Category: Tamil Worship Songs Lyrics

  • Enthan jeba velai எந்தன் ஜெபவேளை

    எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
    தேவா பதில் தாருமே
    எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
    உம்மை நான் நாடி வந்தேன்

    சோராது ஜெபித்திட
    ஜெப ஆவி வரம் தாருமே
    தடையாவும் அகற்றிடுமே
    தயை கேட்டு உம் பாதம் வந்தேன்

    உம்மோடு எந்நாளும்
    உறவாட அருள் செய்யுமே
    கர்த்தாவே உம் வார்த்தையை
    கேட்டிட காத்திருப்பேன்

    நம்பிக்கை இல்லாமல்
    அழிகின்ற மாந்தர்தனை
    மீட்டிடும் என் இயேசுவே
    போராடி ஜெபிக்கின்றேன் நாதா

    நாளெல்லாம் பாதத்தில்
    கர்த்தாவே காத்திருப்பேன்
    கண்ணீரின் ஜெபம் கேளுமே
    கருணையின் பிரவாகம் நீரே


    Enthan jeba velai Lyrics in English

    enthan jepavaelai umaiththaeti vanthaen
    thaevaa pathil thaarumae
    enthan kottaை enthan thanjam neerae
    ummai naan naati vanthaen

    soraathu jepiththida
    jepa aavi varam thaarumae
    thataiyaavum akattidumae
    thayai kaettu um paatham vanthaen

    ummodu ennaalum
    uravaada arul seyyumae
    karththaavae um vaarththaiyai
    kaettida kaaththiruppaen

    nampikkai illaamal
    alikinta maantharthanai
    meetdidum en Yesuvae
    poraati jepikkinten naathaa

    naalellaam paathaththil
    karththaavae kaaththiruppaen
    kannnneerin jepam kaelumae
    karunnaiyin piravaakam neerae

  • Enthan Iyaesu Vallavar எந்தன் இயேசு வல்லவர்

    எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்
    ஆ பேரின்பம் அவர் என் தஞ்சமே
    அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்

    1. அற்புதமாம் அவர் அன்பு
      அண்டினோர் காக்கும் தூய அன்பு
      இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
      மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
    2. சர்வ வல்ல தேவனிவர்
      சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
      எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
      நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
    3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
      சீரான பாதை நடத்திடுவார்
      எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
      எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்

    Enthan Iyaesu Vallavar Lyrics in English

    Yesu vallavar

    enthan Yesu vallavar entum nadaththuvaar
    aa paerinpam avar en thanjamae
    anuthinam anparudan innainthu selluvaen

    1. arputhamaam avar anpu
      anntinor kaakkum thooya anpu
      ippoovinil ivaraippol anpar evarunndu
      maaraathavar enthan Yesu entum pattiduvaen
    2. sarva valla thaevanivar
      saanthamum thaalmai ullavaraam
      ennaalumae enthanaiyae thaangidum vallavaraam
      nampiduvaen ententumaay enthan Yesuvai
    3. karththar enthan maeypparaavaar
      seeraana paathai nadaththiduvaar
      enthan vali semmaiyaakki aettu niruththuvaar
      enthan naesar kaaththiduvaar entum pin selluvaen
  • Enthan Iyaesu Kaivitamaattaar எந்தன் இயேசு கைவிடமாட்டார்

    எந்தன் இயேசு கைவிடமாட்டார்
    என்னை மறந்திட மாட்டார்
    அல்லேலூயா – 8

    1. நிந்தனை போராட்டத்தில்
      நேசர் எனைத் தாங்கினார்
      சோதனை வந்த போதெல்லாம்
      தப்பிச் செல்ல வழி காட்டினார்
    2. கடந்ததை மறக்கின்றேன்
      கண் முன்னால் என் இயேசுதான்
      காத்திருந்து பெலன் அடைந்து
      கழுகைப் போல் எழும்பிடுவேன்
    3. சீக்கிரம் வரப்போகின்ற
      நேசருக்காய் காத்திருப்பேன்
      எரியும் விளக்கேந்தியே
      இயேசுவின் பின் செல்லுவேன்
    4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
      அச்சம் எனக்கில்லையே
      அரணும் கோட்டையும் அவர்
      அத்தனையும் தகர்த்திடுவாரே

