ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

    1.விழுந்தவரைக் கறையேற்றப்
    பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை
    மாற்ற விண்ணுக்கெழுந்து
    நாம் அவரையே போற்ற

    1. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
      நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
      பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்

    3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
    சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
    இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

    4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
    ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
    பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்

    5.ஏதுந் வினை செய்யாத்
    தூயன்- எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது

    காத்திடும் நல்லாயன்


    Ezhunthaar Iraivan Lyrics in English

    elunthaar iraivan – jeyamae
    jeyamenavae elunthaar iraivan

    1.vilunthavaraik karaiyaettap
    paavath thamilntha manukkulaththai
    maatta vinnnukkelunthu
    naam avaraiyae potta

    1. seththavar meenndumae pilaikka – uyar
      niththiya jeevanai alikkath – thaeva
      pakthar yaavarum kalikka — elunthaar

    3.karuthiya kaariyam vaaykkath – thaeva
    suruthi molikalellaam kaakka – nam
    iru thiraththaaraiyum serkka — elunthaar

    4.saavin payangaraththai olikkak – ketta
    aaviyin vallamaiyai alikka – ip
    poovinmeethu sapai selikka — elunthaar

    5.aethun vinai seyyaath
    thooyan- eppothumae nanmaipuri naeyan – thappaathu
    kaaththidum nallaayan

  • Ezhunthituveer Neer Vaaliparae எழுந்திடுவீர் நீர் வாலிபரே

    தூசியைவிட்டு எழும்புவோம்

    எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்
    இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
    இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
    நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்

    எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
    இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
    அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
    தூசியை உதறி எழுந்திடுவோம்

    1. விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்ல
      விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
      மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
      கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
    2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்ல
      நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
      தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
      தினம் நிறைவேற கண்டதில்லையோ
    3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே – நல்ல
      தைலாபிஷேகம் செய்ய வருவீரே
      புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
      நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
    4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் – நல்ல
      இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
      என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
      இன்றே யாவரும் எழுந்திடுவோம்

    Ezhunthituveer Neer Vaaliparae Lyrics in English

    thoosiyaivittu elumpuvom

    elunthiduveer neer vaaliparae – naamum
    Yesuvin naamaththai uyarththiduvom
    innum konjam naeram Yesu varum naeram
    niththirai seyyaamal ulaiththiduvom

    elunthiduvom naam elunthiduvom
    Yesuvin veerarae elunthiduvom
    anuthinam alinthidum paaratham kaaththida
    thoosiyai uthari elunthiduvom

    1. viliththirungal neer kanniyarae – nalla
      vilakkukal eriya ennnney oottuveer
      manavaalan varukaiyin saththam kaetpathaalae
      kanniyarkal naamum elunthiduvom
    2. niththiraikal vaenndaam muthiyorae – nalla
      naeram vaelai thannai nithaanippeerae
      theerkkar murpithaakkal seppiya uraikal
      thinam niraivaera kanndathillaiyo
    3. sanjalangal vaenndaam thaaymaarae – nalla
      thailaapishaekam seyya varuveerae
      puthaiyalkal ponta puththiraraam paranni
      naesar paathaththil utaiththiduveer
    4. inthu thaesam vella muyantiduvom – nalla
      Yesu munnae selvaar payam iniyaen
      enna thatai varinum Yesu naamam jeyikkum
      inte yaavarum elunthiduvom
  • Ezhumbi prakasi oli எழும்பி பிரகாசி ஒளி

    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
    மகிமை உன்மேல் உதித்தது
    எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின்
    மகிமை உன்மேல் உதித்தது
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

    உலகத்தின் வெளிச்சம் நான்தானே
    உலகத்திற்கே வெளிச்சமாமே
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

    மலையின் மேல் பட்டணம் மறையாதே
    மகிமையின் அளவும் குறையாதே
    பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி


    Ezhumbi prakasi oli Lyrics in English

    elumpi pirakaasi oli vanthathu karththarin
    makimai unmael uthiththathu
    elumpi pirakaasi oli vanthathu karththarin
    makimai unmael uthiththathu
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

    ulakaththin velichcham naanthaanae
    ulakaththirkae velichchamaamae
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

    malaiyin mael pattanam maraiyaathae
    makimaiyin alavum kuraiyaathae
    pirakaasi pirakaasi pirakaasi pirakaasi

  • Ezhai Manu Uruvai Edutha ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்த
    இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
    ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே

    1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
      கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
      கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
      சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
      கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
    2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
      அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
      ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
      அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
      அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு
    3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
      இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
      இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
      இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
      அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
    4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
      அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
      உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
      நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
      சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு
    5. மாயை உலகம் அதையும் நம்பாதே
      மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
      நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
      நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
      நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு

    Ezhai Manu Uruvai Edutha Lyrics in English

    aelai manu uruvai eduththa
    Yesu raajan unnanntai nirkiraar
    aettuk kol avaraith thallaathae

