Category: Tamil Worship Songs Lyrics

  • Entha Nilayil Nee Irunthalum எந்த நிலையில் நீ இருந்தாலும்

    எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
    வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

    1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

    2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
    கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

    3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
    ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

    4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
    உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

    5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த


    Entha Nilayil Nee Irunthalum Lyrics in English

    entha nilaiyil nee irunthaalum – unnai
    verukkaathavar Yesu oruvarae – en thaevan naduvarae

    1.Nnoyaaliyaay nee irunthaal palar veruppaarkal
    un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha

    2.kadanaaliyaay nee irunthaal palar veruppaarkal – un
    kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha

    3.aelaiyaaka nee irunthaal palar veruppaarkal – un
    aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha

    4.pattap patippu illaavittal palar veruppaarkal
    unnai patta maram entu solli parikasippaarkal – entha

    5.anaathaiyaay nee irunthaal palar veruppaarkal
    anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha

  • Entha Neramum Eppothume எந்த நேரமும் எப்போதுமே

    எந்த நேரமும் எப்போதுமே
    இயேசு எனக்கு ஒத்தாசை
    இயேசு ராஜனை ஸ்தோத்திரிப்பேன்
    இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்

    இக்கட்டில் மனிதர் உதவி
    இல்லாமலே அற்றுப் போனாலும்
    எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
    இயேசு நாமத்தில் கிடைத்திடுமே

    சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
    சென்ற காலம் பெலன் தந்தாரே – எந்தன்
    வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
    என்னில் முற்றிலும் நிறைவேறுமே

    உம் சித்தம் செய்ய உம்மைப்
    போல் மாற வல்லமை தந்திடுமே
    இம்மட்டும் காத்த இம்மானுவேலே
    இனியும் நடத்திடுமே


    Entha Neramum Eppothume Lyrics in English

    entha naeramum eppothumae
    Yesu enakku oththaasai
    Yesu raajanai sthoththirippaen
    intha aelaiyin jepam kaettar

    ikkattil manithar uthavi
    illaamalae attup ponaalum
    enakkoththaasaiyae thinam thappaamalae
    Yesu naamaththil kitaiththidumae

    sollonnnnaa paadukal sakikka
    senta kaalam pelan thanthaarae – enthan
    vaalnaalellaam thaeva siththamellaam
    ennil muttilum niraivaerumae

    um siththam seyya ummaip
    pol maara vallamai thanthidumae
    immattum kaaththa immaanuvaelae
    iniyum nadaththidumae

  • entha kaalathilum entha எந்தக் காலத்திலும் எந்த

    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
      ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த
    2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே
      தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த
    3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
      வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த
    4. வானிலும் நீரே பூவிலும் நீரே
      ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த
    5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
      இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த
    6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
      ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த
    7. ஞானமும் நீரே கானமும் நீரே
      தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த
    8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
      ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த
    9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
      மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த
    10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
      ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த

    entha kaalathilum entha Lyrics in English

    enthak kaalaththilum entha naeraththilum
    nantiyaal ummai naan thuthippaen
    Yesuvae ummai naan thuthippaen thuthippaen
    entha vaelaiyilum thuthippaen

    1. aathiyum neerae anthamum neerae
      jothiyum neerae sonthamum neerae – entha
    2. thaay thanthai neerae thaathaiyum neerae
      thaaparam neerae en thaarakam neerae – entha
    3. vaalvilum neerae thaalvilum neerae
      vaathaiyil neerae paathaiyil neerae – entha
    4. vaanilum neerae poovilum neerae
      aaliyil neerae en aapaththil neerae – entha
    5. thunpa naeraththil inpamum neerae
      innal vaelaiyil en maaridaa naesar – entha
    6. njaana vaiththiyaraam ovshatham neerae
      aathma naesaraam en nannparum neerae – entha
    7. njaanamum neerae kaanamum neerae
      thaanamum neerae en naathanum neerae – entha
    8. aaruthal neerae aathaaram neerae
      aasaiyum neerae en aanantham neerae – entha
    9. meetparum neerae maeypparum neerae
      maenmaiyum neerae en makimaiyum neerae – entha
    10. thaevanum neerae en jeevanum neerae
      raajaraajanaam en sarvamum neerae – entha
  • Enrum Karththaavutan Naan Kuuti என்றும் கர்த்தாவுடன் நான் கூடி