    Enthan Iyaesu Kaivitamaattaar Lyrics in English

    enthan Yesu kaividamaattar
    ennai maranthida maattar
    allaelooyaa – 8

    1. ninthanai poraattaththil
      naesar enaith thaanginaar
      sothanai vantha pothellaam
      thappich sella vali kaattinaar
    2. kadanthathai marakkinten
      kann munnaal en Yesuthaan
      kaaththirunthu pelan atainthu
      kalukaip pol elumpiduvaen
    3. seekkiram varappokinta
      naesarukkaay kaaththiruppaen
      eriyum vilakkaenthiyae
      Yesuvin pin selluvaen
    4. aayiram thunpam vanthaalum
      achcham enakkillaiyae
      aranum kottaைyum avar
      aththanaiyum thakarththiduvaarae
  • Enthan Iyaesaiyaa எந்தன் இயேசையா

    எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
    உம் அன்பென்றும் பெரிதையா
    என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
    எந்நாளும் போற்றிடுவேன்

    1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
      பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
      என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
      உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்
    2. உலகம் என்னை வெறுத்த போது
      கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
      உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
      என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

    Enthan Iyaesaiyaa Lyrics in English

    enthan iyaesaiyaa enthan iyaesaiyaa
    um anpentum perithaiyaa
    en vaal naalellaam um anpai naan ninaiththu
    ennaalum pottiduvaen

    1. kurusinil thongi kuruthiyum sinthi
      paavangal pokki annaiththeeraiyaa (2)
      en ullam pongum ummaiyae thuthikkum
      uyirin jeevan neerthaanaiyaa (2) — enthan
    2. ulakam ennai veruththa pothu
      karangal neetti annaiththeeraiyaa (2)
      um anpu entum aaruthal alikkum
      en vaalvae entum neerthaanaiyaa (2) — enthan
  • Enthan Ithaya Ganam Endrum எந்தன் இதய கானம் என்றும்

    எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்

    இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் – 2

    காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்

    சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்

    மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்

    மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்

    நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்

    நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்

    எல்லாம் உன் புகழ்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

    தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்

    தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்

    கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்

    பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்

    நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்

    நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள் எல்லாம்


    Enthan Ithaya Ganam Endrum Lyrics in English

    enthan ithaya kaanam entum unnaip paadum

    Yesuvae en thalaivanentu entum eduththuk koorum – 2

    kaalaiyil pannpaadum paravaik koottangal

    solaiyil nintadum maraththin thottangal

    maalaiyil emmeethu veesum thentalkal

    marutham makila serum malaiyin thulikal

    neerinil neenthidum meenin ottangal

    nilaththinil vaalnthidum vilangin koottangal

    ellaam un pukalpaaduthae un sollaalae uyir vaaluthae

    theyvamae entakum malalai molikalum

    thaeyaa anpaakum theyva maantharum

    koyilil nintongum pukalchchip paakkalum

    poomiyil narsevai aattum thonndarum

    neethiyum naermaiyum kaetkum kookkural

    niyaayamum tharmamum thaedum aekkangal ellaam

  • Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

    எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
    நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
    உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
    உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

    1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
      வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
      என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
      என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்
    2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
      நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
      என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
      எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்
    3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
      எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
      எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
      என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்
    4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
      கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
      உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
      உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்

    Enthan Devanal Enthan Devanal Lyrics in English

    enthan thaevanaal enthan thaevanaal
    nichchayam naan aaseervaatham pettukkolluvaen
    unthan vasanam kaikkolluvaen naan
    unthan valikalil nadanthiduvaen

    1. thaesaththil naan aaseervaathamaayiruppaen
      vaelaiyilum aaseervaathamaayiruppaen
      en veettil aakaarak kuraivillaiyae
      en thaevaikal ontum thataiyillaiyae – enthan
    2. enakkethiraay varum aayuthamellaam
      nirmoolamaay poyvidum enthan thaevanaal
      en pelan aarokkiyam thaevathaanamae
      enthan sareeram aaseervathikkappadum – enthan
    3. vaalkaith thunnaiyum en pillaikalum
      enthan sampaththum aaseervathikkappadum
      enthan nanmaikkaay seliththongidach seyvaar
      ennaiyavar parisuththa janam aakkuvaar – enthan
    4. ini entum kadan vaanga vidamaattar
      koduththathai seliththongach seythiduvaar
      uyarvataivaen en vaalkkaiyilae
      unnathangalil ennai uyarththiduvaar – enthan
  • Enthan Athma Nesare எந்தன் ஆத்ம நேசரே