    1. kaikalil kaalkalil aannikal kadaava
      kadum mul muti pon sirasil sootida
      kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar
      sonthamaana iraththam sinthinaar unakkaay
      kanivudanae unnai alaikkiraarae – aelai manu
    2. avar thalaiyum saaykkavo sthalamumillai
      antu thaakaththaith theerkkavo paanamumillai
      aaruthal sollavo angae oruvarillai
      arumai ratchakar thongukiraar thaniyae
      anthap paadukal unnai meetkavae – aelai manu
    3. innamum thaamatham unakkaen makanae
      inpa Yesuvanntai elunthu vaaraayo
      intha ulakam tharakkoodaa samaathaanaththai
      intu unakku tharak kaaththu nirkiraarae
      annnal Yesu unnai alaikkiraarae – aelai manu
    4. avar maranaththaal saaththaanin thalai nasunga
      avar raththaththaal paavak karaikal neenga
      unthan viyaathiyin vaethanaiyum oliya
      neeyum saapaththinintu viduthalai ataiya
      siluvaiyil jeyiththaar yaavaiyum – aelai manu
    5. maayai ulakam athaiyum nampaathae
      manumakkal manamum maarip pokumae
      niththiya thaevanai naesiththaal ippothae
      nichchayam santhosham pettu nee makila
      nampikkaiyotae vanthiduvaay – aelai manu
  • Ezhai Enthan Meethu Anbhu ஏழை எந்தன் மீது அன்பு

    ஏழை எந்தன் மீது அன்பு தேவா
    ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
    பாவியான எந்தன் மீது நாதா
    ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!

    1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
      பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
      அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
      பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!
    2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
      தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
      பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
      நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
      உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!
    3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
      அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
      அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
      துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா

    Ezhai Enthan Meethu Anbhu Lyrics in English

    aelai enthan meethu anpu thaevaa
    aen iththanai anpu sollum naathaa
    paaviyaana enthan meethu naathaa
    aen iththanai paasam sollum thaevaa!!!

    1. vayiraam thaay vayittil karuvaay uruvaaku munnae
      paer solli enai alaiththu therinthu konnda vitham ninaiththu
      alainthu alainthu ulakil thirintha ennai therinthu konndathai ninaiththu
      paatida naavu pothaathu thaevaa um paasaththukku innai aethu naathaa!!
    2. ulaiyaana paava settil ulantu amilnthu kidantha ennai
      thookkiyae manithanaaka niruththiya um anpai ninaiththu
      panninthu kuninthu unarnthu ulla nantiyodu ummai ninaiththu
      nantikal koti solvaen thaevaa
      um paatham entum saranam anpu naathaa!!
    3. eththanaiyo nanmaikalai ummaal naan pettirunthum
      aththanaiyum maranthu naan eththanamaay vaalnthathaeno
      arpanum sorpanum kuppaiyum ennai tharparan therinthu konndathai ninaiththu
      thuthiththida naavu pothaa thaevaa um makimaikku alavu illai naathaa
  • Evikkiraar Iyaesu Jeevikkiraar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    1. ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
      என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
      துன்பத்தில் என் நல் துணை அவரே
      என்றென்றும் ஜீவிக்கிறார்
    2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
      பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
      அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
      அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்
    3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
      என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
      நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
      உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

    Evikkiraar Iyaesu Jeevikkiraar Lyrics in English

    1. jeevikkiraar Yesu jeevikkiraar
      ennullaththil avar jeevikkiraar
      thunpaththil en nal thunnai avarae
      ententum jeevikkiraar
    2. sengadal avar solla iranndaay nintathu
      perungaோttaை ontu tharaimattamaanathu
      avar sollak kurudanin kann thiranthathu
      avar thodak kushdaroki suththamaayinaan
    3. ummai entum vidaamal naan thodaravae
      ennai entum vidaamal neer pitikkavae
      naan marikkum naeraththil paralokaththil
      um veettaைk kaattum nalla maeypparae
  • Evare perumaan இவரே பெருமான்

    இவரே பெருமான் மற்றப்
    பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

    கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
    பவவினை யாதுமே தெரியார் இப்
    புவனமீது நமக்குரியார்

    குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
    கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
    இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

    பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
    வலமையில் மிக்க விபகாரி எக்
    குலத்துக்கும் நல்ல உபகாரி

    அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
    மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
    இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்

    அலகைதனை ஜெயித்த வீரன் பவ
    உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
    ணுலகு வாழ் தேவ குமாரன்

    பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள்
    துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
    தன்னை யளித்த ஓர் தியாகன்


    Evare perumaan Lyrics in English

    ivarae perumaan mattap
    paer alavae poomaan – ivarae perumaan

    kavalaik kidangaொduth thariyaar vaeru
    pavavinai yaathumae theriyaar ip
    puvanameethu namakkuriyaar

    kurudarkaluk kuthavum viliyaam pavak
    karuma irulai neekkum oliyaam theyvam
    irukkun thalanjaெl vaasal valiyaam

    palapinni theerkkum parikaari sollum
    valamaiyil mikka vipakaari ek
    kulaththukkum nalla upakaari

    aranj seyvathinil oru siththan kodu
    maramvidu pavarkkarul muththan ingae
    iranthork kuyireeyum karththan

    alakaithanai jeyiththa veeran pava
    ulakai ratchiththa elirpaeran vinn
    nulaku vaal thaeva kumaaran

    ponnulakan thanilvaal yokan arul
    thunna ulakil nanmaith thaekan nampaal
    thannai yaliththa or thiyaakan