    1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன்
      இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன்
      பற்றாசையால் உம்மை விட்டேன் நான் அலைந்தேன்
      நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன்
    2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான்
      என் ஞானக்கண்கள் காணுமே மின்னும் பொன்னகர் வான்
      தூயதோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே
      என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே
    3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர்
      இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருளுவீர்
      என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன்
      கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன்
    4. என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை
      சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே
      என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன்
      சிம்மாசனத்தின் முன் செல்வேன் என்றும் கர்த்தாவுடன்

    Enrum Karththaavutan Naan Kuuti Lyrics in English

    mutivilaa peruvaalvu

    1. entum karththaavudan naan kooti vaaluvaen
      ivvaakkinaal saakaa varan seththaalum jeevippaen
      pattaாsaiyaal ummai vittaen naan alainthaen
      naatoorum vali nadanthae vinn veettaைk kittuvaen
    2. atho sameepamae pithaavin veeduthaan
      en njaanakkannkal kaanumae minnum ponnakar vaan
      thooyathor suthantharam naan naesikkum naatae
      en aavi maelerusalaem serath thavikkumae
    3. karththaavudan entum pithaavae ingum neer
      ivvaakkai niraivaettavum siththam konndaruluveer
      en pakkam thangitin thappaamalae nirpaen
      kaithookki ennaith thaangitin poraati velluvaen
    4. en jeevan pokum naal kiliyum iththirai
      saavai alippaen saavinaal saakaa uyir pette
      en naatharaik kaannpaen nintu kalippudan
      simmaasanaththin mun selvaen entum karththaavudan
  • Enrum Aanantham என்றும் ஆனந்தம்

    என்றும் ஆனந்தம்
    என் இயேசு தருகிறார்
    துதிப்பேன் துதிப்பேன்
    துதித்துக் கொண்டேயிருப்பேன்
    அல்லேலூயா ஆனந்தமே (2)

    1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
      என்றும் தங்குவேன்
      தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
      என்றே சொல்லுவேன்
    2. தமது சிறகால் என்னை மூடி
      காத்து நடத்துவார்
      அவரது வசனம் ஆவியின் பட்டயம்
      எனது கேடகம்
    3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
      தூதர்கள் எனக்குண்டு
      பாதம் கல்லில் மோதாமல் காத்து
      கரங்களில் ஏந்துவார்
    4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
      நடந்தே செல்லுவேன்
      சாத்தானின் சகல் வலிமையை வெல்ல
      அதிகாரம் எனக்குண்டு
    5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
      எதற்கும் பயமில்லை
      உன்னத தேவன் எனது அடைக்கலம்
      தங்கும் உறைவிடம்
    6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
      என்றும் விடுதலை
      அவரது நாமம் அறிந்த எனக்கு
      அவரே அடைக்கலம்
    7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
      என்றும் பதிலுண்டு
      என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
      என்னை உயர்த்துவார்

    Enrum Aanantham Lyrics in English

    entum aanantham
    en Yesu tharukiraar
    thuthippaen thuthippaen
    thuthiththuk konntaeyiruppaen
    allaelooyaa aananthamae (2)

    1. unnathar maraivil vallavar nilalil
      entum thanguvaen
      thaevanai Nnokki ataikkalap paarai
      ente solluvaen
    2. thamathu sirakaal ennai mooti
      kaaththu nadaththuvaar
      avarathu vasanam aaviyin pattayam
      enathu kaedakam
    3. valikalilellaam ennaik kaakka
      thootharkal enakkunndu
      paatham kallil mothaamal kaaththu
      karangalil aenthuvaar
    4. singaththin maelum paampin maelum
      nadanthae selluvaen
      saaththaanin sakal valimaiyai vella
      athikaaram enakkunndu
    5. iravin payangaram pakalin ampu
      etharkum payamillai
      unnatha thaevan enathu ataikkalam
      thangum uraividam
    6. thaevanaich saarnthu vaalkinta enakku
      entum viduthalai
      avarathu naamam arintha enakku
      avarae ataikkalam
    7. aapaththu naeram kooppidum enakku
      entum pathilunndu
      ennodu irunthu viduthalai koduththu
      ennai uyarththuvaar
  • Enrenrum Jeevippoer என்றென்றும் ஜீவிப்போர்