    எந்தன் ஆத்ம நேசரே
    வெள்ளம் போன்ற துன்பத்தில்
    தாசன் திக்கில்லாமலே
    தடுமாறிப் போகையில்
    தஞ்சம் தந்து இயேசுவே
    திவ்ய மார்பில் காருமேன்
    அப்பால் கரையேற்றியே
    மோட்ச வீட்டில் சேருமேன்

    1. வல்ல தேவரீர் அல்லால்
      வேறே தஞ்சம் இன்றியே
      கைவிடாமல் நேசத்தால்
      ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
      நீரே எந்தன் நம்பிக்கை
      நீர் சகாயம் செய்குவீர்
      ஏதுமற்ற ஏழையைச்
      செட்டையாலே மூடுவீர்
    2. குறை யாவும் நீக்கிட
      நாதா, நீர் சம்பூரணர்
      திக்கற்றோரைத் தாங்கிட
      நீரே மா தயாபரர்
      நான் அசுத்தப் பாவிதான்
      நீரே சுத்தர் சுத்தரே
      நான் அநீதி கேடுள்ளோன்
      நீர் நிறைந்த நித்யரே
    3. பாவம் யாவும் மன்னிக்க
      ஆரருள் அமைந்த நீர்
      என்னைச் சுத்திகரிக்க
      அருள் பாயச்செய்குவீர்
      ஜீவ ஊற்றாம் யேசுவே
      எந்தன் தாகம் தீருமேன்
      ஸ்வாமி என்றும் என்னிலே
      வாலிபர் கீதங்கள் வாலிபர் கீதங்கள்

    நீர் சுரந்து ஊறுமேன்


    Enthan Athma Nesare Lyrics in English

    enthan aathma naesarae
    vellam ponta thunpaththil
    thaasan thikkillaamalae
    thadumaarip pokaiyil
    thanjam thanthu Yesuvae
    thivya maarpil kaarumaen
    appaal karaiyaettiyae
    motcha veettil serumaen

    1. valla thaevareer allaal
      vaetae thanjam intiyae
      kaividaamal naesaththaal
      aattith thaettith thaangumaen
      neerae enthan nampikkai
      neer sakaayam seykuveer
      aethumatta aelaiyaich
      settaைyaalae mooduveer
    2. kurai yaavum neekkida
      naathaa, neer sampooranar
      thikkattaோraith thaangida
      neerae maa thayaaparar
      naan asuththap paavithaan
      neerae suththar suththarae
      naan aneethi kaedullon
      neer niraintha nithyarae
    3. paavam yaavum mannikka
      aararul amaintha neer
      ennaich suththikarikka
      arul paayachcheykuveer
      jeeva oottaாm yaesuvae
      enthan thaakam theerumaen
      svaami entum ennilae
      vaalipar geethangal vaalipar geethangal
      neer suranthu oorumaen
  • Enthan anbulla aandavar எந்தன் அன்புள்ள ஆண்டவர்

    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
    நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
    உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
    அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்

    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
    மற்றும் எல்லாம் எனக்கு நீரே
    வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
    நீரோ வாக்கு மாறாதவரே

    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை
    யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
    உயிருள்ள தெய்வமே நீர்

    எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
    தந்த வாலிப நாட்களிலே-இந்த
    மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
    பரிசுத்த ஜீவியமே

    பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
    பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
    பரலோகத்தின் செல்வமே என் அரும்
    இயேசுவே போதும் எனக்கு நீரே


    Enthan anbulla aandavar Lyrics in English

    enthan anpulla aanndavar Yesuvae
    naan unthan naamaththaip pottiduvaen
    ummaip pol oru thaevanaip poomiyil
    arinthitaen uyir thantha theyvamae neer

    aa! aanantham aananthamae
    allum pakalilum paadiduvaen
    Yesuvae enthan aaruyirae

    petta thaayum en thanthaiyumaanavarae
    mattum ellaam enakku neerae
    vaanam poomiyum yaavumae maaritinum
    neero vaakku maaraathavarae

    uyar ataikkalaththil ennai vaiththavarae
    unthan naamaththai nampiduvaen-ummai
    yallaathip poomiyil yaaraiyum nampitaen
    uyirulla theyvamae neer

    enthan sirushtikarae ummai ninaiththidavae
    thantha vaalipa naatkalilae-intha
    maaya ulakaththai veruththida aliththeerae
    parisuththa jeeviyamae

    pon velliyumo perumpaer pukalo
    pana aasthiyum veenn allavo
    paralokaththin selvamae en arum
    Yesuvae pothum enakku neerae