    1. என்றென்றும் ஜீவிப்போர்
      அதரிசனர்
      எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
      மா மேன்மை மகத்துவர்
      அநாதியோராம்
      சர்வவல்லோர் வென்றோர்
      நாமம் போற்றுவோம்.
    2. ஓய்வோ துரிதமோ இன்றி
      ஒளிபோல்
      ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
      வான் எட்டும் மலைபோல் உம்
      நீதி நிற்கும்
      அன்பு நன்மை பெய்யும்
      உந்தன் மேகமும்.
    3. பேருயிர் சிற்றுயிர்
      ஜீவன் தேவரீர்
      யாவர்க்குள்ளும் உய்வீர்
      மெய்யாம் ஜீவன் நீர்
      மலர் இலைபோல்
      மலர்வோம் செழிப்போம்
      உதிர்வோம் சாவோம்
      நீரோ மாறாதோராம்.
    4. மா மாட்சி பிதா தூய
      ஜோதி தந்தாய்
      தாழுவர் உம் தூதர்
      மா வணக்கமாய்
      துதிப்போம் மகத்தாய்க்
      காணத் தோற்றுவீர்
      கண் கூசும் ஜோதியாம்
      ஜோதி தேவரீர்.

    Enrenrum Jeevippoer Lyrics in English

    1. ententum jeevippor
      atharisanar
      etta oliyilullor sarvanjaanar
      maa maenmai makaththuvar
      anaathiyoraam
      sarvavallor ventor
      naamam pottuvom.
    2. oyvo thurithamo inti
      olipol
      odungaa ponta sakthiyodaalvathaal
      vaan ettum malaipol um
      neethi nirkum
      anpu nanmai peyyum
      unthan maekamum.
    3. paeruyir sittuyir
      jeevan thaevareer
      yaavarkkullum uyveer
      meyyaam jeevan neer
      malar ilaipol
      malarvom selippom
      uthirvom saavom
      neero maaraathoraam.
    4. maa maatchi pithaa thooya
      jothi thanthaay
      thaaluvar um thoothar
      maa vanakkamaay
      thuthippom makaththaayk
      kaanath thottuveer
      kann koosum jothiyaam
      jothi thaevareer.
  • Ennuyire ennuyire en என்னுயிரே என்னுயிரே என்

    என்னுயிரே என்னுயிரே
    என் இதயத்தில் வாழ்பவரே
    பேச்சினிலும் என் மூச்சினிலும்
    நினைவிலும் கலந்தவரே

    நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
    இயேசு இயேசுசென்று சொல்லிடுதே
    ராவிலும் பகலிலும் இருதயமும்
    என் இயேசுவுக்காக துடிக்கிறதே
    உள்ளமெல்லாம் உடலெல்லாம்
    உம் நினைவாய் இருகின்றதே

    எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
    எனக்காகவே மரித்துயிர்த்தீரே
    இந்த செயலாலே என் இருதயத்தை
    உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
    உம் அன்பாலே நான் மயங்கி
    உம்மை நேசிக்க துணிந்தேனே

    இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே – இனி
    நானும் எனக்கு சொந்தமல்ல
    எனதெல்லாமே இனி உம் சொந்தமே
    இதயத்திலேயும் உம்மை தவிர
    வேறு எவருக்கும் இடமில்லையே


    Ennuyire ennuyire en Lyrics in English

    ennuyirae ennuyirae
    en ithayaththil vaalpavarae
    paechchinilum en moochchinilum
    ninaivilum kalanthavarae

    naan vidum moochchum poluthellaam
    Yesu Yesusentu solliduthae
    raavilum pakalilum iruthayamum
    en Yesuvukkaaka thutikkirathae
    ullamellaam udalellaam
    um ninaivaay irukintathae

    enakkaakavae iraththam sinthineerae
    enakkaakavae mariththuyirththeerae
    intha seyalaalae en iruthayaththai
    ummilae parikoduththida seytheerae
    um anpaalae naan mayangi
    ummai naesikka thunninthaenae

    irulaay kidantha thaekamellaam
    thaeva aalayam aakinathae – ini
    naanum enakku sonthamalla
    enathellaamae ini um sonthamae
    ithayaththilaeyum ummai thavira
    vaetru evarukkum idamillaiyae