  • Enthan Aathumaave எந்தன் ஆத்துமாவே

    எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
    என்றென்றும் ஸ்தோத்தரி
    முழு உள்ளத்தோடு
    கர்த்தரையே
    உயர்த்தி பாடிடு

    புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
    ஆராதிப்பேன் நான் உம்மையே
    என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
    நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

    நித்திய தேவனே என் அருள் நாதா
    உம் நாமத்தை நான் போற்றுவேன்
    உந்தன் அன்பினை போற்றியே பாடி
    வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

    மரண வாசலில் நின்றிடும் நேரம்
    பரலோக வாசலில் சேர்ந்து நான்
    உமது துதியை பாடுவேன் என்றும்
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்


    Enthan Aathumaave Lyrics in English

    enthan aaththumaavae karththaraiyae
    ententum sthoththari
    mulu ullaththodu
    karththaraiyae
    uyarththi paadidu

    puthiya naalithu sthoththiram seyvaen
    aaraathippaen naan ummaiyae
    enna nadanthaalum ,ethu naerittalum
    naalellaam paati ummai uyarththiduvaen

    niththiya thaevanae en arul naathaa
    um naamaththai naan pottuvaen
    unthan anpinai pottiyae paati
    vaalnaalellaam naan uyarththiduvaen

    marana vaasalil nintidum naeram
    paraloka vaasalil sernthu naan
    umathu thuthiyai paaduvaen entum
    aayiram aayiram aanndukalaay

  • Enthan Aathma Naesarae என்தன் ஆத்ம நேசரே

    1. என்தன் ஆத்ம நேசரே,
      வெள்ளம் போன்ற துன்பத்தில்,
      தாசன் திக்கில்லாமலே
      தடுமாறிப் போகையில்,
      தஞ்சம் தந்து, இயேசுவே,
      திவ்விய மாஅர்பில் காருமேன்;
      அப்பால் கரையேற்றிய
      மோட்ச வீட்டில் சேருமேன்.
    2. வல்ல தேவரீர் அல்லால்
      வேறே தஞ்சம் அறியேன்;
      கைவிடாமல் நேசத்தால்
      ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
      நீரே என்தன் நம்பிக்கை,
      நீர் சகாயம் செய்குவீர்;
      ஏதுமற்ற ஏழையை
      செட்டையாலே மூடுவீர்.
    3. குறை யாவும் நீக்கிட,
      நாதா, நீர் சம்பூரணர்;
      திக்கற்றோரைத் தாங்கிட
      நீரே மா தயாபரர்;
      நான் அசுத்த பாவிதான்,
      நீரோ தூயர் தூயரே;
      நான் அநீதி கேடுள்ளான்,
      நீர் நிறைந்த நித்தியரே.
    4. பாவம் யாவும் மன்னிக்க
      ஆரருள் அமைந்த நீர்
      என்னைச் சுத்திகரிக்க
      அருள் பாயச் செய்குவீர்;
      ஜீவ ஊற்றாம் இயேசுவே,
      என்தன் தாகம் தீருமேன்,
      ஸ்வாமீ, என்றும் என்னிலே
      நீர் சுரந்து ஊற்றுமேன்

    Enthan Aathma Naesarae Lyrics in English

    1. enthan aathma naesarae,
      vellam ponta thunpaththil,
      thaasan thikkillaamalae
      thadumaarip pokaiyil,
      thanjam thanthu, Yesuvae,
      thivviya maaarpil kaarumaen;
      appaal karaiyaettiya
      motcha veettil serumaen.
    2. valla thaevareer allaal
      vaetae thanjam ariyaen;
      kaividaamal naesaththaal
      aattith thaettith thaangumaen;
      neerae enthan nampikkai,
      neer sakaayam seykuveer;
      aethumatta aelaiyai
      settaைyaalae mooduveer.
    3. kurai yaavum neekkida,
      naathaa, neer sampooranar;
      thikkattaோraith thaangida
      neerae maa thayaaparar;
      naan asuththa paavithaan,
      neero thooyar thooyarae;
      naan aneethi kaedullaan,
      neer niraintha niththiyarae.
    4. paavam yaavum mannikka
      aararul amaintha neer
      ennaich suththikarikka
      arul paayach seykuveer;
      jeeva oottaாm Yesuvae,
      enthan thaakam theerumaen,
      svaamee, entum ennilae
      neer suranthu oottumaen