  • Ennuyirae Kalakkam Kollathae என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2

    கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

    கரையாத அவரன்பு குறையாது – 2

    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2

    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

    துணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2

    தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2

    உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

    உலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2

    என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2


    Ennuyirae Kalakkam Kollathae Lyrics in English

    ennuyirae ennuyirae kalakkam kollaathae

    kaalamellaam kaakkum thaevan unnoduthaan – 2

    kann kaanum selvangal karainthotip ponaalum

    karaiyaatha avaranpu kuraiyaathu – 2

    kannnnaaka ennaalum kaaththiduvaar – 2

    thunpangal vanthaalum thuyarangal soolnthaalum

    thunnaiyaalan irukkintar thikaiyaathae – 2

    thol meethu unaith thaangi nadaththiduvaar – 2

    ulakellaam veruththaalum uravellaam maranthaalum

    ulakaalum mannavan unakkunndu – 2

    ententum than anpil thaettiduvaar – 2

  • Ennoetirum Maa Naesa Karththarae என்னோடிரும் மா நேச கர்த்தரே

    1. என்னோடிரும் மா நேச கர்த்தரே
      வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
      மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
      நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்
    2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்
      இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
      கண் கண்ட யாவும் மாறி வாடிடும்
      மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்
    3. நீர் கூடநின்று அருள் புரியும்
      பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
      என் துணை நீர் என் தஞ்சமாயிரும்
      இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்
    4. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்
      நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்
      சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
      நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்
    5. நான் சாகும் அந்தகார நேரத்தில்
      உம் சிலுவையைக் காட்டும் சாகையில்
      விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்
      வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

    Ennoetirum Maa Naesa Karththarae Lyrics in English
    Yesuvae engal thunnai

    1. ennotirum maa naesa karththarae
      velichcham mangi iruttayitte
      mattaோr sakaayam atta pothilum
      neengaa oththaasai neer ennotirum
    2. neermael kumilipol en aayusum
      immaiyin inpa vaalvum neengidum
      kann kannda yaavum maari vaadidum
      maaraatha karththar neer ennotirum
    3. neer koodanintu arul puriyum
      pisaasin kannnnikku naan thappavum
      en thunnai neer en thanjamaayirum
      ikkattil ellaam neer ennotirum
    4. neer aaseervathiththaal kannnneer vitaen
      neerae ennotirunthaal anjitaen
      saavae engae un koorum jeyamum?
      naan ummaal vella neer ennotirum
    5. naan saakum anthakaara naeraththil
      um siluvaiyaik kaattum saakaiyil
      vinn jothi veesi irul neekkidum
      vaalnaal saangaalilum ennotirum
  • Ennodu Pesum Yesuve என்னோடு பேசும் இயேசுவே

    என்னோடு பேசும் இயேசுவே
    நீர் வந்து பேசாதிருந்தால்
    என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
    என் வாழ்க்கை சிதைந்து போகுமே

    தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
    தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
    நான் உந்தன் குழந்தை அல்லவோ
    என்னோடு பேசமாட்டீரோ ?

    உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
    உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
    அவைகளோடு பேசினீரே
    என்னோடு பேசமாட்டீரோ ?


    Ennodu Pesum Yesuve Lyrics in English

    ennodu paesum Yesuvae
    neer vanthu paesaathirunthaal
    en vaalkkai tholainthupokumae
    en vaalkkai sithainthu pokumae

    thanthai than kulanthai kooda paesaathiruppaaro
    thaayum kulanthai kaetka konjaathiruppaalo
    naan unthan kulanthai allavo
    ennodu paesamaattiro ?

    um vaarththaiyaalae kadal thalaikuninthathu
    um vaarththaiyaalae kaattu thirumpip ponathu
    avaikalodu paesineerae
    ennodu paesamaattiro ?